Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Friday, May 22, 2009

ஆட்சிக்கு பார்முலா, குடும்பம், பதவி, யு.பி.ஏ.

இப்போது யு.பி.ஏ. அரசு இரண்டாம் முறை பதவி ஏற்க உள்ளது, சயந்திரம் ஆறரை மணிக்கு.

ஆட்சிக்கு பார்முலா , யு.பி.ஏ., குடும்பம், பதவி என போகிறது ஆச்சி கப்பல்.

சென்ற ௨00௪ சமயம், வகுத்த பார்முலா இது -

ஆறு எம்.பிக்கு ஒரு கேபினட். மொத்தம் முப்பது கேபினட் அமைச்சர்கள் இருந்தார்கள். ( இதில் ஏழு ராஜ்ய சபா உறுப்பினர்கள் )

மூன்று எம்.பிக்கு ஒரு மினிஸ்டர் ஆப ஸ்டேட். மொத்தம் முப்பத்தி ஏழு கேபினட் அமைச்சர்கள் இருந்தார்கள். ( இதில் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்கள் )

ஆக, காங்கிரஸ் 147 எம்பிக்களுடன், மொத்தம் முப்பது அமைச்சர்கள் வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சிதம்பரம், வாசன், தங்கவேலு, இளங்கோவன் என தலைவர்கள்...

தி.மு.க 16 எம்.பிக்களுடன் , மொத்தம் ஏழு அமைச்சர்கள் வைத்திருந்தார்கள். பார்முலா 3 + 4 ! ( 3 + 5 என்பதை, பா.ம.கவிற்காக 1 விட்டு கொடுத்தார்கள் ).

அப்புறம் உங்களுக்கு தெரியும் ஆட்சியில் அமர்ந்த மைனாரிடி அரசுக்கு ஆதரவு எம்.பிக்கள் மொத்தம் 221, மற்றும் 61 லேப்ட் எம்.பிக்கள் வெளியில் இருந்து ஆதரவு.

**********

சரி இப்போது என்ன நடக்கிறது?

மன்மோகன் சிங் அரசு இப்போது வைத்திருக்கும் ஆதரவு -

காங்கிரஸ் 206 எம்பிக்களுடன், மொத்தம் அமைச்சர்கள் நாற்பது வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்!

திரிணமூல் காங்கிரஸ் 20 எம்.பிக்களுடன் மொத்தம் ஏழு அமைச்சர்கள் எதிர்ப்பர்ர்கிறார்கள். ரயில்வே அமைச்சர் பதவி மமதாவிர்க்கு. பெண்களுக்கு சந்து போனதெல்லாம் ரயில்கள் ஓடும். பெங்காலிகள் நிறைய பேர் ரயில்வே அமைச்சரால் வேலை பெறுவார்கள்.

தி.மு.காவும் பதினெட்டு எம்.பிக்களுடன் மொத்தம் எட்டு அமைச்சர்கள் ( 4 + 4 பார்முலா ) எதிர்பார்கிறார்கள், அவர்கள் கேட்க்கும் இலாக்ககளுடன். சுகாதாரம் ( ஹெல்த் ) கனிமொழி, இண்டஸ்ட்ரிஸ் அ.ராஜா , ஐ.டி. & டெலிகாம் தயாநிதி, ஷிப்பிங் & சர்பேஸ் டிரான்ஸ்போர்ட் பாலு, ஸ்டீல் & கெமிக்கல்ஸ் அழகிரி ஆகியோர் கேபினட் மந்திரிகள், அப்புறம் பவெர், ரயில்வேஸ், பைனான்ஸ், டூரிசம், மற்றும் என்வைரன்மேன்ட் இலாக்காகளில் நான்கு மினிஸ்டர் ஆப ஸ்டேட் என கேட்கிறார்கள். பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் ஹெலன் டேவிட்சன் ஆகியோருக்கு வாய்ப்பு.

காங்கிரஸ் சொன்ன அயிட்டங்கள் ( அது தாங்க, இலாக்கா ) தி.மு.கவிற்கு பிடிக்கவில்லை. குடும்பம் ( அழகிரி, கனிமொழி மற்றும் தயாநிதி ) மந்திரிசபையில் உட்கார கூடாது என்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் காங்கிரஸ் கட்சியை குடும்பம் வைத்து நடத்துவார்கள். என்.சி.பி தலைவர் மகள் சுப்ரியாவை ராஜ்ய சபை எம்.பி ஆக்கினார். அப்புறம் இப்போது லோக் சபை எம்.பி செய்துவிட்டார், மந்திரி ஆக்குவார்!

டி.ஆர.பாலு மற்றும் ஆ.ராஜா ( லட்சம் கோடிகள் மேல் ஊழல் என்கிறார்கள்! ) அமைச்சரவையில் உட்கார மன்மோகன் சிங் விரும்பவில்லை. மிஸ்டர் க்ளீன் அவர்! இன்னொரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்! திருந்துவார்களா?

தி.மு.கா இல்லாவிட்டால் அ.தி.மு.க அமைச்சரவையில் பங்கு பெரும். மைத்ரேயன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். தமிழ்நாட்டில் தி.மு.க அரசு டிஸ்மிஸ். இருக்கும் ஒன்பது அமைச்சர்கள் வைத்து, இரண்டு கேபினட், இரண்டு மினிஸ்டர் ஆப ஸ்டேட் வேண்டும் என்கிறார்கள். ராகுல் காந்திக்கு ஆங்கிலம் பேசும் தலைவர்கள் என்றால் தான் பிடிக்கும்!

சரி கருணாநிதி கேட்பதில் என்ன தவறு?

Saturday, August 30, 2008

நான் தலித்

நான் தலித் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. மகார் இனத்தில் பிறந்தவன். ஒரு உயர்ந்த ஜாதி (தமிழ் ஐயர்) பெண்ணை மனம் செய்துள்ளேன் காதல் புரிந்து. அவரகள் வித்தியாசமான குடும்பம்.

எங்கள் குடும்பம் ஏன் தலித் ஆனது? ஆண்டு ஆண்டு காலமாய் எங்கள் குடும்பத்தினர், எங்கள் தாத்தா வரையில், மீனவ தொழில் செய்யாமல், பாலுக்கு எருமை வளர்ப்பு மற்றும், முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு மாமிசம் கிடைக்க மாடு வளர்த்தி கொடுத்தால், சில உயர் ஜாதி பிரிவினர் எங்களை தலித் (அதாவது கீழ் ஜாதி) என்று சொல்லி விட்டனர். சிலர் எங்கள் ஜாதியில் வீதி கலைஞர்கள் என்றும் சொல்வார்கள். கூத்தாடிகள் கூட்டம். எங்கள் ஜாதியில் பெருமை மிக்க எழுத்தாளர்களும், விளையாட்டுவீரர்களும் உள்ளனர். சில மத்ய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் உண்டு. பெல்காம் கர்நாடகாவில் சில குடும்பங்கள் உள்ளன. அடுத்த மகாராஷ்டிரா சீ.எம். எங்கள் ஜாதி தான். எங்கள் ஜாதியில் 90% வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்.

எங்கள் தாத்தா கஷ்டப்பட்டு, எங்கள் அப்பாவை எஞ்சினீர் ஆக படிக்க வைத்து கொல்கட்டாவிற்கு அனுப்பி வைத்தார். என்னையும், என் அக்காவையும், முறையே, எஞ்சினீர் மற்றும் டாக்டர் ஆக படிக்க வைத்து பெருமை சேர்த்தார். என்னை போலவே என் அக்காவும் காதல் மனம் புரிந்தார், தனது இருபத்தி ஒன்பதாவது வயதில். மாபிள்ளை அவரகள் கெக்வாத் ராஜா வம்சத்தில் பிறந்தவர், அமெரிக்காவில் டாக்டர்! இரு பெண் பிள்ளைகள். சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் மாரிலாந்து மாநிலத்தில் பெரிய வீட்டில் வாழ்கிறார்கள். என் அம்மாவும், அப்பா சென்ற வருடம் மறைந்தார், அங்கு தான் உள்ளார்.

ஆனால் ஒரு சிறு கிராமம் தான் எங்கள் இனத்தவரின் ஊர். கோலாபூர். செருப்பு விற்பதில் பெரிய பெயர் பெற்றது. உலக சிறப்பு வாய்ந்தது. ஹிந்து முஸ்லீம் ஒருமைப்பாடு இங்கு அதிகம். விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் செலவு செய்வது முஸ்லிம்கள் தான். அது ஒரு மரபு.

என் சித்தப்பா ஒரு முஸ்லீம் பெண்ணை மனம் செய்தார். அவரகள் ஒருபிள்ளைக்கு ஹிந்து பெர்யரும், ஒரு பிள்ளைக்கு முஸ்லீம் பெயரும் இட்டனர். வளர்ந்த விதத்தில் அவரகள் இருவரும், அமெரிக்காவில் வாழ்கின்றனர், ஹிந்துகளை மணம் செய்து. அவரகள் இருவரும் மணம் முடித்து, திரினிடட்மற்றும் டோபாகோ தீவு நாட்டை சேர்ந்தவர்களை.
அவரகள் கோலாபூர் வந்தால் ஹெலிகோப்டேரில் தான் வருவார்கள், மும்பையிலிருந்து.