Friday, September 25, 2009

பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?

நண்பர் பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?

parisalkaaran.com என்ற தளம், ஏதோவொன்றை காட்டுகிறதே?

கொஞ்சம் அவருக்கு தகவல் கொடுங்களேன்!

கவிதையாய் ஒரு வீடு

முச்சந்தியிலும் ஒரு வீடு
அது வீடற்றவர்க்கு
புறம்போக்கில் பெறுவார்
சிலர் அரசியலினால்
நிம்மதி இருக்காது
சில ரவுடிகளினால்
சில தொந்தரவுகளினால்
மழையில் மிதக்கும்
சில வீடுகள்
படகும் இருக்கும்
சில இடங்களில்!
குளத்தை வாரி சுருட்டினால்
என்ன தான் நடக்கும் ?

நான் இன்னும் மறக்கவில்லை
என் தாத்தா காலத்து வீடு
அருமையான வேலைப்பாடு
அருமையான அறைகள்
காற்றோட்டமான ஜன்னல்கள்
ஒவ்வொரு ஜன்னலும்
ஒரு கதை சொல்லும்
காதலும் உண்டு
எதிர்வீட்டு கன்னியை பார்த்தது!
வீடு எப்படி என்று
யாருக்கு தான் ஆசையில்லை
புறாவிற்கும் இருக்கு வீடு
சரி நிதானம் தவறின் உங்களின்
வீடென்று எதைச் சொல்வீர் ?

Wednesday, September 23, 2009

ஜெயமோகன் எனக்களித்த பதில்

ஜெயமோகன் எனக்களித்த பதில் இங்கே....

இன மத மொழி வெறியர்களை சாடுகிறார்.

***

அன்புள்ள ஜெ

ஒருவரை அடையாளப்படுத்த அவரது மொழி மட்டுமே போதுமானதாக ஆகுமா? இதைப் படியுங்கள்.

http://tamizharkannotam.blogspot.com/2009/08/blog-post.html

நான் பிறப்பால் மராட்டியன் வங்கத்தில் வளாந்தவன். தமிழனாக வாழ்கிறேன். 13 வருடங்களாக. தமிழ்ப்பெண்ணை மணந்துள்ளேன். கர்நாடகத்தில் இருக்கிறேன்

ரமேஷ் டெண்டுல்கர்

அன்புள்ள ரமேஷ்

இந்தவகையான குரல்கள் எங்கும் ஒலிக்கின்றவை. ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் உள்ளே நுழைந்து வெறுப்பை உருவாக்கக் கூடியவை. இவர்களுக்கு வெறுப்பு அன்றி ஏதும் தெரியாது. இந்த மனநிலை எத்தனையோ நாடுகளை அழித்திருக்கிறது. பல கோடி மக்களை அகதிகளாக ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இந்த வெறுப்பு ஓயாது. இதற்கு எதிரான விழிப்புணர்ச்சி கொண்ட மக்கள் தப்புவார்கள். இல்லையேல் அழிவுதான்

இந்த கோரிக்கைகளின் விளைவுகளை எண்ணிப்பாருங்கள். ஒருகோடி தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் தொழில் செய்து வாழ்கிறார்கள். உலகின் இருபது நாடுகளில் தமிழர்கள் குடியேறி வாழ்கிறார்கள்!

இந்த மனநிலையின் மறுபக்கம்தான் ராஜ் தாக்கரேக்கள். மதவெறி கொண்ட அராபியர்கள். இனவெறி கொண்ட சிங்களர்கள். இதை நாம் நிராகரிப்பதென்பது இந்த வெறிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்குச் சமம்.

ஜெ