Friday, October 16, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !


பதிவுபோதை வாசகர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி!

Tuesday, October 6, 2009

அருள்மிகு புவனேஷ்வரி அம்மன்

அருள்மிகு புவனேஷ்வரி அம்மன் கோவில் கரணவாய் என்ற இடத்தில் உள்ளது. ஜாப்னா. ஸ்ரீலங்கா.

இங்கே க்ளிக்கி பார்க்கவும்.

கரணவாய் அருள்மிகு உச்சில் புவனேஷ்வரி அம்மன் கோவில்

Friday, September 25, 2009

பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?

நண்பர் பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?

parisalkaaran.com என்ற தளம், ஏதோவொன்றை காட்டுகிறதே?

கொஞ்சம் அவருக்கு தகவல் கொடுங்களேன்!

கவிதையாய் ஒரு வீடு

முச்சந்தியிலும் ஒரு வீடு
அது வீடற்றவர்க்கு
புறம்போக்கில் பெறுவார்
சிலர் அரசியலினால்
நிம்மதி இருக்காது
சில ரவுடிகளினால்
சில தொந்தரவுகளினால்
மழையில் மிதக்கும்
சில வீடுகள்
படகும் இருக்கும்
சில இடங்களில்!
குளத்தை வாரி சுருட்டினால்
என்ன தான் நடக்கும் ?

நான் இன்னும் மறக்கவில்லை
என் தாத்தா காலத்து வீடு
அருமையான வேலைப்பாடு
அருமையான அறைகள்
காற்றோட்டமான ஜன்னல்கள்
ஒவ்வொரு ஜன்னலும்
ஒரு கதை சொல்லும்
காதலும் உண்டு
எதிர்வீட்டு கன்னியை பார்த்தது!
வீடு எப்படி என்று
யாருக்கு தான் ஆசையில்லை
புறாவிற்கும் இருக்கு வீடு
சரி நிதானம் தவறின் உங்களின்
வீடென்று எதைச் சொல்வீர் ?

Wednesday, September 23, 2009

ஜெயமோகன் எனக்களித்த பதில்

ஜெயமோகன் எனக்களித்த பதில் இங்கே....

இன மத மொழி வெறியர்களை சாடுகிறார்.

***

அன்புள்ள ஜெ

ஒருவரை அடையாளப்படுத்த அவரது மொழி மட்டுமே போதுமானதாக ஆகுமா? இதைப் படியுங்கள்.

http://tamizharkannotam.blogspot.com/2009/08/blog-post.html

நான் பிறப்பால் மராட்டியன் வங்கத்தில் வளாந்தவன். தமிழனாக வாழ்கிறேன். 13 வருடங்களாக. தமிழ்ப்பெண்ணை மணந்துள்ளேன். கர்நாடகத்தில் இருக்கிறேன்

ரமேஷ் டெண்டுல்கர்

அன்புள்ள ரமேஷ்

இந்தவகையான குரல்கள் எங்கும் ஒலிக்கின்றவை. ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் உள்ளே நுழைந்து வெறுப்பை உருவாக்கக் கூடியவை. இவர்களுக்கு வெறுப்பு அன்றி ஏதும் தெரியாது. இந்த மனநிலை எத்தனையோ நாடுகளை அழித்திருக்கிறது. பல கோடி மக்களை அகதிகளாக ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இந்த வெறுப்பு ஓயாது. இதற்கு எதிரான விழிப்புணர்ச்சி கொண்ட மக்கள் தப்புவார்கள். இல்லையேல் அழிவுதான்

இந்த கோரிக்கைகளின் விளைவுகளை எண்ணிப்பாருங்கள். ஒருகோடி தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் தொழில் செய்து வாழ்கிறார்கள். உலகின் இருபது நாடுகளில் தமிழர்கள் குடியேறி வாழ்கிறார்கள்!

இந்த மனநிலையின் மறுபக்கம்தான் ராஜ் தாக்கரேக்கள். மதவெறி கொண்ட அராபியர்கள். இனவெறி கொண்ட சிங்களர்கள். இதை நாம் நிராகரிப்பதென்பது இந்த வெறிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்குச் சமம்.

ஜெ

Tuesday, September 1, 2009

செப்டம்பர் மாதம்

எனக்கு செப்டம்பர் மாதம் என்றாலே குதுகுலம் தான். சாப்பாடு விசயத்தில், கொஞ்சம் பயத்தோடு இருக்கும் சமயம். சளி , காய்ச்சல் வராமல் இருக்க நல்ல விதமாக, அப்பளம், வடாம் இல்லாமல், மசாலாவோடு, இல்லாவிட்டால், குருமா வகைகள் கிடைக்கும், கார சாரமாக... அது தான் உலகம்!

முதன் முதலில் அமேரிக்கா சென்ற போது, ஆறேழு மாதங்கள் கழித்து, கட்டாயமாக, நியூ யார்க்கில் ப்ளு ஷாட் போட்டுக்கொண்டேன். இடுப்பில் சுருக்கென்று ஒரு குத்தல். பங்களாதேஷி டாக்டர் ஒருவர் என நினைக்கிறேன். என்னோடு பெங்காலியில் கஷ்டப்பட்டு பேசினார். ரொம்ப வருடம் முன்பு புலம் பெயர்ந்த குடும்பம்...

இந்த வருடம் நாங்கள் நியூ யார்க் - வாஷிங்க்டன் டி.சி... யு.எஸ்.ஏ. ட்ரிப் போக வேண்டியது, சுவையின் பளுவால் தடைப்பட்டது... குழந்தைகளுக்கு சென்னையே கத்தி என்று ஆனது.

அடுத்த வருடம் அல்லது, வரும் டிசம்பர் லீவில் ( ஸ்நொவொடு விளையாட... ) செல்ல ஏற்பாடு. நண்பி திவ்யா மற்றும் தங்கை குடும்பம் அங்கு இருப்பதால், இந்த முறை நியூ யார்க்கில் கொஞ்சம் தெரிந்தவர்களோடு சுற்றலாம்.

அப்புறம், இந்த செப்டம்பர் மாதம், ரியல் எஸ்டேட் பிசினஸ் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். சென்ற ஒரு வருடம் முழுதும் சம்பாத்தியம் பூஜ்யம். எதோ ஓடியது... ஆனால் பெங்களூர் காண்டேக்ட்ஸ் அதிகம் பெற்றேன். ஆனால் விலை தான் குறைக்கமாட்டேன் என்கிறார்கள்.

ஒரு பெரிய ஐ.டி. நிறுவனர் குடும்ப கல்யாண விஷேசத்திற்கு நண்பர்களோடு ஹோட்டல் அசோக் சென்றேன். சாப்பாடு படு மட்டம்! எவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்? எல்லோரும் திட்டி சென்றார்கள்... பெருமைக்கு எதோ தின்ற மாதிரி... வந்தவர்களுக்கெல்லாம் அவர் எழுதிய புத்தகம் கொடுத்திருக்கலாம்... தாம்பூலம் என்று நிறைய யூஸ் பண்ணாத பொருட்கள்!

அர்த்த ராத்திரியில் குடை பிடித்தவர்களின் நிலை தான் ஞாபகம் வந்தது.

Monday, August 3, 2009

நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்!

சரி நண்பர்கள் தினம் ஏன்?

அமேரிக்கா நாகரீகம்...[GoldenDeer.JPG]

அவர்கள் வேளை தொழில் என்று ஓடியாடி இருப்பார்கள். குடும்பம் உறவு, நண்பர்கள் என்பதை நினைவில் கொள்ள ஒரு தினம்... ( தேடி ஓடும் மாய மான் இல்லை! )

அப்பாக்கள் தினம், அம்மாக்கள் தினம், மகளிர் தினம்... இப்படி பல.

நேற்று ஜி ஸ்டுடியோவில் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்ற படம் ஸ்பெசல் நண்பர்கள் தினத்திற்காக. ( காதல் வெல்லும் பார்மூலா தான் )

Saturday, August 1, 2009

இண்டரெஸ்டிங் ப்ளாக் பெண்கள் பதிவுகள்


என்னுடைய அடுத்த விருது பெண்கள் பதிவுகள் என்ற ப்ளாகிற்கு, பெண்கள் பதிவுகள் பற்றி விவரம் தரும் பதிவு! ஆனந்த விகடனில் கூட வந்தது. வாழ்த்துக்கள்!

நண்பர் வினிதா எழுதுகிறார்கள்.

அவர் மேலும் நல் தருணங்கள் மற்றும் Vinitha in my own words என்ற பதிவுகளையும் எழுதுறாங்க.

படித்து பயன் பெறுங்கள்!

இண்டரெஸ்டிங் ப்ளாக் விஜயஷங்கர்


நண்பர் விஜயஷங்கர் எழுதும் ப்ளாகிற்கு இண்டரெஸ்டிங் ப்ளாக் விருது கொடுக்கிறேன்.

அவர் தான் என்னையும் பதிவு உலகிற்கு அழைத்து வந்தார். இன்னும் பலரை ப்ளாக் உலகிற்கு அழைக்கிறார். கடைசியாக சுந்தரவடிவேலு.

நிறைய சப்ஜெக்ட்ஸ் எழுதுகிறார். இங்கலிஷ் மற்றும் தமிழில். பல்வேறு துறைகளில் ஆழ்ந்து எழுதுகிறார்.

படியுங்கள், என்ஜாய் செய்யுங்கள்.

வாழ்த்துக்கள்!

Friday, July 24, 2009

தொடர் கதையா தொடர் கட்டுரையா

பா.ராகவனின் இந்த தொடர்கதை பத்தி படித்தேன்....

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15

தொடர் கதையா தொடர் கட்டுரையா என்ற கேள்விக்கு என் கமென்ட் கிழே...

http://www.blog.sanjaigandhi.com/2009/07/blog-post.html

மேலே உள்ள உதாரணம் பாருங்கள். அடுத்த பார்ட் எப்போ வரும் என நான் வெயிடிங்.

தொடர் கட்டுரைகள் தான் இந்த காலத்திற்கு உதவும். இணையத்தின் வித்தகம்.

***

வாசந்தியின் கதை - விகடனில் நன்றாக இருந்தது!

ஸ்டெல்லா ப்ருஸ் எழுதிய இன்னொரு தொடர் இன்னும் வேண்டும் என இருந்தது.

சுஜாதா மாதிரி வராது!

அப்புசாமி கதைகள் இன்னும் அருமை...