Friday, October 16, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !


பதிவுபோதை வாசகர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி!

Tuesday, October 6, 2009

அருள்மிகு புவனேஷ்வரி அம்மன்

அருள்மிகு புவனேஷ்வரி அம்மன் கோவில் கரணவாய் என்ற இடத்தில் உள்ளது. ஜாப்னா. ஸ்ரீலங்கா.

இங்கே க்ளிக்கி பார்க்கவும்.

கரணவாய் அருள்மிகு உச்சில் புவனேஷ்வரி அம்மன் கோவில்

Friday, September 25, 2009

பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?

நண்பர் பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?

parisalkaaran.com என்ற தளம், ஏதோவொன்றை காட்டுகிறதே?

கொஞ்சம் அவருக்கு தகவல் கொடுங்களேன்!

கவிதையாய் ஒரு வீடு

முச்சந்தியிலும் ஒரு வீடு
அது வீடற்றவர்க்கு
புறம்போக்கில் பெறுவார்
சிலர் அரசியலினால்
நிம்மதி இருக்காது
சில ரவுடிகளினால்
சில தொந்தரவுகளினால்
மழையில் மிதக்கும்
சில வீடுகள்
படகும் இருக்கும்
சில இடங்களில்!
குளத்தை வாரி சுருட்டினால்
என்ன தான் நடக்கும் ?

நான் இன்னும் மறக்கவில்லை
என் தாத்தா காலத்து வீடு
அருமையான வேலைப்பாடு
அருமையான அறைகள்
காற்றோட்டமான ஜன்னல்கள்
ஒவ்வொரு ஜன்னலும்
ஒரு கதை சொல்லும்
காதலும் உண்டு
எதிர்வீட்டு கன்னியை பார்த்தது!
வீடு எப்படி என்று
யாருக்கு தான் ஆசையில்லை
புறாவிற்கும் இருக்கு வீடு
சரி நிதானம் தவறின் உங்களின்
வீடென்று எதைச் சொல்வீர் ?

Wednesday, September 23, 2009

ஜெயமோகன் எனக்களித்த பதில்

ஜெயமோகன் எனக்களித்த பதில் இங்கே....

இன மத மொழி வெறியர்களை சாடுகிறார்.

***

அன்புள்ள ஜெ

ஒருவரை அடையாளப்படுத்த அவரது மொழி மட்டுமே போதுமானதாக ஆகுமா? இதைப் படியுங்கள்.

http://tamizharkannotam.blogspot.com/2009/08/blog-post.html

நான் பிறப்பால் மராட்டியன் வங்கத்தில் வளாந்தவன். தமிழனாக வாழ்கிறேன். 13 வருடங்களாக. தமிழ்ப்பெண்ணை மணந்துள்ளேன். கர்நாடகத்தில் இருக்கிறேன்

ரமேஷ் டெண்டுல்கர்

அன்புள்ள ரமேஷ்

இந்தவகையான குரல்கள் எங்கும் ஒலிக்கின்றவை. ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் உள்ளே நுழைந்து வெறுப்பை உருவாக்கக் கூடியவை. இவர்களுக்கு வெறுப்பு அன்றி ஏதும் தெரியாது. இந்த மனநிலை எத்தனையோ நாடுகளை அழித்திருக்கிறது. பல கோடி மக்களை அகதிகளாக ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இந்த வெறுப்பு ஓயாது. இதற்கு எதிரான விழிப்புணர்ச்சி கொண்ட மக்கள் தப்புவார்கள். இல்லையேல் அழிவுதான்

இந்த கோரிக்கைகளின் விளைவுகளை எண்ணிப்பாருங்கள். ஒருகோடி தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் தொழில் செய்து வாழ்கிறார்கள். உலகின் இருபது நாடுகளில் தமிழர்கள் குடியேறி வாழ்கிறார்கள்!

இந்த மனநிலையின் மறுபக்கம்தான் ராஜ் தாக்கரேக்கள். மதவெறி கொண்ட அராபியர்கள். இனவெறி கொண்ட சிங்களர்கள். இதை நாம் நிராகரிப்பதென்பது இந்த வெறிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்குச் சமம்.

ஜெ

Tuesday, September 1, 2009

செப்டம்பர் மாதம்

எனக்கு செப்டம்பர் மாதம் என்றாலே குதுகுலம் தான். சாப்பாடு விசயத்தில், கொஞ்சம் பயத்தோடு இருக்கும் சமயம். சளி , காய்ச்சல் வராமல் இருக்க நல்ல விதமாக, அப்பளம், வடாம் இல்லாமல், மசாலாவோடு, இல்லாவிட்டால், குருமா வகைகள் கிடைக்கும், கார சாரமாக... அது தான் உலகம்!

முதன் முதலில் அமேரிக்கா சென்ற போது, ஆறேழு மாதங்கள் கழித்து, கட்டாயமாக, நியூ யார்க்கில் ப்ளு ஷாட் போட்டுக்கொண்டேன். இடுப்பில் சுருக்கென்று ஒரு குத்தல். பங்களாதேஷி டாக்டர் ஒருவர் என நினைக்கிறேன். என்னோடு பெங்காலியில் கஷ்டப்பட்டு பேசினார். ரொம்ப வருடம் முன்பு புலம் பெயர்ந்த குடும்பம்...

இந்த வருடம் நாங்கள் நியூ யார்க் - வாஷிங்க்டன் டி.சி... யு.எஸ்.ஏ. ட்ரிப் போக வேண்டியது, சுவையின் பளுவால் தடைப்பட்டது... குழந்தைகளுக்கு சென்னையே கத்தி என்று ஆனது.

அடுத்த வருடம் அல்லது, வரும் டிசம்பர் லீவில் ( ஸ்நொவொடு விளையாட... ) செல்ல ஏற்பாடு. நண்பி திவ்யா மற்றும் தங்கை குடும்பம் அங்கு இருப்பதால், இந்த முறை நியூ யார்க்கில் கொஞ்சம் தெரிந்தவர்களோடு சுற்றலாம்.

அப்புறம், இந்த செப்டம்பர் மாதம், ரியல் எஸ்டேட் பிசினஸ் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். சென்ற ஒரு வருடம் முழுதும் சம்பாத்தியம் பூஜ்யம். எதோ ஓடியது... ஆனால் பெங்களூர் காண்டேக்ட்ஸ் அதிகம் பெற்றேன். ஆனால் விலை தான் குறைக்கமாட்டேன் என்கிறார்கள்.

ஒரு பெரிய ஐ.டி. நிறுவனர் குடும்ப கல்யாண விஷேசத்திற்கு நண்பர்களோடு ஹோட்டல் அசோக் சென்றேன். சாப்பாடு படு மட்டம்! எவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்? எல்லோரும் திட்டி சென்றார்கள்... பெருமைக்கு எதோ தின்ற மாதிரி... வந்தவர்களுக்கெல்லாம் அவர் எழுதிய புத்தகம் கொடுத்திருக்கலாம்... தாம்பூலம் என்று நிறைய யூஸ் பண்ணாத பொருட்கள்!

அர்த்த ராத்திரியில் குடை பிடித்தவர்களின் நிலை தான் ஞாபகம் வந்தது.

Monday, August 3, 2009

நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்!

சரி நண்பர்கள் தினம் ஏன்?

அமேரிக்கா நாகரீகம்...[GoldenDeer.JPG]

அவர்கள் வேளை தொழில் என்று ஓடியாடி இருப்பார்கள். குடும்பம் உறவு, நண்பர்கள் என்பதை நினைவில் கொள்ள ஒரு தினம்... ( தேடி ஓடும் மாய மான் இல்லை! )

அப்பாக்கள் தினம், அம்மாக்கள் தினம், மகளிர் தினம்... இப்படி பல.

நேற்று ஜி ஸ்டுடியோவில் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்ற படம் ஸ்பெசல் நண்பர்கள் தினத்திற்காக. ( காதல் வெல்லும் பார்மூலா தான் )

Saturday, August 1, 2009

இண்டரெஸ்டிங் ப்ளாக் பெண்கள் பதிவுகள்


என்னுடைய அடுத்த விருது பெண்கள் பதிவுகள் என்ற ப்ளாகிற்கு, பெண்கள் பதிவுகள் பற்றி விவரம் தரும் பதிவு! ஆனந்த விகடனில் கூட வந்தது. வாழ்த்துக்கள்!

நண்பர் வினிதா எழுதுகிறார்கள்.

அவர் மேலும் நல் தருணங்கள் மற்றும் Vinitha in my own words என்ற பதிவுகளையும் எழுதுறாங்க.

படித்து பயன் பெறுங்கள்!

இண்டரெஸ்டிங் ப்ளாக் விஜயஷங்கர்


நண்பர் விஜயஷங்கர் எழுதும் ப்ளாகிற்கு இண்டரெஸ்டிங் ப்ளாக் விருது கொடுக்கிறேன்.

அவர் தான் என்னையும் பதிவு உலகிற்கு அழைத்து வந்தார். இன்னும் பலரை ப்ளாக் உலகிற்கு அழைக்கிறார். கடைசியாக சுந்தரவடிவேலு.

நிறைய சப்ஜெக்ட்ஸ் எழுதுகிறார். இங்கலிஷ் மற்றும் தமிழில். பல்வேறு துறைகளில் ஆழ்ந்து எழுதுகிறார்.

படியுங்கள், என்ஜாய் செய்யுங்கள்.

வாழ்த்துக்கள்!

Friday, July 24, 2009

தொடர் கதையா தொடர் கட்டுரையா

பா.ராகவனின் இந்த தொடர்கதை பத்தி படித்தேன்....

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15

தொடர் கதையா தொடர் கட்டுரையா என்ற கேள்விக்கு என் கமென்ட் கிழே...

http://www.blog.sanjaigandhi.com/2009/07/blog-post.html

மேலே உள்ள உதாரணம் பாருங்கள். அடுத்த பார்ட் எப்போ வரும் என நான் வெயிடிங்.

தொடர் கட்டுரைகள் தான் இந்த காலத்திற்கு உதவும். இணையத்தின் வித்தகம்.

***

வாசந்தியின் கதை - விகடனில் நன்றாக இருந்தது!

ஸ்டெல்லா ப்ருஸ் எழுதிய இன்னொரு தொடர் இன்னும் வேண்டும் என இருந்தது.

சுஜாதா மாதிரி வராது!

அப்புசாமி கதைகள் இன்னும் அருமை...

ராமராஜனின் ஒரு பாட்டு



ராமராஜனின் ஒரு பாட்டு, ட்விட்டரில் யாரோ ஒருவர் லிங்க் போட்டுருந்தார்.

Wednesday, July 22, 2009

சூரிய கிரகணம்

இன்று சூரிய கிரகணம் இந்தியாவில் சரியாக தெரியவில்லை என்றார்கள் டிவியில்.
(தினமலரில் வந்த புகைப்படம்... நன்றி... )

என் வாழ்க்கையில் இன்னுமொரு நாள் வந்தது... இப்போ பாதி நேரம் போனது...

ஆனால் இது ஒரு அற்புத நிகழ்வு கொடுத்த நாள்... இறைவனின் ( டிவையின் ) எனர்ஜி வந்த நாள்... சந்தோசமான நாள்...

குழந்தைகளுக்கு இந்தூர் பள்ளி ஒரு மணி நேரம் லேட்டாக தான் செல்ல வேண்டும் என்பதால் எனக்கு சில பூஜைகள் செய்ய வசதி.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து, பூஜா ரூமில் என் குரு படம் முன் அமர்ந்து மூல மந்திரத்தை 1008 முறை சொன்னேன். நல்லா மன அமைதி. நிறைய டிவையின் எனர்ஜி கிடைத்த சந்தோசம்.

இன்று மந்திர உச்சாடனை சொல்வது, ஒரு முறை சொன்னால் ஆயிரம் முறை சொல்வதற்கு சமம்... ஆயிரம் முறை சொன்னால் ஒரு கோடி முறை சொன்னதற்கு சமம்... மன அமைதி வேண்டுவோர், வரம் வேண்டுவோர் செய்ய வேண்டியது இது. நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டும் தான்! (வாரம் அல்லது மாதம் ஒரு முறை செய்யலாம்... )

***

பிறகு குளித்து விட்டு, சூடான இட்லி சாம்பார்!

மனைவி டிபன் எல்லாம் செய்து வைத்து விட்டு தான் வேலைக்கு பறந்துவிட்டார். .டி.கம்பெனியில் கிரகணமாவது ஒன்றாவது!

குழந்தைகளுக்கு இன்று ஒரு மணி நேரம் அதிகம் டிவி பார்க்க கிடைத்தால் முகத்தில் ஒரே பிரகாசம்! சில பள்ளிகள் இன்று விடுமுறை!

ஒவ்வொரு நாளும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

Thursday, July 2, 2009

ஒரு போட்டி கதை: கவிதைக்கு ஒரு கதை

நண்பர் விஜயஷங்கர் எழுதிய கவிதைக்கு ஒரு கதை கதை படித்தேன்.. எதிர்பார்ப்புகள் நிறைந்த, விறுவிறுப்பான ஓட்டம். நிறைவு, ஒரு ட்விஸ்ட். சுஜாதா ஸ்டைல்.

//சுபா தான் அருணா// சஸ்பென்சை அப்படியே வைத்திருக்கலாம், ஒரு டையெலாகை நீக்கிவிட்டால்...

இந்த கதையை நிச்சயம் சினிமாவாக எடுக்கலாம். நான் ஸ்க்ரீன்ப்ளே எழுத ரெடி. ஒரு ப்ரொடுஸர் மற்றும் பெயர் பெற்ற கதாநாயகன் தேவை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

***

நானும் அப்புறமா கலந்துக்கொள்கிறேன். டைம் கிடைக்கணும்!

Tuesday, June 30, 2009

என் பெயர் மைகேல் ஜேக்சன்

என் பெயர் மைகேல் ஜேக்சன்... இது என் இறுதி யாத்திரை பற்றி அல்ல...

ஐம்பது வருடம் உலகில் வாழ்ந்தேன், அது தனி கதை... அதை எழுதி எழுதி வாழ்ந்தவர் பல கோடி!

இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள், மத மாற்றம், பல கோடி டாலர்கள் கடன், வேண்டாத நட்பு என போனது என் வாழ்க்கை. என்னை பற்றி என் இறுதி ஊர்வலத்தில் தான் மக்கள் பேசுவதை வைத்து உங்களுக்கு தெரியும்.

நான் இப்போ உலகில் இல்லை. என்னுடைய அடுத்த கிரக விசிட்டுக்கு மார்ஸ் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறேன். நான் தான் உலகின் உயரிய ஆத்மாவாம். எல்லோரையும் மகிழ்வித்த ஒரு மிக பெரிய என்டேர்டைனர் அல்லவா? எல்லோரும் சந்தோசப்பட்டுவிட்ட காரணத்தினால், என் பூமி பயணம் முடிந்தது!

எனது பதினான்காவது வயதில் எம்.டி.வியில் முதல் வாய்ப்பு. கருப்பனாக இருந்தாலும், வெள்ளைக்காரன் டிவியில் தோன்றியது, கடவுள் கொடுத்த அருள்!

சில வருடங்கள் முன் ஹிந்து மதத்தில் ஜாம்பவானாக இருக்கும் பால் தாக்கரே கேட்டதற்கிணங்க இந்திய வந்து மும்பையில் கச்சேரிகள் செய்தேன்!

அதன் பிறகு, அனைத்து முஸ்லீம் நாடுகளும் என்னை தேடி தேடி அழைத்து கொண்டாடியது!

எம்மதமும் சம்மதம்... உயர்வு தாழ்வு இல்லை, இந்த ஆத்மாவிற்கு!

...இப்போவாவது தெரிகிறதா நான் எப்பேர்பட்ட ஆத்மா என்று?

****

அன்றொரு நாள் நான் தீபக் ஸோப்ராவிடம் பேசும் போது ஒரு விஷயம் புலப்பட்டது. நானும் மிக தெளிவடைதேன்! மனித உயிர் மில்கி வி கேலக்சியில் ஒன்பது முறை வாழும் என்று. தீபக் யாரென்றால், எம்.பி.பி.எஸ் படித்த இந்தியர். அமேரிக்காவில் எம்.டி. படித்துவிட்டு தியான, ஸ்பிரிஸுவல் முறையில் மன அமைதி வழங்கும் காஸ்ட்லி குரு. மனிதன் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த மாதிரி ஆட்களோடு பழக வேண்டிய கட்டாயம் நிறைய உண்டு. கடன் வாங்கியாவது அவர் கேட்கும் காசை கொடுத்துவிட வேண்டும்! எல்லாம் புகழ் போதை. என்ன செய்வது? நான் உணவு கூட உண்பதில்லை வெறும் மாத்திரைகள் தான் என் சக்தி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், இப்போது!

உங்கள் இந்தியாவில் கூட ஹாலிவூட் படத்தில் நடித்த சிறு பிள்ளைகள் கூட, சேரியில் வாழ்ந்து வீடு இடிக்கப்பட்டாலும், அரசியல்வாதிகள் மரியாதையோடு அவர்களுக்கு வீடு கொடுக்கிறார்கள். எப்படி சில உயரிய ஆத்மாக்கள் பெருமை பெறுகின்றன என்பது புரிகிறதா?

இப்படி பெருமையடைந்த ஆத்மாக்கள் மேலும் கீழும் பயணிப்பதால் தான், விமானங்கள் இப்போது விழுகின்றன. நீங்களும் இரண்டு விமானங்கள் விழுந்த விஷயம் படித்திருப்பீர்கள் இல்லையா? அதில் ஒன்றிரண்டு உயரிய ஆத்மாக்கள் பூமியால் வாழ விருப்பபட்டால், உடல் இறக்காது! ஒரு சிறு குழந்தை ஆத்மா அப்படி தப்பியது உங்களுக்கு தெரிந்திருக்கும்! இப்போதாவது தீபக்கை நம்புகிறீர்களா?

அப்புறம் இன்னொரு விஷயம், என்னை பற்றி வரும் வேறு எந்த செய்தியும் நம்பாதீர்கள்! என்னை மட்டுமே கேட்டு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.

சரி நான் ஏன் மார்ஸுக்கு போகிறேன்?

மனித உயிர் முதலில் தோன்றியது எங்கே தெரியுமா, சூரியனில் தான். கடவுள் இருக்கும் பவர் சென்டர். அங்கிருந்த உயிர் ஆத்மாக்கள் தான் சுழன்று சுழன்று பிறந்து இறந்து வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கோளாக!

மெர்குரி தோன்றியதும், எல்லா ஆத்மாக்களும் அங்கு குடிபெயர்ந்துவிட்டது! அங்கு வாழ்க்கை முடிந்தவுடன், வீனஸ் கிரகத்திற்கு போய் மீண்டும் அத்தனை ஆத்மாக்களும் அமர்ந்தன.

வீனஸ் வாழ்க்கை போரடித்த பின், பூமிக்கு வந்து விட்டன... ஆத்மாக்கள்... பல வித மாற்றங்கள், எவலுசன் எல்லாம் ஆத்மாக்களின் விளையாட்டுக்கள்!

சரி சரி ஒரு சின்ன சீக்ரட் சொல்லுகிறேன், எஜிப்டில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆத்மாக்கள் பூமியை விட்டு வேறு இடத்திற்கு செல்ல விவரம் கண்டுபிடித்துவிட்டார்கள்... பிரமிடெல்லாம் எதற்காம்? ப்ளைடுக்கள் எல்லாம் ஜுஜுபி!

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பூமி ஆத்மாக்களால், சூடாகிகொண்டிருக்கின்றன. இன்னும் மார்ஸ் சரியாக காலம் பாக்கி உள்ளது. சில ஆத்மாக்கள் மட்டும் அங்கு சென்று செட்டில் ஆன பிறகு தான், மற்றவர்கள் எல்லாம் அங்கு அழைத்துச்செல்ல முடியும். அது தாங்க சொர்க்கம்! ஒவ்வொரு குருவும் காசு பண்ணும் விஷயம், மதங்களும் சுட்டி காட்டும் கடைசி பயணம்! நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்புகிறேன் அவ்வளவு தான்.

நீங்கள் அங்கு நாஸா படம் பிடித்த பெண்ணை பார்த்திருப்பீர்கள். என் குரு தீபக் சொன்ன மாதிரி, உலகில் வாழ்ந்து பெருமை அடைந்துவிட்டேன். அதானால் நான் மார்சுக்கு அவர் கொடுத்து எட்டு வகை மருந்து அருந்தி, பயணம் ஆரம்பித்து உள்ளேன்.

இது தான் தீபக் சொன்ன விவரமும் நான் எடுத்த முடிவும். சரி தானே?

தவறான வழியில் ஹாலிஸ் காமட் மூலம், மார்ஸுக்கு போக முயற்சி செய்த கலிபோர்னியா ஆத்மாக்கள் சிலர் பற்றி நீங்கள் சில வருடங்கள முன் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் மட்டும் இப்போது அங்கு சென்று வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்!

மறக்க வேண்டாம், ஆத்மா தான் பெரியது. மார்ஸ், ஜூபிடர், சாடேர்ன், யுரேனஸ், ப்ளூடோ என மாறி மாறி செட்டில் ஆகி, இந்த மில்கி வேவில் வாழ்க்கை முடித்து விட்டு வேறு கேலக்சிக்கு பயணம் ஆரம்பிக்கும்!

சந்தோஷம் தானே? நீங்களும் வரீங்களா?

ஓம்! ஆமென்!

*******

உரையாடல் போட்டிக்கு எழுதிய கதை. முற்றிலும் புனைவே, ஆட்கள், ஆத்மாக்கள், பெயர், இடம், ஊர், கோள்கள், கேலக்சி எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த கற்பனையே!

*******

You can read related competition stories here...

Friday, June 26, 2009

மைகேல் ஜேக்சனும் மன அமைதியும்

சிறிது காலம் முன், கடன் தொல்லையால் அவதிப்பட்ட மைகேல் ஜேக்சனும் மன அமைதியும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். முஸ்லிமாக மதம் மாறினார் என்று கூட ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். பெயரை கூட மிகாயீல் என்று மாற்றினாராம்!


michael jackson burka
ஐம்பது வயதிற்குள் இறந்து விட்டார். அமேரிக்கா நாகரிகம் போல, என்பது வயது நிச்சயம் என்ற அளவில் தான் இருந்தார் - அதுவும், கச்சிதமான எடை அளவு ( என்னை மாதிரி குண்டர்களுக்கு தான் இது பற்றிய அவஸ்தை தெரியும்! ) கொண்டு எப்போதும் ட்ரிம்மாக வாழ்ந்தார்....

அவர் நடன அசைவுகள், பெண்களை ( ஏன் ஆண்களை கூடத்தான் ) வெறுக்க வைக்கும் அளவு , தேய்த்துக்கொள்ளும் முறையில் இருக்கும்! என் குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு இது வரை நான் அது ஸ்டையில் , நீங்க பண்ணாதீங்கோ என்று தான் கூறி வருகிறேன்.

மைக்கேல் ஜேக்சன் குழந்தைகளை துன்புறுத்தியதாக நிறைய வதந்திகள். சில காலம் முன் காசு கொடுத்து 8, 14 வயது பயன்களின் கேசை வாபஸ் பெற்றார்!

மைக்கேல் ஜேக்சன் இறந்த நியூஸ் பார்த்து எனக்கு என்னை அறியாமல் ஒரு பரிதாபம் வந்தது.

எப்படி இருந்த அவர், எப்படி ஆகிவிட்டார்!

கடைசி காலத்தில் நிறைய பேர், அதுவும், குருக்கள் மோடிவேசன் செய்கிறேன் என்ற வகையில்... டோனி ராபின்ஸ், தீபக் சோப்ரா போன்றோர், மில்லியன்களாக கறந்து அள்ளியுள்ளனர்! பக்ரையின் இளவரசரிடம் வாங்கிய ஏழு மில்லியன் ( என்ன பரிசு அது? ) டாலர்களை, கடன் அடைக்க மற்றும் குருமார்களுக்கு நன்கொடை அளித்துள்ளார்.

அப்புறம் எம்.சி.ஹேமர் என்ற ஒரு பாடகர் / டேன்சர் இருந்தார். அவர் தான் மைக்கேல் ஜேக்சன் டேன்ஸ் பழக காரணம் என்று சொல்லப்படுகிறது. போட்டி வேறு நடத்தலாம் என்று இருந்தார்களாம் ( 1992 )... வேலைக்கு சேர்ந்த புதிது, அமேரிக்கா சென்ற சமயம், நியூ யார்க்கில் பேட்டரி பார்க் அருகில் எல்லோரும் மைக்கேல் ஜேக்சன் ஸ்டெப்ஸ் தான் போடுவார்கள்.... ( கருப்பு இனத்தவர்கள்... ) நானும் மூன் வாக் முயற்சி செய்துள்ளேன். முடியலே!

அவர் "அமர ரஹே!".

இன்று விஜய் டிவியில் - இந்தியாவின் மைக்கேல் ஜேக்சன் - லைவ்வாக ஒரு ப்ரோக்ராம் செய்கிறார். " யார் அடுத்த பிரபு தேவா?" ...

சரி யார் அடுத்த மைக்கேல் ஜேக்சன்?

Wednesday, June 24, 2009

பதிவர் லதானந்திற்கு

பதிவர் லதானந்திற்கு...

என்ற பதிவில் நர்சிம்மின் ஆதங்கம் புரிகிறது. லதானந்த், எழுதியதை வேறு அப்படியே குறிப்பிட்டுள்ளார்!

என்ன செய்வது?

அவரவர் வியு!

என்னை பொறுத்த வரை, லதானந்த், அவராக வேண்டுமென்றே நினைத்து எழுதியிருக்கமாட்டார்.

Just a coincidence?

ஒரு போன் கால் போதுமே...

***
சம்பந்தப்பட்ட பதிவு "ட்ரக்கிங்"

Thursday, June 18, 2009

வாழ்க்கை

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.

97 வயது மகிழ்ச்சி

மிகவும், அருமையான பதிவு!

நன்றி...

நாட்குறிப்பை ஒரு கதை செய்தால்

இன்று காலை எதேச்சையாக, நண்பர் ஒருவர் ட்விட் மூலம் ஒரு கதை படித்தேன்.

பெனாத்தல் சுரேஷ் என்பவர் எழுதிய "நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு"

நான் இட்ட கமன்ட்..

இது நிஜ வாழ்க்கையில் நடந்திட்ட ஒரு புனைவு. உங்கள் அலுவலகம்? அதில் என்ன கதை? காண்டீன் வேலைக்காரர்களின், சிறு குணாதிசயம்! அதை அப்படியே உங்கள் வேலை ( வாழ்க்கையிலும் ) ஜூம் பிட். அவரவர் லெவல் அப்படி! ;-)

அரசாங்கத்தில் வேலை பார்த்த சமயம், பிஸ்கட் இல்லாவிட்டால், வரும் வரை டீ குடிக்காமல் அரட்டை அடித்த சக சீனியர் ஆபிசர்களை நினைத்தால், இந்தியாவின் நிலையை எண்ணி கண்களில் செந்நீர் தான் வருகிறது!

ப்ரைவேட் தொழில் மிக நன்று. வேலை செய்தால் பணி. இல்லாவிட்டால் பிணி.

வேலை இல்லாமல் வாடும் நெருங்கிய நண்பர்கள் ( சம்பாரித்து வைத்திருப்பதை சாப்பிட்டு வாழ்ந்தாலும் ) பார்த்தால் யாரை பார்த்து கோபப்படுவது என்று தெரியவில்லை!

Wednesday, June 3, 2009

உலகின் விலை அதிகமான உணவு

உங்களுக்கு தெரியுமா, உலகின் விலை அதிகமான உணவு எது?

Lobster + Caviar + Snails + Gold = World's most expensive curry

இது தான்...

இங்கே பாருங்கள் லாப்ஸ்டர் + காவியார் + ஸ்நயில்ஸ் + தங்கம்

விலை ரொம்ப குறைவு - ஜஸ்ட் 2000 பவுண்ட்ஸ். ரூ. 1, 60, 000/-

******

எங்க குடும்பத்துக்கு இரண்டு வருடம் மளிகை சாமானம் வாங்கலாம்...

அனானிமஸ் கமன்ட்டர்கள்

சிறிது நேரத்திற்கு முன் எனது நண்பி/தோழி/க்ளாஸ்மேட் திவ்யாவுடன் ( ஆம், இப்போது இந்தியாவில் இருக்கிறார்! ) பேசிக்கொண்டு இருந்தேன்.

எப்படி சில "அனானிமஸ் கமன்ட்டர்கள்" மக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.

இங்கே பாருங்கள்... பெங்களூரில் நான்

யாரோ ஒருவர், அவர் தந்தையார் பெயரில் எழுதி வரும் தமிழ் ப்ளாகில், ஒரு அனானிமஸ் கம்பட்டார் கிண்டலாக திவ்யாவின் ப்ளாகை எழுதுவதும் அவர் தான் என்ற கிண்டல் தொனியில் எழுதிவிட்டார். அதற்காக அந்த நபர், "சிறு விஷயம்" தெளிவுப்படுத்த திவ்யாவை, அவர் ப்ளாக்கில் கமன்ட் இட கேட்டுக்கொண்டார். திவ்யாவும், "நான் அவரில்லை, அவள்" என்று விவரம் சொல்லி ஒரு கமன்ட் போட்டார்.

அதன் பிறகு, அதே அனானிமஸ் கமன்ட்டார், மிகவும் கொச்சைபடுத்தி திவ்யாவை விமர்சனம் செய்துள்ளார். தேவையற்றது அது.

இப்போது அது சீரியசான ரூட்டில் போய்க்கொண்டு உள்ளது. யார் அந்த அனானிமஸ் கமன்ட்டார் என்று "ஐ.பி. அட்ரெஸ்" வைத்து கண்டுபிடித்து தக்க சன்மானம் வழங்க போகிறார்கள்.

எதற்கு இதை நான் எழுதுகிறேன்?

இந்த ப்லோக்கிலேயே நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்த தொந்தரவு இருந்தது. சிலர் மிரட்டல் தொனியிலும், சிலர் மிகவும் என் இனத்தை குறிப்பிட்டு கேவலமாகவும் எழுதினார்கள் ( அதுவும், மேல் ஜாதி என்று நம்பிக்கொண்டு இருக்கும் சிலர் அடித்த கூத்து சொல்லி மாளாது ).

ஆனால், கமன்ட் மாடரேசன் இருந்ததால், தான் ஒழுங்கானவற்றை மட்டும் பிரசுரித்தேன். இப்போது பார்த்தாலும், ஐ.டி. ஆக்ட் பற்றி குறிப்பிட்டு உள்ளேன்.

ஆகவே, நண்பர்களே நிங்கள் தயவாய், உங்கள் ப்ளாகில் கமன்ட்களை மாடரேசன் செய்யவும்.

ஒழுங்கானவற்றை அனுமதித்தால், சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகாது. நன்றிகள்.

Thursday, May 28, 2009

பிச்சையும் காசும்

பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!

********

இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்... சம்பந்தமில்லை... ;-)

Monday, May 25, 2009

கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது

கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது - ஐலா தான் அதன் பெயர்.

ஆனாலும் ஒன்பது பேர் இதுவரை காணவில்லை, இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

அனைத்து ப்ளைட்டுக்களும், கேன்சல். ட்ரெயின்கள் ஆங்காங்கே நின்றுள்ளன!

லெப்டு ஆட்களுக்கு வந்தது வினை.

ஆர்மி உதவி கேட்டுள்ளார் புதா.

************

ட்ரெயின்கள் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சென்று சேரும். என் நபர்கள், சென்னையில் இருந்து செல்பவர்கள், இப்போது பாலசோரில் இருந்து டாக்சி வைத்து செல்கிறார்கள். காலை சென்று சேர வேண்டியவர்கள், இரவாகிவிடும். கடும் மழை.

என்ன செய்ய? இது ஒரு மழைக்காலம்.

Sunday, May 24, 2009

மந்திரிகள் முடிவு

தி.மு. குடும்பம் தான் கட்சி அரசியல், எல்லாம். என்ன செய்வது, தமிழ்நாட்டுக்கு விதி அப்படி. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் செய்தது சரி என்றே தோன்றுது!

பேரம் பேசுவதற்கு சென்ற கூட்டம் டிவியில் பார்த்தேன். டி.ஆர்.பாலு இல்லை! அய்யோ பாவம்!

அவர்கள் குடும்பம் என்ன செய்ய போகிறது. காசை அள்ளுவார்கள். பாவம் தயாநிதி மாறன், டெக்ஸ்டைல்ஸ் துறையாம்... கிளிஞ்சது... நல்லது செய்வார் என நம்புகிறேன்! கனிமொழி பெண்களுக்கு ஏற்ற துறை. நிறைய டிவியில் பேச வேண்டும். நன்றாக செய்வார். மீண்டும் ராஜா .டி. மற்றும் தொலை தொடர்பு துறை - வேலை ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தலைவருக்கு தோல் கொடுக்க வேண்டும். என்ன இந்த 3G பிசின்ஸ்ஸை கொல்லுவார். எல்லாம் டிலே ஆகும், கம்மி விலைக்கு கம்பெனிகளுக்கு கொடுத்து, மார்க்கெட் ரெட் வித்தியாசம் ஆளுக்கு பாதி. ஒரு லட்சம் கோடி அனைவரும் சேர்ந்து அடித்தார்கள்.. ஜெயலலிதாவிற்கு மீண்டும் அட்டேக் செய்ய வாய்ப்பு.

பாவம் டி.ஆர். பாலு , தலைவர் குடும்பத்திற்கு உழைத்தது வீண். இப்போ துணை சபாநாயகர். என்ன ஆகும்? ஐந்து வருடம் வேஸ்டா? அதிலும் எதாவது லாபம் இருக்கும். மரியாதையான போஸ்ட்.

சரி இன்னும் மூன்று லக்கி ஆட்கள் யார் யார்? பழனிமாணிக்கம் - கலைஜர் ஆள். அப்புறம் ஜெகத்ரட்சகன், ஜாதி புது கட்சி செய்வார், மீண்டும் வந்துவிட்டார்... இன்னும் ஹெலன் டேவிட்சன் - சுற்றுலாத்துறைக்கு ஒரு துணை பதவி. பேசுவார்களா?

தமிழகத்தில் இருந்து ஒரு முஸ்லீம் கூட ஆட்சிக்கட்டிலில் இல்லையா?

தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுப்பார்களா? சம உரிமை அங்கு எப்போதும் வேண்டும்!

Friday, May 22, 2009

ஆட்சிக்கு பார்முலா, குடும்பம், பதவி, யு.பி.ஏ.

இப்போது யு.பி.ஏ. அரசு இரண்டாம் முறை பதவி ஏற்க உள்ளது, சயந்திரம் ஆறரை மணிக்கு.

ஆட்சிக்கு பார்முலா , யு.பி.ஏ., குடும்பம், பதவி என போகிறது ஆச்சி கப்பல்.

சென்ற ௨00௪ சமயம், வகுத்த பார்முலா இது -

ஆறு எம்.பிக்கு ஒரு கேபினட். மொத்தம் முப்பது கேபினட் அமைச்சர்கள் இருந்தார்கள். ( இதில் ஏழு ராஜ்ய சபா உறுப்பினர்கள் )

மூன்று எம்.பிக்கு ஒரு மினிஸ்டர் ஆப ஸ்டேட். மொத்தம் முப்பத்தி ஏழு கேபினட் அமைச்சர்கள் இருந்தார்கள். ( இதில் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்கள் )

ஆக, காங்கிரஸ் 147 எம்பிக்களுடன், மொத்தம் முப்பது அமைச்சர்கள் வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சிதம்பரம், வாசன், தங்கவேலு, இளங்கோவன் என தலைவர்கள்...

தி.மு.க 16 எம்.பிக்களுடன் , மொத்தம் ஏழு அமைச்சர்கள் வைத்திருந்தார்கள். பார்முலா 3 + 4 ! ( 3 + 5 என்பதை, பா.ம.கவிற்காக 1 விட்டு கொடுத்தார்கள் ).

அப்புறம் உங்களுக்கு தெரியும் ஆட்சியில் அமர்ந்த மைனாரிடி அரசுக்கு ஆதரவு எம்.பிக்கள் மொத்தம் 221, மற்றும் 61 லேப்ட் எம்.பிக்கள் வெளியில் இருந்து ஆதரவு.

**********

சரி இப்போது என்ன நடக்கிறது?

மன்மோகன் சிங் அரசு இப்போது வைத்திருக்கும் ஆதரவு -

காங்கிரஸ் 206 எம்பிக்களுடன், மொத்தம் அமைச்சர்கள் நாற்பது வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்!

திரிணமூல் காங்கிரஸ் 20 எம்.பிக்களுடன் மொத்தம் ஏழு அமைச்சர்கள் எதிர்ப்பர்ர்கிறார்கள். ரயில்வே அமைச்சர் பதவி மமதாவிர்க்கு. பெண்களுக்கு சந்து போனதெல்லாம் ரயில்கள் ஓடும். பெங்காலிகள் நிறைய பேர் ரயில்வே அமைச்சரால் வேலை பெறுவார்கள்.

தி.மு.காவும் பதினெட்டு எம்.பிக்களுடன் மொத்தம் எட்டு அமைச்சர்கள் ( 4 + 4 பார்முலா ) எதிர்பார்கிறார்கள், அவர்கள் கேட்க்கும் இலாக்ககளுடன். சுகாதாரம் ( ஹெல்த் ) கனிமொழி, இண்டஸ்ட்ரிஸ் அ.ராஜா , ஐ.டி. & டெலிகாம் தயாநிதி, ஷிப்பிங் & சர்பேஸ் டிரான்ஸ்போர்ட் பாலு, ஸ்டீல் & கெமிக்கல்ஸ் அழகிரி ஆகியோர் கேபினட் மந்திரிகள், அப்புறம் பவெர், ரயில்வேஸ், பைனான்ஸ், டூரிசம், மற்றும் என்வைரன்மேன்ட் இலாக்காகளில் நான்கு மினிஸ்டர் ஆப ஸ்டேட் என கேட்கிறார்கள். பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் ஹெலன் டேவிட்சன் ஆகியோருக்கு வாய்ப்பு.

காங்கிரஸ் சொன்ன அயிட்டங்கள் ( அது தாங்க, இலாக்கா ) தி.மு.கவிற்கு பிடிக்கவில்லை. குடும்பம் ( அழகிரி, கனிமொழி மற்றும் தயாநிதி ) மந்திரிசபையில் உட்கார கூடாது என்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் காங்கிரஸ் கட்சியை குடும்பம் வைத்து நடத்துவார்கள். என்.சி.பி தலைவர் மகள் சுப்ரியாவை ராஜ்ய சபை எம்.பி ஆக்கினார். அப்புறம் இப்போது லோக் சபை எம்.பி செய்துவிட்டார், மந்திரி ஆக்குவார்!

டி.ஆர.பாலு மற்றும் ஆ.ராஜா ( லட்சம் கோடிகள் மேல் ஊழல் என்கிறார்கள்! ) அமைச்சரவையில் உட்கார மன்மோகன் சிங் விரும்பவில்லை. மிஸ்டர் க்ளீன் அவர்! இன்னொரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்! திருந்துவார்களா?

தி.மு.கா இல்லாவிட்டால் அ.தி.மு.க அமைச்சரவையில் பங்கு பெரும். மைத்ரேயன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். தமிழ்நாட்டில் தி.மு.க அரசு டிஸ்மிஸ். இருக்கும் ஒன்பது அமைச்சர்கள் வைத்து, இரண்டு கேபினட், இரண்டு மினிஸ்டர் ஆப ஸ்டேட் வேண்டும் என்கிறார்கள். ராகுல் காந்திக்கு ஆங்கிலம் பேசும் தலைவர்கள் என்றால் தான் பிடிக்கும்!

சரி கருணாநிதி கேட்பதில் என்ன தவறு?

Tuesday, May 19, 2009

ஒரு வடநாட்டு மகன்

அரவிந்த் என்பவரின் கமன்ட் ஒரு ப்ளாகில் ஸூபர்!

//மும்பையில் ஒரு வடநாட்டு தே மகன் இந்த செய்தியை பார்த்து விட்டு ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான்

நான் கேட்டேன் உன் வீட்டில் நுழைந்து உன் அம்மா தங்கை கையை பிடித்து ஒருவன் இழுத்தால் நீ புலியாக மாறுவாயா அல்லது பூனையாக மாறுவாயா

அவன் பதிலே சொல்லவில்லை

இந்த வதந்திகளை பரப்பும் எல்லோரும் இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள்

மானமுள்ள தமிழர்கள் அந்த சமயத்தில் எப்படி மாறுவார்கள் எப்படி மாறினார்கள் என்று இந்த சரித்திரம் பேசும்

பிரபாகரனை காட்டி கொடுத்த மற்றும் தன் சொந்த தாயை கூட்டி கொடுத்த துரோகி கருணா இன்னும் சில நாட்களில் கொல்ல படுவான் (அவன் கூட்டு சேர்ந்த சிங்கள நாய்களால்)

ஒரு தீவில் பிரபாகரன் என்ற ஒரு மக்களின் தலைவர் இருந்தார் . ஆனால் அதே தீவை சேர்ந்த பலருக்கு அவர் என்றல் ரொம்பவே பயம் முக்கியமாக இருவருக்கு அவர்கள் (சரத் பொன்சேகா மட்டும் மகிந்த ராஜபக்சே ) ரொம்ப ரொம்ப பயம் மட்டும் இல்லாது அவரை பிடிக்கவே பிடிக்காது .

ஆனால் வாய் பேச்சில் வல்லவர்கள் .

இருவரும் ஒருநாள் சாப்பிட்ட உணவே செரிக்காததால் காட்டு பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள் .

அப்போது அந்த பக்கம் பிரபாகரன் வந்தவுடன் பதறி போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டார்கள் .

பிரபாகரன் சென்ற பிறகு

சரத் பொன்சேகா : நீங்க ரொம்ப பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லவே இல்லை

சரத் பொன்சேகா : சும்மா சொல்லுங்க பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லை நான் பயப்படவே இல்லை

சரத் பொன்சேகா : யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் எனக்கு தெரியும் நீங்க பயந்துட்டிங்க

மகிந்த ராஜபக்சே : ஆமா நீ எப்படி கண்டு பிடிச்ச ??

சரத் பொன்சேகா : பயத்துல நீங்க எனக்கு கழுவிட்டிங்க

மகிந்த ராஜபக்சே : பிரபாகரனை பிடிக்க நான் உனக்கு மட்டும் இல்ல நான் எல்லார் *த்தையும் கழுவி விடுவேன் .

தமிழக மக்கள் : நீ எவன் *த்தை கழுவி தண்ணி குடித்தாலும் பிரபாகரனை ஒன்றுமே செய்ய முடியாது

தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள் //

Nice comment on another blog. Wanted to appreciate you on your blog. ;-) I am too ஒரு வடநாட்டு மகன்!

Monday, May 18, 2009

மீண்டும் பீனிக்ஸ் எழுமா?

இன்று ஒன்று போயின்
நாளை ஒன்று பிறக்கும்
கிடைக்கும் என்பது
கிடைத்தே தீரும்!

- ரமேஷ்

ஒரு மனத்தோற்றம். குண்டுகள் இல்லாமல், அனைத்து தமிழ் தலைவர்களையும் அரவனைத்துபோயிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதோ?

வீரப்பனும் ஆம்புலன்சில் போனான். இவரும்?

"வீரவணக்கம் - பிரபாகரன் மற்றும் ஒட்டு மொத்த ஈழத்தமிழனத்திற்கும்!"

"இனத்தின் சினம்,ரணத்தின் தினம்,"

இனி நடக்க வேண்டியது பிரணாப் முகர்ஜி சொல்வதை போல, ராஜபக்சே தமிழர்கள் தனி ஆளுமை அதிகாரம் கொடுக்க வேண்டும். மாநில சுயாட்சி பற்றி முரசொலி மாறன் எழுதிய புத்தகம், ஆங்கிலத்தில் இருந்தால் அவருக்கு அனுப்பவும்.

Friday, May 15, 2009

தேர்தல் நிலவரம்

பிரச்ன ஜோஷியம் படி காங்கிரஸ் 163 இடங்கள் எடுப்பார்கள். சென்ற தடவை விட கூடுதல்.

அப்புறம் ஈஸ்ட் டிரக்ச்சன் பார்திஸ் சப்போர்ட் பண்ணுவாங்க. சவுத் சப்போர்ட் நிச்சயம். _/\_

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்.

இங்கே ஒரு சேலஞ் உள்ளது. நான் விவரம் அனுப்பியுள்ளேன். பார்க்கலாம்! ஜோதிடம் ஒரு மன அமைதிக்கு என்று போய் , இன்று சேலஞ் நிலைமை. :-(

*********

சரி தமிழ்நாட்டில் எப்படி இருக்கும் நிலவரம்? கிட்டத்தட்ட 60 டு 90% சீட்ஸ் டி.எம்.கேவிர்ற்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ஜெயலலிதாவிற்கு மூஞ்சியில் கரி பூசுவார்கள்...

இது சொன்னபடி நடக்க வாய்ப்பு இருக்கிறது!

பொறுத்திருந்து பாருங்கள்.

கோலங்கள், நேரத்திற்கு தகுந்தமாரி மாறும். அப்போ ரிசல்டும் தான்.

***********

நண்பர் ஒருவர் மகன் தமிழ்நாடு ப்ளஸ் 2 எக்சாமில் பாஸ். கிரிக்கெட் என்று அலைந்துக்கொண்டு இருந்தான். அவர்கள் நம்பவே இல்லை. வரும் ஞாயிறு ஒரு பெரிய பார்டி தருகிறார்கள் சென்னையில்... பெற்ற மதிப்பெண்கள், 1100. எங்காவது இஞ்சினீர் சீட் நிச்சயம். கிண்டி காலேஜில், கிடைக்கலாம் 199 கட ஆப். வாழ்த்துக்கள் சுனில் அருண்குமார். ( அவரின் சித்தப்பா மகேஷ் ஒரு ஐ.ஏ.எஸ். )

சுனில் 90% வாங்குவார் என்று பிரசனம் பார்த்து கூறியிருந்தேன்.

Sunday, May 10, 2009

சில சிரிப்புகள் - எனக்கு வந்த மெயில்

திரையரங்க கடைவாசலில்...

"விஜயை மீட் பண்ணணுமா? coke குடிங்குங்க"

என்று சொல்லும் விளம்பரப் படத்தில் நம்ம அண்ணன் "இளைய தலைவலி"விஜய் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

"இந்த கோக் மாதிரி கூல்டிரிங்ஸில பூச்சிக் கொல்லி மருந்துங்க அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல கலந்திருக்கானுங்களாம்.அதெல்லம் இவனுக்குத் தெரியாது? இந்த மயிரும் நாளைக்கு அரசியலில குதிக்கப் போகுதாம். எப்படியா இந்த நாடு உருப்படும்?" என்று யாரோ சொல்லி நகர...

நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

சொன்னது யார் என்று அறிய முயற்சித்தேன், முடியவில்லை.

எனக்கு கடைசியாக பார்த்த படம் ஞாபகத்திற்கு வந்தது.

அந்த படத்தின் பெயர்
"யாவரும் நலம்."

படம் பார்த்து அசந்துட்டேன் போங்க...

செத்துப் போனவங்க எல்லாம், ஒரு குறிப்பிட்ட வீட்டு டிவியில மட்டும்,அதுவும் சரியா ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவங்க வீட்டு டிவியில மட்டும் வர்ற தொடர் நாடகத்தில நடிக்கும் கதாபத்திரங்களா வருவாங்களாம்...

(சிரிக்காதீங்க)

காதுல பூ வைக்கிறத கேள்விப் பட்டிருக்கோம்.இந்த படத்தில தாராளமா டிவி கேபிள் வயரையே சுத்தி வீட்டுக்கு அனுப்புறானுங்க.

இந்த மாதிரி ஹைடெக் பிச்சைக்காரனுங்க இணையத்திலும் புகுந்தாச்சு.

அதுங்க எல்லாம் , வித விதமா இருக்கிற ஏதாவது ஒரு கடவுள் பெயரில , ஏதாவது ஒரு வாய்க்குள்ள நுழைய முடியாத பேர்ல இணைய தளத்த ஆரம்பிக்குதுங்க. அந்த கோயில் கணக்குல கிரிடிட் கார்ட் வழியா , பணம் கட்டினா,நம் வீட்டுக்கே பிரசாதத்தை அனுப்பி வைக்குங்களாம்.

நாம அத வாங்கி வீட்லேயே மொட்டைய போட்டுட்டு,நாமத்த நெத்தியில பூசிக்கிட்டு, அதுங்க கொடுக்கிற பிரசாதத்த வாய்ல வைச்சுக்கிட்டு "பக்தி பழமா" மாறி உக்காந்துகலாமாம்.

"இன்னும் எத்தனை நாளக்கிடா, எங்கள ஏமாத்துவீங்க?..."


"மரியாதை" என்ற படத்திற்குப் போயிருந்தேன்.

"இயக்குநர் விக்ரமன்" என்றால் கண்ணை மூடிக்கொண்டு வரவேற்கிற ஆள் நான்.

அதே மாதிரி அவரின் படப்பாடல்களை யோசிக்காமல் வாங்கிக் கேட்கிற ஆட்களில் நானும் ஒருத்தன்.

அவர் மேல் வைத்திருக்கிற நம்பிக்கை தான் காரணம்.

கதைக்காக அங்க,இங்க, ஏன் இங்கிலீஷ் படத்தப் பார்த்து காப்பியடிக்கிறது. அதெல்லாம் கெடையாதுங்க.

மனுசன் தன்னம்பிக்கையான ஆளு...

தன் படத்தை தானே காப்பியடிச்சுக்குவார்.

"வானத்தைப் போல,உன்னை நினைத்து...,சூர்யவம்சம்"...ன்னு பெரிய பட்டியலே நீளுது மீதிய நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க.

ரெண்டு விஜயகாந்த் இருக்காங்க,ஆனா உண்மையிலே ஹீரோ யாருன்னா நம்ம ரமேஷ் கண்ணா தான்!

படம் முழுக்க சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுக்கிட்டே போகிறார்.ஆங்கில படப்பாணி, ஒரே மாதிரி சிரிப்புத் தான் என்றாலும்,ரசிக்க,சிரிக்க முடிகிறது.

ஆனந்த விகடன், குமுதம் மாதிரி நாட்டுப் பற்றோடு வெளி வருகிற தேசிய வார ஏடுகளில் வந்த பழைய குப்பைகளை, அர்த்தமுள்ள நகைச்சுவைகளை(சிரிக்காதீங்க....!).

எப்படி ஒரு குப்பையும் ஒரு கலைஞனின் கைப் பட்டால் கலைப் பொருளாகுமோ,அந்த அதிசயம் இந்த படத்திலும் நடந்திருக்கிறது.

சமூகம் பெண்ணை நடமாடும் அழகுநிலையமாகவும், ஆணை பணம் கொட்டும் ATM இயந்திரமாகத் தான் பார்க்கக் கற்றுத் தருகிறது.

காதல் கருகி,வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையும், மனசும் கருகிப் போன என் தேசத்து இளைஞனுக்கு தனக்கு தெரிந்த மொழியில் ஆறுதல் சொல்லிப் போகிறது,இந்த படம்.

தனக்குள்ளே சிரிக்க, அழுகிற, பூப்பூக்கிற படைப்புக்கு சொந்தக்காரன், நம்ம விக்ரமன்.

அவன் படப்பாடல்களைக் கேட்கும் போது,காதுகள் இருந்த இடத்தில் காதுகள் மறைந்து,பூக்கள் பூக்கும்.

வீட்டில் எல்லோரையும் துரத்தி எங்காவது அனுப்பி விட்டு கதவு சன்னல்களை மூடிவிட்டு இவன் படப்பாடல்களை மட்டும் ஒலிக்க விட்டு கேளுங்கள்...

ரோசாபபூ... சின்ன ரோசாப்பூ...(படம்-சூர்ய வம்சம்) ஒலிக்க விட்டு ஒரு பிறவிக் குருடனை கேட்கச் சொல்லுங்கள்.அவனையே ஒரு ரோஜாப் பூவாக மாற்றும் சக்தி அந்த பாடலுக்கு உண்டு.

ஏனோ இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் பெருத்த ஏமாற்றம்.

வழக்கம் போல விக்ரமன் படங்களில் வரும் , மிகைப் படுத்தப்படாத வில்லன்களே இதிலும் .

காதலித்து ஏமாற்றும் மீனா கதாபாத்திரத்தின் மீது கூட கடைசியில் பரிதாபந்தான் வருகிறது.

நல்ல உத்தி!


அம்மாவின் சமையலை கிண்டலடிக்கும் காமெடி சற்று அதிகமாகவே வருவதால்,அம்மாவோடு படம் பார்த்தால்,உங்கள் அம்மாவின் கைகள் உங்கள் முதுகில் படமுடியாத தூரத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பத்தான் தப்பிக்க முடியும்.

பெற்றோர்களே, உங்கள் விருப்பங்களை உங்கள் பிள்ளைகள் மேல் திணிக்காதீங்க.அவர்களை,அவர்களாகவே சுயமாக சிந்திக்க,முடிவெடுக்க விடுங்கள்.

பெண்கள் வெறும் சமையல் செய்யும் இயந்திரமல்ல,மனுசி!...

என்பது மாதிரியான நல்ல வசனங்களுக்கு பஞ்சமில்லை.

பல நேரங்களில் நாடகத்தனம் தலை தூக்கினாலும், அது ஒன்றும் குறையாகத் தோன்ற வில்லை.

கதாநாயகனே திரையில் தோன்றி கஞ்சா ( நான் கடவுள்) கேட்கிறான்.அப்படி ஒரு கிறுக்கு வேகத்தில் தமிழ் திரையுலகம் பயணிக்கும் போது...

அம்மா( விக்ரமன்) ஊட்டும் பால் நிலாச் சோறு எத்தனை பேருக்குப் பிடிக்கும்? என்று தெரியவில்லை.



சில கல் தொலைவில் நடக்கும் தமிழீழ மனிதப் படுகொலைகளைப் பற்றி,ஒரு சின்ன நேரடி, மறைமுக காட்சியோ,வசனமோ வைக்காமால் படங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வெளிவருகிறது...!

போங்கடா நீங்களும் உங்க கலைகளும்...மனுசங்களாடா நீங்க...?



--
5/10/2009 03:26:00 PM அன்று விழி,எழு,செயல்படு! (foryouths) இல் *ஆதிசிவம்@சென்னை* ஆல் இடுகையிடப்பட்டது






இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல..
http://www.beyouths.blogspot.com/2009/05/blog-post_10.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA

Saturday, May 9, 2009

சங்கமத்தில் பேருந்து போட்டி

நண்பர் விஜயின் வலைத்தளத்தில் தான் இந்த "பேருந்து" போட்டி குறித்து தெரிந்துக்கொண்டேன்.

இங்கே இருக்குது சங்கமம்.

சங்கமம்

அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

( நான் எப்போதும் போல கலந்துக்கலே... :-) )

Wednesday, May 6, 2009

அமெரிக்காவில் அம்பி

அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி !

வினவு தளத்தில் அந்த பதிவு வந்துள்ளது. நன்றாக எழுதியுள்ளார்.

( என் சொந்த வாழ்க்கையில் அது தலைகீழ், என் மனைவி சோ கால்டு பிராமின்ஸ் )

poonol


சரி இந்த சாதி பிரச்சனைக்கு என்ன தீர்வு....

முதலில் சாதி / மதம் என்ற காலத்தை ஸ்கூல் அட்மிசனில் இருந்து எடுக்க வேண்டும். சாதி கோட்டாக்களை கட் செய்ய வேண்டும். சாதி பெயரைச்சொல்லி யாரும் பயன் பெறக்கூடாது… ரமேஷ்

Tuesday, May 5, 2009

டா வின்சி இந்தியரா?



டா வின்சி இந்தியரா? இந்த படம் சொல்லும் உண்மை என்ன? நீங்களே பாருங்கள்...

Monday, May 4, 2009

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அனைவருக்கும் கொண்டாட்டம்

அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள்
அகில உலகிலும் பட்டையை கிளப்பும்

அரசாங்கம் கோட்டை விட்டு
அல்லும் பகலும் கரண்டிர்க்கும் அலையும்

அக்னி நட்சத்திரம் முடியும் நேரம்
அலைபாயும் மழை வரும்

அனைவரின் நெஞ்சத்தில் புது
அரசாங்கம் ஆட்சி அமைக்கும்

அன்பான தேசமிது திருடர்களையும்
அரவணைத்து பதவி தரும்!

முரண் தொடை எழுத்துக்கள்

முரண் தொடை எழுத்துக்கள் வாசிக்க சுவாரசியமாக உள்ளன.


இங்கே படியுங்கள்....

அதிமுகவிற்கு ஓட்டுப் போடுவது தவறா?


அவரை எங்கே பிடித்தேன்? யாரோ ஒருவரின் பதிவில், அவர் பெரிய ஆராய்ச்சி பின்னூட்டம் போட்டிருந்தார்!

Thursday, April 30, 2009

கோவேரி கழுதையில் இந்தியா தேர்தல்

படம் பார்த்து புரிந்து கொள்க...




கிள்ளம்கொட்டா, வைசாக் அருகில் (மாவோவிச்டுகள் அதிகம் இங்கு...)

அப்புறம் ஒரு வோட்டு இருக்கும் பூத்து ( ஒரு பத்து பேர் பனி செய்ய வேண்டும் அதற்கு ). குஜராத்தில். கிர் காட்டின் உள்ளே ஒரு கோவில் பூஜாரிக்காக ( அங்கேயே வாழ்பவர்).

Wednesday, April 29, 2009

கார்காலம்

கண்ணில் தெரிகிறது
கார்காலம்
கனவுகள் மறைகின்றன
தினம்தோறும்

வாழ்க்கை ஒரு மீன்படகு
அனுபவம் மீன்பிடித்தல்
வைத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும்
அவரவர் இஷ்டம்

மனம் சுகம் தேடுவதில்லை
வாழ்ந்தால் போடும் என்கிறது
இருப்பதை வைத்து உண்டுவாழ்
எதற்கு இந்த வீண் ஆசைகள்

கருப்பு பணம் பதுக்குதல்
இருக்கத்தான் செய்யும்
தன்மானம் கெட்ட ஆட்கள்
நிலத்தில் இருக்கும் வரை

ச்விச்ஸ் என்ன
கேய்மன் என்ன
மரூசியஸ் என்ன
இருப்பவனுக்கு தான் வெளிச்சம்

சூடு சொரணை இல்லாமல்
வோட்டுக்கள் என்ற குறியில்
தின்னென்று வீம்பி நிற்கும்
அரசியல்வாதிகளின் கொட்டம்

இனி வருகிறது அவர்களுக்கு
தீர்ப்பு என்ற முடிவு
அடுத்தவனின் சொத்தை ஆள்பவர்
இருப்பதை வைத்து மடிவதே மேல்!

Friday, April 24, 2009

இலவசம் பிரிடன் கம்பெனியில் 100 ஷேர்கள்

இது நிஜம் என்று நம்பலாம், எனத் தோன்றுது.

ஒரு சோசியல் நெட்வர்க் கம்பனி விளம்பரம், என் நண்பர் விஜய் ப்ளோகில் பார்த்தேன்.

என் ஈமெயில் விவரம் (காசு இல்லை) மட்டும் கொடுத்தேன்.... அவ்வளவு தான்.

அதன் மூலம், இலவசமாக சில ஆயிரம் ஷேர்கள் கிடைத்தன. 2012 வாக்கில் அது ஒன்று கிட்டத்தட்ட ஒரு டாலர் அளவு ஆகுமாம் (நம்பிக்கை தான்). ஆஹா!

நீங்களும் ஷேர்கள் இலவசமாக பெற இங்கே க்ளிக்குங்கள்.

Free 100 shares on me2everyone.com

Thursday, April 23, 2009

தனி நபர் தாக்குதல்

பதிவுலகில் தனி நபர் தாக்குதல் அதிகம் ஆகிவிட்டது என்று நண்பர் வெங்கட் கிருஷ்ணா எழுதுகிறார். உண்மை. மிக மிக உண்மை. ஜாதி மதம் குலம் கோத்திரம் பார்த்து எழுதுவதில்லை பதிவர்கள்.

சில பதிப்பகங்கள் ஜாதி பார்த்து தான் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது, என்கிறார் ஒரு நண்பர். சரியா தவறா தெரியவில்லை.

சரத்பாபு தேர்தலில் நிற்பது தவறாம். என்ன கொடுமை? :-(

சென்ற தேர்தலில் ஐ.ஐ.டி. கட்சி ஒன்று இருந்ததே. அப்போதே எங்கே போயிற்று இந்த பதிவர்கள் புத்தி?

அய்யா, எழுதுவதற்கு பேனாவும், கி போர்டும் இருந்தால் மட்டும் போதாது. ஒரு நல்லா போதை வேண்டும். உண்மை நிலை வேண்டும். பேச்சு துணிவு வேண்டும்.

********

சில எழுத்தாளர்கள், திருத்தவே முடியாது. அவர்கள் எழுதுவது ஜனரஞ்சகமாக இருப்பதால் தான் (படித்தால் புரியும் விதம், ஆர்வத்தை தூண்டும் நிலைமை) அவர்களுக்கு ஒரு வாசகர் வட்டம் இருக்குது. அதை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போல காசு காசு என வேண்டுவது தேவையற்ற ஒன்று.

கொடுத்தாலும் நன்றி தெரிவிப்பதில்லை.

எழுதுங்கள் , நன்றாக எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

Sunday, April 19, 2009

சோகம்

கண்ணுக்குள்ளே சோகம்
நண்பர்கள் இல்லை
வேலை செய்யும் இடத்தில்
ஏமாற்றும் சிரிப்பும்

இது ஒரு கவர்ச்சி நாடகம்
பார்த்தவர்களுக்கு புரியாது
புரிந்தாலும் தெரியாது
அறிந்தவர்களுக்கும் சாமன்யமில்லை

பவுடர் பூசும் முகமும்
வென்னிரமாக்கும் க்ரீமும்
புருவம் உயர்த்தி பேசுமழகும்
ஒரு நாகரீக நடிகன் ஆகிறான்

கடன் எனும் கந்துவட்டி
அலையன திரண்டு வரும் மக்கள்
வசுலாகுமா கேள்வி சுருங்கும் முகம்
வாங்க சார் லோன் நிச்சயம்!

Friday, April 10, 2009

ஒரு கவிதை

கொந்தளிக்கும் கடல்
ஆர்பரிக்கும் காற்று
மவுனத்திர்க்கு விடுதலை
அலெக்சாண்டருக்கு வெற்றி
போரசுக்கு தோல்வி
தனிமையில் சங்கமம்
சயனைடு இல்லை
ரத்த ஆறு ஓடுமா?
ஈழமும் தாயகம்!

***********

புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

சங்கமம் போட்டியில் பதிவர்கள் வெற்றி

நான் ஆதரிக்கும் (அரசியல் இல்லைங்க இது) என்னுடைய ப்ளோகில் இருக்கும்லிங்கை பாருங்க..... சங்கமம் போட்டியில் பதிவர்கள் வெற்றி ......

இங்கே படியுங்க....

http://tamil.blogkut.com/contest0309.php

அதில் வெற்றி பெற்றவர்கள்.... (நம்ம கார்பரேட் கம்பர்! ஆறுன்னாலும் நச்!)

நர்சிம் கல்லூரி..கள் ஊறும் நினைவுகள்

முதல் கட்டத்தில், மக்கள் வாக்கில் அதிகம் மார்க் வாங்கியவர்களில்....

கல்லூரிப் பயணம்
: வெட்டிப்பயல்

வாழ்த்துக்கள்...

சரி நம்ம பரிசல்காரன் ஏன் நம்மளை போட்டிக்கு அழைக்கலே?

****************

சரி ஈயும் ஏரோப்ளேனும்
ஏன் இரண்டாம் கட்டத்திற்கு போகலே?

Tuesday, April 7, 2009

சிதம்பரமும் புஷ்ஷும் ஒன்றா?

இந்த கேள்வி இன்று ஜர்னைல் சிங் சிதம்பரம் மீது ஷு வீசியவுடன் கேட்டது...

சிதம்பரமும் புஷ்ஷும் ஒன்றா?

யார் என்பதில்லை முக்கியம். ஏன்? பி.ஜே.பி ஆள் தான். (நானில்லை)

சிதம்பரம் அவ்வளவு தரக்குறைவு ஆனவரா?

என் தாத்தா சொல்வார், ஒருவர் மீது யாராவது செருப்பு வீசினாலோ அல்லது அடித்தாலோ, அவர் ஆயுள் கணக்கில் அனைத்து பாவமும் அழிந்து போகும்.

அப்போ புஷ் நல்லவர் ஆகிவிட்டாரா?

என்ன சொல்வது தெரியவில்லை!

அடுத்த பிரதம மந்திரி ஆகிறார் சிதம்பரம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

********

ஜர்னைல் சிங்கை பிடித்து செல்லும் பாதுகாப்பு மப்டி ஆட்களிடம் சிதம்பரம் சொன்னது, ஜெண்டிலா இருங்கப்பா ( அடித்தவரை பார்த்து யாராவது இப்படி சொல்லியிருப்பார்களா? )

நல்லவர், நல்ல பண்புள்ளவர். மன்னித்துவிட்டார்.

கேட்ட கேள்விக்கு தக்க பதில் கிடைத்து விட்டது.

ஐந்து பர்சன்ட் வாக்கு வங்கி, நிரம்பிவிட்டது.

இந்த படம் நெட்டில் பார்த்தது..... இவரிடம் யார் போய் சொல்ல, பேசும் பண்பு பற்றி?

Monday, April 6, 2009

கல்கத்தா நினைவுகள்

நூறு ஆண்டுக்கு முன் போட்டனிக்கல் கார்டன் எப்படி என்று ( ஹூக்லி அருகில், அழகோ அழகு)





மேலே உள்ள படம் - நீங்கள் அமிதவ் கோஸின் சீ ஆப் பாப்பிஸ் ( A Sea of Poppies ) நாவலை படித்தால், இன்னும் ஒரு படி மேலே சென்று... கண் முன் இன்னும் கொண்டு வந்து நிற்க வைக்கும்.

*********

இப்போது எப்படி?

அழகு மாறவில்லை. பராமரிப்பு கொஞ்சம் கம்மி அவ்வளவு தான்...

Botanical Gardens Calcutta

தேர்தல் 2009 முடிவுகள்

தேர்தல் 2009 முடிவுகள் பற்றி ஜோதிட வழியாக என்ன முடிவு இருக்கும் என்று சோதித்து பார்த்தேன், கிருஷ்ணமூர்த்தி படாடி ப்ரஸ்னா வழியில்...

கேள்வி: மீண்டும் யு.பி.ஏ ஆட்சிக்கு வருமா?

இங்கே படியுங்கள்...

Election 2009 result

ஆமாம். அதாகப்பட்டது தோழமை கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். தெற்கு இந்தியர்களின் சப்போர்ட் நிறைய இருக்கும்.

மே 16 வரை பொறுத்திருந்து பாருங்கள்.

எந்த முடிவுக்கு நான் பொறுப்பல்ல. மேலே இருக்கிறவன் சொல்றான் நான் டைப்புகிறேன்.

Monday, March 30, 2009

தமிழ்நாட்டில் பா.ம.க

தமிழ்நாட்டில் பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் ஐந்து - தி.மு.கவுடன் நேரடி மோதல்...., மற்றொண்டு விடுதலை சிறுத்தைகளுடன் மோதல், புதுச்சேரி தவிர. (இது எனது பா.ம.க தேர்தல் குறித்து ஐந்தாவது பதிவு!)

நான்கு எம்.பி. தொகுதிகள் மட்டும், பா.ம.க கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. ஜெயித்தால் கட்சி வளர்க்க காய் நகர்த்தும் விதம், மற்றும் அ.தி.மு.க, ம.தி.மு.க, கம்மூனிஸ்ட் கூட்டணி வோட்டுக்கள் விழும் என்ற தையிரியம்!

இது வரை அவர்கள் பத்து தொகுதிகளில் , சுமார் 40% வோட்டுக்கள் இருக்கும் விதமாக போட்டியிட்டுள்ளனர். நல்ல எதிர்பார்ப்பு!

கிழே எம்.பி. தொகுதிகளும், அவற்றின் உள் அடக்கிய சட்டசபை தொகுதிகளும்...

ஸ்ரீபெரும்புதூர்

1. மதுரவாயல்,
2. அம்பத்தூர்,
3. ஆலந்தூர்,
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி),
5. பல்லாவரம்,
6. தாம்பரம்.

அரக்கோணம் (மீண்டும் பா..)

1. திருத்தணி,
2. அரக்கோணம் (தனி),
3. சோளிங்கர்,
4. காட்பாடி,
5. ராணிப்பேட்டை,
6. ஆர்க்காடு

தர்மபுரி (மீண்டும் பா..)

1. பாலக்கோடு,
2. பெண்ணாகரம்,
3. தர்மபுரி,
4. பாப்பிரெட்டிபட்டி,
5. அரூர் (தனி),
6. மேட்டூர்.

இது பா.ம.க கோட்டை. சுமார் 30% வோட்டுக்கள் வன்னியர்களின் கையில்.


திருவண்ணாமலை

1. ஜோலார்பேட்டை, (முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதி)
2. திருப்பத்தூர்,
3. செங்கம் (தனி),
4. திருவண்ணாமலை,
5. கீழ் பெண்ணாத்தூர்,
6. கலசப்பாக்கம்.



கள்ளக்குறிச்சி

1. ரிஷிவந்தியம்,
2. சங்கராபுரம்,
3. கள்ளக்குறிச்சி (தனி),
4. கங்கவல்லி (தனி),
5. ஆத்தூர் (தனி),
6. ஏற்காடு (தனி-ப.கு).


இது எம்.ஜி.ஆர் கோட்டை. ஆதி திராவிட மக்கள் அதிகம் இருக்கும் பகுதி. சுமார் 40% வோட்டுக்கள் அ.தி.மு.க வசம். தே.மு.தி.க, கொஞ்சம் ஜாஸ்தி வோட்டுக்கள் வாங்கி ஏரியா.


சிதம்பரம்(தனி) (மீண்டும் பா..)

1. குன்னம்,
2. அரியலூர்,
3. ஜெயங்கொண்டம்,
4. புவனகிரி,
5. சிதம்பரம்,
6. காட்டுமன்னார்கோயில் (தனி).


புதுச்சேரி (மீண்டும் பா.ம.க) காங்கிரஸ் நேரடி மோதல்

யாராவது, தமிழ்நாட்டில் மேலே குறிப்பிடப்பட்ட சட்டசபை தொகுதிகள் பற்றி கட்சி வாரியாக பெற்ற வோட்டுக்களை கமன்ட்சில் போட முடியமா?

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியலை கலைஞர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. போட்டியிட உள்ள 21 தொகுதிகள்

தென்சென்னை
மத்திய சென்னை
வடசென்னை
ஸ்ரீபெரும்புதூர்
திருவள்ளூர்(தனி)
அரக்கோணம் (மீண்டும் பா..)
தர்மபுரி (மீண்டும் பா..)
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
நாமக்கல்
கரூர்
பொள்ளாச்சி
நீலகிரி(தனி)
மதுரை
நாகை(தனி)
ராமநாதபுரம்
தூத்துக்குடி
கன்னியாகுமரி

இதில் பா.. வுடன் நேரடி மோதல் உள்ள தொகுதிகள் ஐந்து.

காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 16 தொகுதிகள்

காஞ்சிபுரம்(தனி)
ஆரணி
கடலூர்
ஈரோடு
திருப்பூர்
சேலம்
கோவை
மயிலாடுதுறை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
திருச்சி
விருதுநகர்
தென்காசி(தனி)
நெல்லை
புதுச்சேரி (பா.ம.க வுடன் காங்கிரஸ் நேரடி மோதல் - தமிழ்நாட்டில் இல்லை!)

விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட உள்ள 2 தொகுதிகள்

விழுப்புரம்(தனி)
சிதம்பரம்(தனி) (மீண்டும் பா..)

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி

வேலூர்

Sunday, March 29, 2009

பா.ம.க.வின் அவல் - உமி ஃபார்முலா

திரு ஆர். முத்துக்குமார் அவர்களின் பா.ம.க.வின் அவல் - உமி ஃபார்முலா! பதிவு படித்தேன்.

என்னுடைய கருத்தை அப்பதிவு கருதுப்பெட்டியில் பதிவு செய்தேன்.

********** இதோ ***********************

//சரியாக டேட்டா அனலிசிஸ் எழுதியிருந்திருந்தால் இவ்வளவு அபத்தமாக எழுதியிருக்க மாட்டீர்கள் என்று சொல்ல வருகிறேன்...//

Muthukumar, just take last 2 parliamentary election results - only in PMK winning places and write.. data is also available on http://ibnlive.com for all 40 seats.

To make it interesting, you just take the 2006 TN State elections and compare.

I know from your books, you research well. Just do this comparison pls for 3 sets of data and 10 - Lok sabha seats.... (adding Vijaykanth into play)

I have also written 2 articles on PMK in my blog.

Personally I feel, stability on winning is what PMK might have looked.

(note: I have national level psephologists as friends, who come on TV. Their inputs... cat on the wall voters, about 8 to 10% swing towards a trend. May be PMK voters are like that, rightly said by Anbumani.)

Ramesh
http://pathivubothai.blogspot.com

*******************

நானும் என் முறையில் பா.ம.க.முன் வைத்து எழுதிய மூன்று பதிவுகள், இங்கே...

பா.ம.க. வெற்றி தொகுதிகள்

தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு

தேர்தல் தமாஷா

அப்புறம் மாலனின் இந்த பதிவையும் விடாமல் படிக்கவும்.

http://therthal.blogspot.com/

Friday, March 27, 2009

பா.ம.க. வெற்றி தொகுதிகள்

சென்ற 2004 லோக்சபா தேர்தலில் பா.ம.க. வெற்றி தொகுதிகள் இவை. (தமிழ்நாடு)

செங்கல்பட்டு
அரக்கோணம்,
திண்டிவனம்,
தர்மபுரி,
சிதம்பரம்

மற்றும் புதுச்சேரி

மேலும் இப்போது தொகுதி சீரமைப்பு என்று சிறிது, பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அதனால், சுமார் மூன்று தொகுதிகள் தி.மு.க வசம் போகும்! மிச்சம் காங்கிரஸ் பலம் மிகுந்தவை. ஜாதிகள் (வன்னியர்) போட்டி சிறிது இருக்கும்.

பா.ம.க. முதல் அல்லது இரண்டாம் இடங்களை பிடிக்கும் தொகுதிகள் இவை. (அ.தி.முக பலத்துடன் மட்டும்)

விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், ஆரணி, சேலம், தர்மபுரி, வேலூர், அரக்கோணம், மயிலாடுதுறை, புதுச்சேரி.

மேலே உள்ள பத்தில், நிச்சயம் அவர்கள் தான் வெற்றி நினைக்கும் ஆறு தொகுதிகள்.... பலத்த போட்டி... விஜயகாந்த் வோட்டை பிரித்தால் (இதில் கவர்ன்மென்ட் தளத்தில் நான் பார்த்தபடி 2006 எலெக்சனில் தே.மு.தி.க பெற்ற வோட்டுக்கள் நிச்சயம் பாதிக்கும்), தி.மு.க சாகசம் செய்யும், காங்கிரஸ் மூன்றில் வெற்றி நிச்சயம்.... திருமாவளவனும் வெற்றி பெறுவார்.

அரக்கோணம் (மீண்டும்),
ஆரணி,
காஞ்சீபுரம்,
தர்மபுரி (மீண்டும்),
சிதம்பரம் (மீண்டும்),
கள்ளக்குறிச்சி (இது மட்டும் .தி.முக பலத்துடன் நிச்சயம் ஜெயிக்கலாம்)

சரி எல்லோரும், ப்ளோக்கை மட்டும் படிக்காமல் வோட்டு போடுங்க.

நல்லவர்கள் ஜெயிக்கட்டும்! நாடு வளம்பெறட்டும்.

Thursday, March 26, 2009

தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு

என்னுடைய தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு இப்படி இருக்கும்....

தி.மு.க (16)+ காங்கிரஸ்(13) + தே.மு.தி.. (10) + வி.சி.கே(1) என கூட்டணி அமைத்தால், நிச்சயம் 40 / 40 (முஸ்லீம் கட்சிகள், மற்றும் ஆர்.எம்.வி போன்றோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்)

தே.மு.தி.எங்கெல்லாம் பா.ம.க நிற்கின்றதோ, அங்கு போட்டியிடவேண்டும், சூடு பறக்கும்!

மற்றவர்கள் 0 / 40

அப்படி விஜயகாந்த், மாற்றம் செய்யாவிட்டால்! மே 13 தான் எலெக்சன். ஏப்ரல் ஆறு தான் கெடு குறிக்கும் நாள். அது வரை டைம் உள்ளது.

அ.தி.மு.க (15) + ம.தி.மு.க (5)+பா.ம.க.(5)+கம்மூனிஸ்ட்ஸ்(4) 29 / 40
தி.மு.க (6)+ காங்கிரஸ்(3) + முஸ்லீம் கட்சி (1) 10 / 40
தே.மு.தி.க 1/40 (அதுவும், விஜயகாந்த் மனைவி நின்றால்)

இதை குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும், மூன்றாம் அணிக்கு ஆதரவு கொடுக்க, போட்டி போட்டு தமிழ்நாட்டிற்கு மீண்டும் பன்னிரண்டு அமைச்சர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இது ப.ஜ.க. கூட்டணி (என்.டி.ஏ) 250 சீட்டு லெவலில் வந்தால் கூட நடக்கும்.

தேர்தல் தமாஷா

இது என்ன கூத்து... ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒருமுறை பாட்டாளி மக்கள் கட்சி. ராமதாஸ் (தமிழ் குடிதாங்கி அய்யா!). இப்போது நண்பரோடு (தொல்.திருமா) மோதும் சிதம்பரம். அதிலும் தி.மு.., தென்காசி தொகுதியைவிடுதலை சிறுத்தைகளுக்கு கொடுத்தால் தப்புவார்! (இப்போது - குற்றாலமா?). மேலும் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி கொஞ்சம், அ.தி.மு.க விற்கு போகும்...

விஜயகாந்த் நிச்சயம், தி,மு.காவிற்கு சாதகமாக தான், வாக்குகளை பிரிப்பார். என் இஷ்டம், அவர், பத்து சீட் கேட்டு வாங்கி, தி.மு.க (16)+ காங்கிரஸ்(12) + தே.மு.தி.(10) + வி.சி.கே(1) என கூட்டணி அமைத்தால், நலம். தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் வரும். பாண்டிச்சேரி காங்கிரஸ் வசம் கொடுத்துவிடுவார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி: அன்புமணி ராமதாஸ் தேர்தலில் நிற்க மாட்டார்! ராஜ்ய சபை வழி தான் , தனி வழி.

இங்கே கர்நாடகாவிலும், குடும்பம், சண்டை கோஸ்டி என பி.ஜே.பி ஓடுகிறது..

தேவ கவுடாவின் மகன்களின் அக்கப்போர் தாங்க முடியவில்லை.

Wednesday, March 25, 2009

எவ்வளவு பெரிய சைக்கிள்



இவர் ஜெர்மானியர்! கொடி தெரியுதா?

Tuesday, March 17, 2009

இந்தியா தேர்தல் களம்

இந்தியா தேர்தல் களம் ஓர் பெரிய மாயை.

லாலு பிரசாத் தான் இப்போது ஆட்டம் ஆரம்பித்து உள்ளார். காங்கிரஸ் மூன்று தொகுதி மட்டும், பீகாரில்.

ஜார்கண்டிலும் லாலு கட்சி மூன்று இடங்களை பிடிக்கும். மொத்தம் இருபத்தி எட்டு இடங்கள் வைத்துக்கொண்டு, மூன்றாவது அணியிடம் பேரம் பேசி, பிரதமர் ஆகலாம் என்று நினைக்கிறார் போல.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தி.மு.க. கூட்டணி தான் நாற்பது தொகுதிகள் (பாண்டி உட்பட) ஜெயிக்கும் தோற்றம் உள்ளது. அதற்கு விஜயகாந்த் அல்லது பா.மா.க. தயவு தேவை. கம்யுனிஸ்டுகள் கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள், அ.தி.மு.க பலத்துடன் ஜெயிக்கலாம், என்கிறார் நண்பர்.

கர்நாடகாவில், ஐந்து தொகுதிகள், பழைய ராஜாக்கள் குடும்பம் வெற்றி பெறுகிறார்கள். பெல்லாரியில் சோனியா நின்றால், ஒரு வேளை ஜெயிக்கலாம்.
தேவ கவுடா, நல்லா முயற்சி செய்து, மூன்றாம் அணி பலத்துடன், ஒரு பாத்து சீட்டு பிடிப்பார். தேர்தல் தமாஸ், பி.ஜே.பிக்கு கை வந்த கலை. பத்து சீட்டு நிச்சயம்.

சரத் பவர் தனியாக நிற்கிறார், மகாராஷ்ட்ரா தவிர. கூத்து தான்.

குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி வாகை , பதினைந்து சீட்டுகளில். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் ஐந்து சீட்டுக்கள் காங்கிரசுக்கு.

கூட்டி கழித்து பார்த்தால், பெரிய கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் மீண்டும் வரும் வாய்ப்பு அதிகம் தான். நான் சொல்கிறேன், 290 முதல் 300 எம்.பிக்கள் சப்போர்ட் வைத்திருப்பார்கள்.

Friday, March 13, 2009

பரிசல்காரன் என் எனிமியா?

பரிசல்காரன் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன், பதிவுகள் எழுத.

தமிழ் வலிபூக்களில் ஒரு வித்தியாசமான முயற்சியில், அவர் செய்த கூத்துக்கள் அருமை.

இப்போது அவர் புதிய பதிவில் இருந்து......

எதிரிகளைக் காதலிக்கிறேன்!

*********


சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் வந்ததன் சாராம்சம் இது. ஹாலிவுட்டில் 70-80 களில் பிரபல நகைச்சுவை நடிகரான ஜார்ஜ் கார்லின் (சமீபத்தில் காலமானார்) சொன்னவை...

நமது வாழ்வின் முரண் என்னவென்றால்...

நாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம்.
பெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது.
நிறைய வசதிகள் இருந்தாலும், குறைவான நேரமே இருக்கிறது. நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்..

நிறைய குடிக்கிறோம், நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம், வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம், தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை!

நிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..? ஒரு கணத்தில் வெறுக்கிறோம்.

மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.

-இப்படியே போகிறது அந்த மின்னஞ்சல்.

Wednesday, March 11, 2009

கூட்ஸ் வண்டி கவிதைகள்

கூட்ஸ் வண்டி என்ற வலைப்பதிவை படித்தேன்.... அஜயன்பாலா என்பவர் எழுதுவது.

இந்த கவிதை, என்னை மிகவும் லயிக்க வைத்து.

வார்த்தை விளையாட்டு!

***************

இரு காதல் கவிதைகள்

1
போனேன் கண்டு கலங்கி
அழகான பெண் ஒன்றை ஒர் நள்ளிரவில்
இன்னமும் தீராது நடுநடுங்கி மனசு
மண் புயலில் சுற்றி சுழலும் காலம்
கண்களில் மண் அப்பி
இறைவன் கொண்டு செல்வான் என வியந்து
கை தூக்கி நிற்கிறேன்
அவ்ள் கடந்து சென்றபோது
அதிர்ந்த ஸ்லீப்பர் கட்டைகளின் இடி முழக்கத்தில்
நொறுங்கி தூளாகும் என் எலும்புகளின் ஓசையுடன்
அசையா புகைப்படமாய்
கம்ப்யூட்டரில் ஒட்டியிருக்கிறது
உன் திரு.மதி.முகம்.
2
நேற்று நான் பாத் ரூமில் கதவை
தட்டியபோது
ஒரு குளிர் காற்றாய் உன் வளைக்கரம்
கன்விலே முகிழும்போது மட்டும்
ஏன் கொண்டை போட்டு வரவேண்டும்
என் கண்மணி
நேற்று நீ குளித்த் ஆற்றில்
செத்து விழுந்தனவே என் மன
பாரம்தாங்காதந்தகிளைகள்.
இன்னமும் மனசை மயக்குக்கிறது
நீ விட்டுச்சென்ற கல்லின்ஈர மஞ்சள்.

Tuesday, March 10, 2009

என் கவிதை

என் கவிதை ஒன்று கிழே... (பழசு)

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

*************

இது புதுசு

காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!


Monday, March 9, 2009

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் நேற்று பெண்களால் கொண்டாடப்பட்டது. வாழ்த்துக்கள்.

அரை கிலோ ஸ்வீட்சும், பெங்களூரு கோரமங்களா சாந்தி சாகர் உணவும் என்று கழிந்தது.

ஞாயிறு என்றால் எப்படியும் வெளியே உண்ணும் பழக்கம், இன்னும் மாறவில்லை.

ஹோலி இன்று/நாளை. கல்கத்தாவில் ஒரே குஷி சமயம். சிறு வயதில் மதுரா சென்ற ஞாபகம் இப்போ வருது. கிருஸ்னர் கோவிலும், வறண்ட ஜிலேபியும், இன்னும் மறக்கவில்லை.

எல்லோருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்.

Tuesday, March 3, 2009

பாக்கிஸ்தானுக்கு அவமானம்

மீண்டும் மீண்டும் பாக்கிஸ்தானுக்கு அவமானம்! என்னய்யா பண்ணுறீங்க?



இங்கே படித்து பாருங்கள்....

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லே, எதிரிக்கு ரெண்டு கண்ணு போகணும்.

இது தாங்க அவர்களுடைய தத்துவம்.

அதனாலே தான் யு.எஸ்.ஏ அவர்களை மட்டம் தட்டுகிறது.

வேறு ஒன்றும் எழுதுறதுக்கு இல்லே! எல்லாம் சொல்லியாச்சு!

*******

இன்னொரு பதிவு.... பாகிஸ்தானில் கொடுரம்

Saturday, February 28, 2009

டைம் மில் வந்த ஸ்ரீலங்கா கட்டுரை

இங்கே நீங்கள் ஆங்கிலத்தில் படிக்கலாம். தமிழ் மொழிபெயர்ப்பு தினமலரில் இருக்கலாம். தெரியவில்லை.

TIME and Srilanka


*********************

தமிழ்மணத்தில் அவார்ட்

தமிழ்மணத்தில் அவார்ட் என்பது எனக்கு இப்போது தான் தெரியும், இருந்தாலும் இரண்டு முறை மெயில் வந்த விஷயம், இப்போது தான் தெரிந்தது.

தமிழ்மணத்தில் அவார்ட் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.




இருந்தாலும் எனக்கு, என் பதிவுகளுக்கு எவ்வளவு ஒட்டு விழுந்தது, பிரிவில் எத்தனை வோட்டுக்கள் (பர்செண்டேஜ்) தெரிந்தால், எழுத்துலக ஆசை இருக்கும்....


I don't want to get writers curse, where in my daily food would be dependent on others.

Monday, February 23, 2009

ஆஸ்கார் நாயகன் கமலுக்கு ஆஸ்கார் விருது இல்லையா?

ஆஸ்கார் நாயகன் கமலுக்கு ஆஸ்கார் விருது இல்லையா? வெட்கம் வெட்கம்.

சரி சரி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்கள் கொடுத்துள்ளார்கள். வாழ்த்துக்கள். (தமிழன் வேறு!)

குல்சார் (மராட்டியர் என்பதில் எனக்கும் பெருமை) ஏன் லாஸ் ஏஞ்சலஸ் சென்று ஆஸ்கார் வாங்கவில்லை. அவரை தயாரிப்பாளர்கள் (வார்னர் கம்பனி) அழைக்கவில்லையா? என்ன பிரச்சனை?

எப்படியோ, ஸ்லம் ஆட்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்... இல்லையா?

மொத்தத்தில் ஒரு டப்பா படத்திற்கு இவ்வளவு ஆஸ்கர்களா. கொடுமை!

வாழ்க வளமுடன்.

Wednesday, February 18, 2009

லண்டனில் பதிமூன்று வயதில் ஒருவன் தந்தையாகிறான்

லண்டனில் பதிமூன்று வயதில் ஒருவன் தந்தையாகிறான் ... இது மாதிரி நடப்பதால் தான் நாட்டில் ஏன் உலகில் அண்டத்தில் கசமுசாக்கள் அதிகம் ஆகி, மனித உறவுகள் கெட்டுப்போகின்றன.

15222232சரி இதற்க்கு யார் காரணம்? அவனை வளர்த்த பெற்றோரா? அல்லது நண்பர்களா? அல்லது, அந்த பதினைந்து வயது பெண்ணா? சொல்லுங்கள் நண்பர்களே.

டீன் ஏஜ் பருவம் பொல்லாதது.

இந்தியாவில் இது இலை மறைவு காயாக நடக்கிறது...

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம், சென்னையில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம். ஏதோ ஒரு சிஸ்ட் பிரச்சனை. குழந்தை இல்லை. டாக்டர் எக்சாமினேசன் பண்ணுகிறார். சில வருடங்களுக்கு முன் குழந்தை ஒன்று பெற்றாளா என்று கேட்கிறார். உண்மை வெளி வருகிறது. டீன் ஏஜ் பருவம், குழந்தை தங்கையாக ( லேட்டாக பிறந்தாள் என்று கதை - கல்யாணம் சமயத்தில் அவள் யு.கே.ஜி ). அதற்கு காரணமானவன் ஒரு பெரிய இடத்து ஆள். புது கணவனும் ஏற்றுக்கொள்கிறான். வேறு வழி?

ஹும்.

Monday, February 16, 2009

பிரணாப் முகர்ஜியின் இண்டரிம் பட்ஜெட்

சரியான சொதப்பல் இந்த பிரணாப் முகர்ஜியின் இண்டரிம் பட்ஜெட்.

எந்த முகத்தை வைத்து இனி ஒட்டு கேட்க போகிறார்கள்?

சாதனைகள் மட்டும் வாசித்தால் போதுமா?

சரி சரி ஜூலை வரை பொறுத்திருப்போம்.

பி.ஜே.பி. எதோ சில முயற்சி செய்து 2004 சமயம் பல பாலிசிகள் அப்ரூவ் செய்தனர். ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் இப்போது தட்டில் லட்டு வைத்து கொடுக்கிறார்கள். அத்வானிமுகத்தில் சிரிப்போ சிற்ப்பு.

(இடையில் வீரேந்திர குமார் - ஜனதா தல் எம்.பி. மயங்கி விழுந்தார்! இப்போ ஒ.கே.)

வாழ்க இந்தியா.

Tuesday, February 10, 2009

நான் கடவுள் விமர்சனம்

நான் கடவுள் திரைப்படம், ஆர்யாவின் சிறப்பை வெளி காட்டுகிறது. இதில் அஜித் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என தெரியவில்லை. கம்பேர் செய்வதில் விருப்பமில்லை! விக்ரம் கூட ஒரு வித்தியாசமான நடிப்பு கொடுத்திருப்பார்!

படத்தில் பாலா தெரியவில்லை, ஜெயமோகன் தெரியவில்லை. எல்லாம், படத்தில் ஒன்றி விடும் அளவிற்கு, காசி ஆக்ரமித்துக்கொல்கிறது. இளையராஜாவின் பாடல்கள் சுமார் ராகம் என்றாலும், ரி-ரெகார்டிங் அருமை.

பிச்சைகாரர்களின் கான்றரியன் லைப் ஒரு விதமாக சொல்லப்படுகிறது.

எதோ ஒரு வகையில் 1960 களில் வந்த படம் பார்த்த மாதிரி இருந்தது.

வித்தியாசமான முயற்சி.

Friday, January 30, 2009

முத்துக்குமார் வாழ்க

முத்துக்குமார் வாழ்க! தமிழ் இனத்திற்கு அவர் விடுத்துள்ள செய்தி கண்களில் நீர் வருவிக்கின்றது.

தீக்குளிப்பு, தற்கொலை எல்லாம் தேவையில்லை இந்த நாட்டில், அரசியல் ஆர்வம் (லஞ்ச லாவண்யம் இல்லாமல், குடும்பத்தார்க்கு பணத்தை சுருட்டாமல்) இருந்தால் போதும்.

முத்துக்குமார் தீகுளிப்பதை நின்று வேடிக்கை பார்த்த மனிதர்கள், என்ன ஜென்மங்களோ? சட்டக்கல்லூரி கொடுமையிலும் போலீசார் நின்று இது (வேடிக்கை) தான் செய்தார்களா?

**********************************************************
தீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை -

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.