Showing posts with label கலவி. Show all posts
Showing posts with label கலவி. Show all posts

Saturday, October 4, 2008

கக்கூஸ்

இரண்டு நாட்களாக கக்கூஸ் போக பிரசனை. மனைவியின் உறவினர்கள் லீவுக்காக வந்துள்ளார்கள். இப்போது வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்.

ஐந்து பேர் உட்கார்ந்து போகும் காரில்... மூன்று பேர் சீட்டு பின்னாடி, இப்போ நாலு பேருங்க, ஒரு குழந்தை மடியிலே...முன் சீட்டுலே.. மனைவி, அப்புறம் பையன்.

எங்கள் ரூமில் ஒரு அடச்சிட் டாய்லட், அப்புறம் ஒன்னு காமன். ரெண்டு பெட்ரூம் வீடுங்க.

காலயிலே வாகிங் போயிடு வந்து ஒரு காப்பி குடிச்சிட்டு.. கக்கூஸ் போலம்னா... யாராவது ஒருத்தர் உள்ளே. அடக்கிகிட்டு எவ்வளவு நேரம்தானுங்க இருக்கிறது... ஒன்னுக்குனா பரவாயில்லை... ரோட்டிலே ஓரமா நின்னு அடிச்சிடலாம்.. வெஜிடரியன் சீக்கிரம் வேற ஜீரணம் ஆயிடுது.

அப்புறம் இந்த வாசம் பாருங்க... ஸ்ப்ரே அடிச்சால் தான் உள்ளே போக முடியும்.

எங்க வீட்டு ஆள் வாசம் ஓகே. ஆனால் இந்த நெய்யா சாப்பிடிருவங்க வந்தால்... கருமம் கருமம்.. வரவேண்டியதும் வராது. இதுக்கு தாங்க ஜாதி பார்த்து கட்டுவான்களோ'னு ஒரு யோசனை வருதுங்க!

அப்புறம் இந்த சம்போகம்... கலவி.. செக்ஸ்.. அது சொல்ல முடியாத ப்ரோப்ளம். அதுவும் ஒரே கதைய எழுதறேனா தினம் ரெண்டு மணி நேரம்...

குழந்தைகள்.. இப்போ எங்க ரூமில்.. எப்படிங்க? என் பையன் ஒரு தடவை சொன்னான்.. எங்க கூட அப்போ படுத்திருப்பான்.... "டாடி நைட் அம்மாவை நீ பைட் பண்ணினே.
நான் பார்த்தேன். எனக்கு பயமா இருந்துச்சு. அப்புறம் கண்ணை மூடிட்டேன். இனிமே அப்படி பண்ணாதே? ஓகே?" அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு மாமி இருந்தாள். எனக்கு, மனைவிக்கு மூஞ்சியெல்லாம் செவந்திடிச்சு.

ஒரு மூடு வந்து எல்லாம் செட் பண்ணி... அலாரம்அடிக்குது.. அஞ்சு மணி ஆச்சு...

வாழ்க்கை ஓடுதுங்க. சொந்தம் ஒரு சுகம்.

எப்படீங்க அந்த காலத்திலே வீட்டில் கக்கூஸ் இல்லாம சமாளிச்சாங்க? அதுவும் வத வதனு வீட்டிலே டிக்கெட்ஸ் வேற!

Friday, September 5, 2008

பெண் கலவி எப்படி எப்போது

ஆண் பெண் உறவு கலவி உட்பட எப்படி எப்போது என்பது பற்றி திருவள்ளுவர் அழகாக சொல்கிறார்.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )

மு.வ : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
கருணாநிதி :உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா :உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

ஆகா ஆணும் பெண்ணும் உடலும் உயிராகி வாழ வேண்டும்.

ஆனால் சில பெண்கள் நம் நாட்டில் என்ன செய்கிறார்கள்? தகாத உறவு கொண்டு, கட்டிய கணவன் மீதே போலிசு ஏவுகிறார்கள். பொருள் ஈட்டும் நோக்கம் கொண்டவர்கள், பெண்களை, கல்யாணம் செய்து கொண்டு, இந்தியாவில் விட்டு சென்று விடுகிறார்கள் (முக்கியமாக கல்ப் நாடுகளுக்கு). காம இச்சைக்கு ஆட்பட்டு பெண்கள் தகாத சகவாசம் கொள்கிறார்கள். கொல்லவும் செய்கிறார்கள்.

இங்கே படியுங்கள் தெரியும்.

வன் கொடுமை சட்டம் இது. தவறு இருவர் உடையது தான். அப்படி சம்பாரித்து என்ன கிடைக்க போகிறது? சினிமா பாடல் ஆசிரியர்கள் 'மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது' என்று எழுதி உசுப்புகிறார்கள்.

என் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் அக்கா ஒரு ஜோக் சொல்வார்கள், அமெரிக்காவில் புருஷன் குறட்டை விட்டாலோ, காற்று வெளியிட்டாலோ (குசு), தும்மினாலோ டிவோர்சே தான்!