Saturday, December 6, 2008

டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்

டிசம்பர் 6, இன்று. பயமில்லாமல் கழிந்தது. அரசாங்க வேலையில் இருந்த் போது, லீவு கூட கிடைக்காது. அமைதி உருவான அம்பேத்கர் அவர்கள் நினைக்க வேண்டிய தினம். இன்று போய் வேறு ஒன்று நினைவில் வருகிறது, பாபர் மசூதி இடிப்பு... பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, நான் அமெரிக்காவில் இருந்த சமயம், தூங்கி எழும் முன், தரைமட்டம்... கொடுமைங்க.

பயத்தோடு தான், இந்திய வந்து திரும்பினேன் அதன் பிறகு....

அம்பேத்கர் என் தாத்தா தன் பெயரை உயர் ஜாதி பெயர் என்று ஒன்றை ஒட்ட வைக்க காரணமாக இருந்த உறவினர்.

பின்னொரு காலத்தில் பர்மாவில் புத்த மதம் தழுவியவர். அதனால், ஜாதி மட்டும் அகலவில்லை. ஜாதி குறித்து பேசும் போது அம்பேத்கர் பெயர் நினைவுக்கு கண்டிப்பாக வரும். எஸ்.சி., எஸ்.டி. (பிரிட்டிஷ் காலத்தில், நோடிபிட் ட்ரிப்ஸ்) அட்டவணை அமைக்க நல்ல முயற்சி எடுத்தார்.

***

மர்மயோகின் கதை, எங்கள் மூதாதயரின் கதை. மீண்டும் நிறுத்திவிட்டார், கமல்.

************

இங்க படியுங்கள்... முத்துக்குமார் எழுதுகிறார்.

நாய், பூனை, இந்துமதம்

சிறுகதை பெட்ரோல் விலை குறைப்பு

பரிசல்காரன் சொல்கிறார்..... சிறுகதை எழுதுவது எப்படி?

நரசிம் சொல்கிறார்..... சிறுகதை எழுதுவது இப்படி.. யா???

எல்லோரும் நல்ல சிறுகதை எழுதுங்க....

**************

எப்படியோ பெட்ரோல் விலை குறைச்சுட்டாங்க, நீண்ட நாட்கள் ஜூலை முதல் பெண்டிங் போட்ட ட்ரிப்ஸ் எல்லாம் பண்ணனும்.

மன்மோகன் சிங் கட்டாயம் நல்லது செய்வார்.

ஐந்து ருபாய் குறைவு என்பது, மொத்தம் 6000 கோடி துண்டு விழ வைக்கும். அதற்கு எங்களை தான் டார்சர் செய்து டாக்ஸ் போட்டு கொல்லுவார்கள்.

வாழ்க இந்தியா.

ஒன்று கவனித்தீர்களா... அரசியல்வாதிகள் எல்லாம் வாழை சுருட்டி அடங்கிவிட்டார்கள்?

****************

பெண்ணிடம் வாலாட்டினால் என்ன கோபம் பாருங்கள்...

உதவிக்கு

Friday, December 5, 2008

ஹிந்தி ரஜினிகாந்த் நான்

இங்கே ஒரு அட்டகாசமான பதிவு ஒன்று.. ஹிந்தி படிப்பது பற்றி...

சில கருத்துக்கள் நல்ல கோர்வை செய்யப்பட்டுள்ளது. நன்றி.

பெங்களூரில் தமிழ் படிக்க என் குழந்தைகள் பள்ளியில் நான் போய் கேட்டது உங்களுக்கு தெரியும். பிரின்சிபால் கேட்கிறார்...இரண்டு பேர் மட்டும் படிக்க வைக்க முடியுமா? மனைவி வீட்டில் சொல்லிக்கொடுக்கிறார்.

தமிழ் தெரியாமல், அதுவும், நான் காதல் செய்த போது, காதலி (இப்போ மனைவி) அவர் தமிழ் சொல்லிக்கொடுப்பார். தேர்ந்தெடுத்து, கெட்ட வார்த்தைகளாக கற்றேன். அப்புறம் இரண்டு வருடத்தில், ஒரு மசாலா கலவையாக... அப்புறம் 1994 முதல், கவர்மென்ட் ட்ரைனிங் முடித்தவுடன், சென்னை வந்த போது, டாகுமென்ட்ஸ் எல்லாம் தமிழில்.

கஷ்டப்பட்டு படித்தேன். இப்போது உங்களுக்கே தெரியும், கதையெல்லாம் எழுதும் அறிவு. நல்ல வேலை மறதி கிராமர் ஸ்டைல் தமிழ் மாதிரி தான். டப்பிங் ஈசி. என் மனைவியும் மராட்டி பழகி விட்டார், என் அம்மாவுடன் பேசும் அளவு. ஹி ஹி. (பேசுகிறார்கள் தான்..)

தாய்மொழி தவிர ஒரு நாட்டு மொழி படித்துவிடுவது நல்லது. இந்தியாவில் ஹிந்தி படிக்காவிட்டால் (ஜெயலலிதா ராமர் கோவில் கட்டும் விஷயம் பற்றி சொன்ன மாதிரி) வேறு எங்கு போய் படிக்க முடியும்? ஹிந்தி பேசுவது 60% பேர். எல்லோரும் திணிக்கவேண்டாம் என்று சொல்வது ஒக்கே தான். ஆனால், மூளை வளர்ச்சி பெற, அச்சுதானந்தன் மாதிரி ஆகாமல் இருக்க ஹிந்தி அவசியம்.

அட யோசிச்சு பாருங்க, ஹிந்தி இல்லாவிட்டால் டெல்லி மும்பை எர்போர்ட்டுகளில், நீங்கள் டாக்சிக்கு இரண்டு மடங்கு கொடுப்பீர்கள், நிச்சயம்... பாதி ஆட்கள் சாப்ட்வேர், வெளிநாடு என்று செல்பவர்கள் தனி ராகம்...

அப்புறம் இந்த ஸ்பானிஷ், பிரெஞ்சு போன்றவை... யுரோப் டூர் போகும் போது, பாதி காசு மிச்சம் செய்யலாம் மொழி தெரிந்தால். இண்டர்நெட்டில் தேடும் அளவு பயிற்சி வேண்டும். ஒரு ஸ்டைல் தான்... தாட் பூட் தஞ்சாவூர் என்கிறார் மனைவி. எனக்கு புரிகிறது. உங்களுக்கு?

எனக்கு என் தாய்மொழி எழுத படிக்க தெரியாது... கொஞ்சம் தான் தெரியும். நல்லா பேச தெரியும், மராட்டி. ரஜினிகாந்தும் அப்படி தான். ஆனால் அவர் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி அருகே நாச்சிகுப்பதில் பிறந்தவர். நானோ கல்கத்தாவில்... அதனால்...பெங்காலியில் விட்டு விளாசுவேன்.

நரி குறவர்கள் சொல்வார்கள் ஒரு எம்.ஜி.ஆர் படத்தில்... தாம் டிக்கோ தமுக்கு டப்பா... அதன் அர்த்தம் இன்னும் தெரியவில்லை. அது என்ன?

இப்போவெல்லாம், தமிழ் கெட்டவார்த்தையில் பாட்டு வருகிறது. மொழி அறிவு உச்சத்தில்.... அடல்ட்ஸ் ஒன்லி... ஜாக்கிரதை. ஆபீஸில் ஸ்பீகர் ஆப் ப்ளீஸ்.



பிரபுதேவாவின் குழந்தை மரணம்

பிரபுதேவாவின் குழந்தை மரணம் ... மகன் விஷால் பதிமூன்று வயதில், மூளை டூமரில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டார்.

மனது கஷ்டமாக உள்ளது.

குழந்தை பெற்றோருக்கு தான் தெரியும் அதன் வலி.

Heartfelt condolences to the family!

May the departed soul Rest in Peace!

Thursday, December 4, 2008

பலமும் பலவீனமும்

இந்தியாவின் ஒரே பலமும் பலவீனமும் ஜம்மு காஸ்மீர் தான்.

சரி என்ன செய்தால் நாடு உருப்படும்.

ஜம்மு காஸ்மீர் மக்களை கேட்க வேண்டும். கூட ஒரு வோட்டு போட சொல்லி இருக்கலாம்... யு.என். ஒத்துழைப்போடு, இரு பக்கமும்.

நாம் (ன்) எழுதி பிரயஜோனமில்லை. யாருக்கு தெரியும் எங்கு எப்போது எலெக்சன் நடக்கும் என்று. உள்ளூரில் சாராயம் குடிக்க பிரியாணி சாப்பிட காசு கொடுத்தால், தான் தேர்தல். இல்லையா?

அரசியல்வாதிகள், கேடுகெட்ட மனிதர்கள். அவர்கள் யோசிக்க மாட்டார்கள்.

சவுத் இந்தியன்ஸ் எல்லாம், தான் ரெட் டேப் நடத்தும் ஆட்கள். செக்ரேடரிஸ் அட்வைசர்ஸ் போல அங்கு, நார்த் ப்லோக். இப்போ ஹோம் மினிஸ்ட்ரி தமிழ்நாட்டு கையில். இருவரும் ஹிந்தி தெரிந்த தமிழ். பார்க்கலாம்...

ஜம்மு காஸ்மீர் ... கஷ்டம்... உட்துறை கவனித்து வெளியுறவுத்துறை கவனிக்க வேண்டுமா?

தமிழர்களும் சாதிகளும் - நான் ரசித்த பின்னூட்டம்

தமிழர்களும் சாதிகளும் - நான் ரசித்த பின்னூட்டம் (ப்ளோகில் தான்!) இது என்னுடைய கருத்து கிடையாது...
=============================================================

தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் - அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.

உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை - அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் - தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது

மார்கழியும் சங்கீத சீசனும்

விஜய் டிவி மூலம், வீட்டில் காலை நல்ல சங்கீதம் ஒலிக்கிறது. பார்க்கவும் செய்வோம்.

மார்கழியும் சங்கீத சீசனும் ஒன்றோடு ஒன்று ஒட்டி பிறந்தவை.

யு டுப் மூலம், சில சிகழ்ச்சிகள் நான் பார்ப்பேன்.

கர்நாடிக் மூசிக் என்று தேடவும். சிலவற்றை நான் அறிமுகம் செய்கிறேன்.

இரவில் குளிருக்கு சங்கீதம் இனிமை.

எனக்கு கல்கத்தாவில் தான் கர்நாடிக் சங்கீதம் அறிமுகம் ஆனது. என்னோடு படித்த சேதுராமன், அழைத்து சென்றான். இப்போது அவன் இருப்பது டெட்ரோயட். அமேரிக்கா.

வருடா வருடம் கீளிவ்லாந்தில் சங்கீத நிகழ்ச்சி நடத்த உதவி செய்கிறான்.

அடுத்த வருடம் நான் அந்த பங்கசன் நடுக்கும் சமயம் டோலிடோவில் இருப்பேன்.

ஒரு சிறிய... அருணா சாய்ராமின்...

Wednesday, December 3, 2008

மும்பை தாக்குதலும் பிரபலங்களும்

மும்பை தாக்குதலும் பிரபலங்களும் என்ற பதிவு எழுதவேண்டியதில்லை தான்.

ஆனால் சில விஷயங்கள் பதிவில் போட்டால், நன்று.

அப்புறம் அமிதாபுக்கு கோபம். ஜெயமோகனுக்கு கோபம். எனக்கும் வருது. அடக்கிகிட்டேன். மனைவி சொல்கிறார், வந்த போயிட்டு வரவேண்டியது தானே. நிஜம். கோபம் வந்தால் மும்பை சென்று கத்திவிட்டு வர வேண்டும் போல இருக்குது.

இன்று அதை தான் செய்கிறார்கள், ஐந்நூறு பேர். அதையும் டிவி சேனல்கள் சென்று படம் பிடிக்கிறார்கள். என்ன கொடுமைங்க இது?

இந்தியாவில் ஐம்பதாயிரம் கோடிகள் நஷ்டம். எனக்கு ஒரு ட்ரிப் மூலம் 1500 ருபாய் நஷ்டம் டிக்கட்டுக்கு, கேன்சல் செய்ததில். அப்புறம், வர வேண்டிய பிசினஸ்? ஒரே மாஸ்டர்கார்ட் மொமன்ட்ஸ் தான். விட்டு பிடிக்க வேண்டியது தான்.

********

படித்ததில் பிடித்தது...

எஸ்.. பாஸ் !

ஹைகூ. - சில விளக்கங்கள்

பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்

தாவணிக்கனவுகள் - V/S - CINEMA PARADISO - ஒரு ஒப்பீடு !

ஹோம் மேக்கர்

பெண்மையும் உதவியும்

என்னுடைய அமேரிக்கா நண்பர் ஒருவரை மதித்து ஒரு பெண் பற்றிய பிரச்சனைக்காக, கோவை கல்லூரியில் படிக்கும் ஒருவரின் உறவினர் நாடியிருந்தார்.

அது ஒரு பெண் இழிவு சமாசாரம், ஒரு நல்ல ஆசிரியர் செய்யும் வேலை அல்ல அது.

அதை நல்ல முறையில், முடித்து கொடுத்து, ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு உதவி செய்துள்ளார். வாழ்த்துக்கள்.

பிரச்சனைகள் தீர்வுகள்

இந்த ப்லோக் மூலமும் நிறைய உதவிகள் செய்யப்படுகின்றன.

Tuesday, December 2, 2008

புரியாத புதிர்

கண்டோலீசா ரைஸ் எதற்காக இந்தியா வருகிறார்? அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர், பில் கிளின்டன் (ஆமாங்க புஷ் சொல்லலே) சொன்னதற்காக இந்தியா வருகிறார்... போர் நிறுத்தம், இன்னும் ஆரம்பிக்காத ஒன்று.

லண்டனில் இருக்கும் அவர், பாகிஸ்தான் இந்தியாவிற்கு நல்லா ஆதரவு கொடுக்க வேண்டும் என்கிறார்.

ஒபாமாவும் ஹில்லரி கிளிண்டனும், இந்தியா பாகிஸ்தான் மீது குண்டு போடுவது (தீவிரவாதிகள் மேல் - அப்படி என்று சொல்லி) தான் நல்லது என்கிறார்கள். பயந்து?

சர்தாரியும், தீவிரவாதிகள் அக்கிரமம் செய்தால், பாகிஸ்தானியர்கள் என்பதால், எங்களை மிரட்ட வேண்டாம் என்கிறார்.

"சமீபத்தில்" 1971 பங்களாதேஷ் வாருக்கு பிறகு, மீனும் "மிக சமீபத்தில்" கார்கில் போர் 1999 நடந்தது. அதற்கும் அரசியல்வாதிகளுக்கும் பாகிஸ்தானியர்கள் சம்பந்தமில்லை .எஸ்.. தான்.. என்றார்கள்...

இது ஒரு புரியாத புதிர்!

Monday, December 1, 2008

மும்பை தீவிரவாதிகள் லைவ் டிவி

மும்பை தீவிரவாதிகள் லைவ் டிவி என நடந்த கூத்து அசிங்கம்.

புதிய உள்துறை அமைச்சர் அதனை தட்டி கேட்பாரா?

என்.எஸ்.ஜி. தலைவர் சொன்னது...

என்.டி.டிவி தான் உண்மை நிலையை உடனுக்குடன் தீவிரவாதிகளுக்கு கொடுத்தனராம்.

ஒவ்வொரு இன்னொசென்ட் உயிரும் அப்போ என்.டி.டிவி பொறுப்பு அல்லவா?

******

தமிழ் சினிமா நடிகர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ... ஒருவர் கூட மும்பை நிகழ்ச்சி குறித்து இரங்கல் தெரிவிக்கவில்லை.

இது தாண்டா உலகம்!

Sunday, November 30, 2008

அரசியல் வாரிசுகள்

வாரிசுகள் யார் என்ற கேள்வி?

குடும்பங்களின் ஆக்கிரமிப்பு...

போன்றவை, தமிழ்நாடு கட்சிகள் சாபம்.

நீங்கள் எழுதியிருக்கிறீர்களா?

கட்சி மாறிய பிரபலங்கள் பற்றி எழுதினீர்களா?

தொடர்புடைய ப்லோக் "இதுதான் கட்சிகளின் கதை!"

தீவிரவாத போதை

இந்தியாவில் ஏன் மக்கள், தீவிரவாதம் செய்ய போக்ரிஆர்கள். அது ஒரு போதை.

வேலை இல்லா இளைஞர்கள் கிராமத்தில் கத்தி கப்படா (ஹிந்தியில் துணி) எடுப்பதை போல, இதுவும் நடக்கிறது.

சினிமா தான் காரணம்.

வன்முறையை ஆராதனை செய்கிறார்கள், மானங்கெட்ட ஜென்மங்கள்.

வன்முறை காட்டி, அதற்கு தீர்வு வன்முறை என்பது தவறு.

எவ்வளவோ வழிகள் உள்ளன.

மும்பை டேரரிச்டுகள் செய்தது, சிறு விஷயம் என்று நண்பர் ஆர்.ஆர்.பாட்டில் (துணை முதல்வர், மஹராஸ்ட்ரா கூறுகிறார்) என்னங்க நியாயம் இது? அவர் குடும்பத்தில் ஒருவர் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும். எப்படி தாஜில் இருந்த பதினைந்து எம்.பிகளும் தப்பினார்கள்?

தொடர்புடைய பதிவு... சில நிகழ்வுகள்