Friday, March 13, 2009

பரிசல்காரன் என் எனிமியா?

பரிசல்காரன் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன், பதிவுகள் எழுத.

தமிழ் வலிபூக்களில் ஒரு வித்தியாசமான முயற்சியில், அவர் செய்த கூத்துக்கள் அருமை.

இப்போது அவர் புதிய பதிவில் இருந்து......

எதிரிகளைக் காதலிக்கிறேன்!

*********


சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் வந்ததன் சாராம்சம் இது. ஹாலிவுட்டில் 70-80 களில் பிரபல நகைச்சுவை நடிகரான ஜார்ஜ் கார்லின் (சமீபத்தில் காலமானார்) சொன்னவை...

நமது வாழ்வின் முரண் என்னவென்றால்...

நாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம்.
பெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது.
நிறைய வசதிகள் இருந்தாலும், குறைவான நேரமே இருக்கிறது. நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்..

நிறைய குடிக்கிறோம், நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம், வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம், தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை!

நிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..? ஒரு கணத்தில் வெறுக்கிறோம்.

மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.

-இப்படியே போகிறது அந்த மின்னஞ்சல்.

Wednesday, March 11, 2009

கூட்ஸ் வண்டி கவிதைகள்

கூட்ஸ் வண்டி என்ற வலைப்பதிவை படித்தேன்.... அஜயன்பாலா என்பவர் எழுதுவது.

இந்த கவிதை, என்னை மிகவும் லயிக்க வைத்து.

வார்த்தை விளையாட்டு!

***************

இரு காதல் கவிதைகள்

1
போனேன் கண்டு கலங்கி
அழகான பெண் ஒன்றை ஒர் நள்ளிரவில்
இன்னமும் தீராது நடுநடுங்கி மனசு
மண் புயலில் சுற்றி சுழலும் காலம்
கண்களில் மண் அப்பி
இறைவன் கொண்டு செல்வான் என வியந்து
கை தூக்கி நிற்கிறேன்
அவ்ள் கடந்து சென்றபோது
அதிர்ந்த ஸ்லீப்பர் கட்டைகளின் இடி முழக்கத்தில்
நொறுங்கி தூளாகும் என் எலும்புகளின் ஓசையுடன்
அசையா புகைப்படமாய்
கம்ப்யூட்டரில் ஒட்டியிருக்கிறது
உன் திரு.மதி.முகம்.
2
நேற்று நான் பாத் ரூமில் கதவை
தட்டியபோது
ஒரு குளிர் காற்றாய் உன் வளைக்கரம்
கன்விலே முகிழும்போது மட்டும்
ஏன் கொண்டை போட்டு வரவேண்டும்
என் கண்மணி
நேற்று நீ குளித்த் ஆற்றில்
செத்து விழுந்தனவே என் மன
பாரம்தாங்காதந்தகிளைகள்.
இன்னமும் மனசை மயக்குக்கிறது
நீ விட்டுச்சென்ற கல்லின்ஈர மஞ்சள்.

Tuesday, March 10, 2009

என் கவிதை

என் கவிதை ஒன்று கிழே... (பழசு)

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

*************

இது புதுசு

காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!


Monday, March 9, 2009

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் நேற்று பெண்களால் கொண்டாடப்பட்டது. வாழ்த்துக்கள்.

அரை கிலோ ஸ்வீட்சும், பெங்களூரு கோரமங்களா சாந்தி சாகர் உணவும் என்று கழிந்தது.

ஞாயிறு என்றால் எப்படியும் வெளியே உண்ணும் பழக்கம், இன்னும் மாறவில்லை.

ஹோலி இன்று/நாளை. கல்கத்தாவில் ஒரே குஷி சமயம். சிறு வயதில் மதுரா சென்ற ஞாபகம் இப்போ வருது. கிருஸ்னர் கோவிலும், வறண்ட ஜிலேபியும், இன்னும் மறக்கவில்லை.

எல்லோருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்.