Friday, November 28, 2008

ஒபாமா குழந்தைகள் புஷ்

அஹா என்ன ஒரு வித்தியாசம்? ஆள் பொறுத்து தாங்க அம்சம்! இண்டர்நெட்டில் பார்த்த படங்கள் இவை.


மும்பையில் இருக்கும் கூத்து பார்த்து, இன்று ட்ரிப் கேன்சல்.

Thursday, November 27, 2008

மனிதர்களின் மனம்

மும்பையில் இருந்து வெளிநாடு கிளம்பிய நண்பர், குண்டு வெடிப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் கிளம்பினார். ஒரு வாரத்திற்கு முன் தான் கணவருடன் மும்பை தாஜில் தங்கினார். இன்று தாஜ் நிலைமை?

அவர் எழுதிய பதிவு ஒன்று...

நியூ யார்க் வந்தாச்சு

அதில் அவர் கூறியிருக்கும் ஒரு சென்னை அம்மாவின் மனம், ஏமாற்று குணம், ரொம்ப சிந்திக்க வைக்கிறது.... வசதி வாய்ப்பு இருந்தும் ஏன்?

ஒரு வகையாக ஏமாற்ற ஆள் கிடைத்தால்... ஏமாற்றும் உலகம் இது தான்.

********

அத்வானியும், மோடியும் யு.பி.ஏ கவர்மன்ட்டை குறை சொல்லவில்லை. ஒற்றர்கள் தகவல் சரியில்லை என்றார்கள்...

மும்பையில் இன்னும் டேரரிச்டுகள் அட்டகாசம் ஓயவில்லை. ஒரு நூறு பேர் இருப்பார்கள் போல, பாக்கிகள்.

ஆண்டவா....

மும்பையில் பயங்கரம்

சொல்ல வார்த்தைகள் இல்லை.

நாடு எங்கே செல்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள் மும்பையில் அடிபட்டு உயிர் நீத்தொருக்கு... ஒரு 200 பேர் இறந்திருப்பார்கள் என்று மும்பை போலிஸ் ஐ.பி.எஸ். நண்பர் சொன்னார்.

நியூஸ் பேப்பரில் 80 என்று வரும். அப்படித்தான் உலகம்.

ஹாச்பிடல்களில், பணம் உள்ளவர்க்கு தான் திரீட்மன்ட்.

இன்னும் தாஜில் சண்டை. 100 பேர் கதி? பாரினர்ஸ் எல்லாம் தப்பிப்பார்களா?

****************

நாளை நான் மும்பை செல்ல வேண்டியது, என்ன ஆகும் தெரியவில்லை. ஓர் பெரிய டீல். ஏர்போர்ட் அருகில் தான் ஹோட்டல்.

பயம்.

சரி,

நண்பர் எழுதிய இந்த பதிவு, யோசிக்க வைக்கிறது.....

பாஸ்டனில் நான்

ஒரு நாள் முன்னாள் தான் மும்பையில் இருந்து ஊருக்கு கிளம்பினார்!

இப்போது தான் பேசினேன், யு.எஸ்.டிவிகளில் ஹிந்து மிலிடண்ட் ரிடாளியேசன் என்கிறார்களாம்.

கொடுமைங்க....

எல்லாம் நலமாக இருந்தால் சரி.

சாய் பாபா காப்பாற்று!

Wednesday, November 26, 2008

வாரணம் ஆயிரம்

ரசனையில்லாத படம். நான் கோவையில் சென்ற வாரம் பார்த்தது. எழுத இப்போ தான் டைம் கிடைத்தது. உடனே எழுத அப்பா ஒன்றும் பெரிய பிஸ்தா படம் இல்லை...


என்னமோ தெரியலே, காக்க காக்க எடுத்த ஆளா இவர் என்று சொல்ல வைக்கிறார், கவ்தம்.

பாடல்கள் கேட்கும் விதம். சுதா ரகுநாதன் வருகிறார், பாம்பே ஜெயஸ்ரீக்கு... ஹாரிஸ் ஜெயராஜ், ஏசுநாதர் பாடல் மாதிரி செய்திருக்கிறார். அல்லேலூயா.

அதுவும் அரசியல் கூட்டணியோடு ரிலீஸ் செய்துள்ளார், மு.க.அழகிரி மகன். சொல்ல வேண்டுமா, எப்படி தியேட்டரில் ஓட்ட வைப்பார்கள் என்று?

இது கமல் நடித்திருக்க வேண்டிய கதை. சூர்யா மாதிரி ஒரு மட்டமான வேஸ்ட் நடிகர் எனக்கு தெரியவில்லை. அவர் தம்பி பரவாயில்லை.

அமேரிக்கா மோகம், கட்டாயம் சூட்டிங் செய்ய வசதி... காசு பணம் இப்படி நடுத்தர வர்க்கம்...

இது பாரஸ்ட் கம்ப்பின் ஆப்சூட்... அப்பா சூர்யா தான் தம் ஹாங்க்ஸ் செய்த கேரக்டர்... பப்பா யார்... இன்னும் தெரியவில்லை புரியவில்லை... சிம்ரன் அருமை.... எனக்கு அவர் இன்னும் ஹீரோயின் தான். குழப்பமான கதை அமைப்பு.

படம் டப்பா. ப்ளீஸ் கவ்தம், விட்ருங்க. ஐ.டி. ஜாபுக்கு போங்க. யு.எஸ். உங்களை வரவேற்கிறது. நான் படம் எடுக்கிறேன்...

குழந்தைகளும் வந்திருந்தார்கள், எல்லாம் ஏ.சி. தியேட்டரில் குறட்டை விட்டு தூங்கியது அருமை.... காட்சி!

என்ன இந்த படம் பார்த்தால், எனக்கு கோவை அன்னபூர்னாவில் (ஆர்.எஸ்.புரம்) ஒரு கட்டு கட்டு , வெட்டு வெட்ட முடிந்தது, நல்ல டிபன். ரோஸ்ட். சேவை. புரோட்டா. ரோஸ் மில்க். ஹி ஹி ....

Tuesday, November 25, 2008

இராப்பிச்சைக்காரி

எங்கள் வீட்டு அருகில் இருக்கும் குட்டை குளம் அருகே இருக்கும் ஷண்டியில் வாழும் ஒரு இராப்பிச்சைக்காரி , தினமும் காலை பூ விற்கிறாள்.

ஏன் இராப்பிச்சைக்காரி ? அவள் இரவுகள் இரந்து உன்னுவாள்.

தினம் காலை ஏழு மணிக்கு வந்து விடுவாள், பார்ப்பதற்கு படு சுத்தமாக இருப்பாள்...

இன்று காலை பூவிற்கு காசு கொடுக்கும் போது கேட்டேன்... (காசு உடனே வாங்கிவிடுவாள், கறார்... கடன் இல்லை...) ஏன் இரவல் பிச்சை எடுத்து உண்ணுகிறாய்?

*********

அவர் ஒரு ஜாமீன் பரம்பரை சேர்ந்தவளாம்... தும்கூர் அருகே..

அவர்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவனோடு காதல் வயப்பட்டு நகரத்திற்கு வந்துவிட்டாள், பதினெட்டு வயதில். குழந்தை இல்லை. இருபது வருட குடும்ப வாழ்க்கை, நல்ல வீடு, கணவன் எதோ வொர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தான்.

ஒரே ஒரு முறை, மீனாட்சி கோவிலில் (அவள் இருக்கும் இடம் அருகில் தான்) அவள் அப்பா அம்மாவை பார்த்தாளாம்... எதோ கட்சியில் இருக்கிறார்... பேரன் பேத்திகளுடன் வந்திருந்தாராம்... இப்போது தெரியவில்லையாம்..

அதனால் தான் அந்த கோவில் அருகே இருக்கிறாள். கணவன், இன்னும் தனியாக வயதான காலத்தில், வாழ்கிறான்.

இப்போது அவளுக்கு வயது அறுபது, நாற்பது என்று சொல்ல தோன்றும் ...

சரி ஏன் பிச்சை? அவர் அடுப்பு பற்ற வைப்பதில்லை. காலையில் பூ விற்கும் காசில் எதாவது உணவு. பிறகு கோவிலில் சென்று பூ விற்க, அபப்டியே எதாவது பிரசாதம் வந்தால், சாப்பாடு. வரும் வருமானத்தை, கணவனுக்கு கொடுத்து விடுகிறாள். இரவு மட்டும் நோந்துகிட்ட வேண்டுதலாம்... அதனால் பிச்சை.

எப்படியாவது அவள் அப்பா அல்லது அண்ணன்மார்கள் அவளை அழைத்து செல்வார்களாம் கூடிய விரைவில். நம்புகிறாள்.

அவள் கணவன் அவள் ஊரில் இராப்பிச்சைக்காரி யின் மகன்.

சொர்கமும் கடவுளும் நம் ஊரும்

அருமையான பாடல், நண்பரின் ப்ளோகில் இருந்தது.... ராமராஜன் மற்றும் கவ்தமி கலக்குகிறார்கள்... இளையராஜாவின் இசைமழை... அருமை...



நாம் கேட்பதை கொடுக்கும் கதவில் இருந்திருந்தா, நல்லா இருந்திருக்கும்.

விண்வெளியும் மனதும்

நிலவை காட்டி சோரூட்டினேன்
பசியாறினான் மகன்
நிலவை காட்டி மகிழ்வு செய்தேன்
கொஞ்சினால் மகள்

உன் முகத்தில் நிலவு பார்க்கிறேன்
என்று சொன்னேன் மனைவியிடம்
அன்போடு தழுவி
ஆனந்தம் அடைந்தாள்

நிலவை பிடித்துவிட நீ
நன்றாக படித்துவிடு என்றேன்
அட போப்பா நீ
என்று சொன்னான் மகன்

Monday, November 24, 2008

நாகார்ஜுனனின் பதிவும், சிறப்பான பின்னூட்டங்களும்

நாகார்ஜுனனின் பதிவும், அதில் இடப்பட்ட சிறப்பான கருத்துக்களும், சிறப்பான பின்னூட்டங்களும் நீங்கள் படிக்க வேண்டிய அவசியமான ஒன்று.

"சென்னை சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை"

நான் எழுதிய பின்னூட்டம் இதோ....

அருமையான சுட்டிக்காட்டல். சிறப்பான பின்னூட்டங்களும் புரிதலை, மெருகூட்டுகிறது.

கண்டிப்பாக, ஒரு இன்க்ளுசிவ்னஸ் இல்லாமல், பல வித ஜாதி அமைப்புகள், புரியாமல், 'இது நம்ம ஆளு' என்று விதண்டாவாதம் செய்து ஒரு சொலுசன் இல்லாமல் செய்துவிடுவார்கள்.

இங்கே தான் லிட்டேரசியும் வருகிறது. படிப்பறிவு குறைவாக உள்ள கிராமங்களில், நாட்டுப்புற கூத்து மூலம் கருத்துக்கள் சொல்லலாம்.

ரயில்வே பவன், எனர்ஜி மிச்சபடுத்துகிறது

ரயில்வே பவன், எனர்ஜி மிச்சபடுத்துகிறது!

லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளார். எமெர்சன் (இந்தியாவின் டாட்டா வோல்டாஸ் கூட்டு) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தேவையான அளவு எ.சி. ஹீடிங் வசதி செய்து, நிறைய கரண்ட் செலவு மிச்சம் செய்து, சுற்று சூழல் (எ.சி. கூலன்ட்) கெடாதவாறு முயற்சி எடுத்து செய்துள்ளார்.

நல்ல தலைவர்.



அவர் வாழ்க வளமுடன்.

நிச்சயமாக அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி தான்!

இதை என் தமிழ்நாட்டு அரசாங்க ஊழியர் நண்பர்களுக்கு சொல்லியுள்ளேன். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று.

பரிசல்காரனின் வலைசரம்

பரிசல்காரனின் வலைசரம் இங்கே இருக்குங்க. இந்த வாரம் முழுதும் அங்கே, அவர் தன் சேட்டை வேட்டைகளை நடத்துவதாக கேள்வி.

கலக்குங்க! வாழ்த்துக்கள்! Best Wishes!

"ரஜினிக்கு பிடித்த பதிவு!"

அப்புறம் காலையில் நான் படித்த ஒரு பதிவு...

பரிசல்காரனின் தந்தை எனக்கெழுதிய கடிதம்!

அருமையா அருமை!

அப்புறம் எதோ ஒரு கான்ட்ராவர்சி போல இருக்கு....

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 ராகினிஸ்ரீ

Sunday, November 23, 2008

பெங்களூர் மழை கோவை மழை

எட்டேமுகாலுக்கு ப்ளைட் இறங்கிய நாங்கள், ஒன்பதேமுக்கால் மணிக்கு வீடு வந்தோம். மழையோடு பயணம். சில்லென்ற காற்று.

இதமான பயணம்... குழந்தைகள் ரொம்பவும் சந்தோசப்பட்டார்கள். ஜனவரியில் மீண்டும் சந்திப்போம்
.
இன்று காலை பேரூர் மற்றும் மருதமலை சென்று வந்தோம். விட்டது மழை. திரும்பும் வழியில், துணி பர்சேஸ். சூடான உணவு... நண்பர் வீட்டில். பிறகு ஏழு மணி வரை பேச்சு, அவர் குடும்பத்தோடு. ... ஏழு பத்துக்கு ஏர்போர்ட். எட்டு மணிக்கு ப்ளைட் கிளம்பியது. குலுங்கி குலுங்கி பெங்களூர் வந்து இறங்கினோம்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெயிட் லிமிட் 80 கிலோ. கொண்டு சென்றது 20 கிலோ. 60 கிலோ நல்ல அரிசி ராஜபோகம், எடுத்து வந்தோம். பெங்களூரில் கிடைப்பது கஷ்டம். கையில் எடுக்கும் விதமாக, மூன்று 20 கிலோ பிளாஸ்டிக் பேக்ஸ். உருப்படியாக வீடு வந்துள்ளது.

நல்ல பர்சேஸ். முக்கியம் குழந்தைகள் துணி... மறக்காமல், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா...

ஒரு சந்தோசம், எங்களோடு ஐ.ஐ.எம் மில் படித்த ஒருவர், இப்போது தாத்தா ஆகி உள்ளார். சந்தோசம் சுவாமிநாதன். சென்ற வருடம் தான் அவர் மகளுக்கு கல்யாணம். வாழ்த்துக்கள்.

அதற்குள், நண்பர் ஒரு பதிவு போட்டுவிட்டார்.... சில வரிகள்

காரிலேயே டைப் செய்தேன். மேரு டாக்சி பரவாயில்லை. 080 44 22 44 22.