Wednesday, December 31, 2008

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

எனது பதிவுபோதையின் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

= ரமேஷ் =

Sunday, December 28, 2008

பெருவெளி

பெருவெளி என்றால் அண்டம், கேலக்சி.

இந்த பெருவெளியில் (மில்கி வே) இருபது உலகம் - பூமி.

அருமையான தோசை போன்றது இந்த பெருவெளி.

புரியாத தமிழ் என்று நிறைய இருக்கிறது....

நிறைய பேர் எழுதுகிறார்கள்...

சினிமாவில், எல்லாம் இது நடைபெறாது.... நான் பார்த்த இரண்டு படங்கள், சென்ற வாரத்தில்...

The curious case of Benjamin Button என்ற படம், முதுமையில் தொடங்கி இளமையில் (குழந்தையாக) வந்த முடியும் ஒருவனின் வாழ்க்கை... பெஞ்சமின் பட்டன்... அருமை. ஒரு சிறுகதை காவியம் ஆனது...

திண்டுக்கல் சாரதி என்ற படம் பார்த்தேன். கருணாகரன் என்ற கருணாஸ் அருமையாக நடித்துள்ளார். ஒரு தமிழ்நாட்டு (அல்லது உலகத்தின்) மனதை படம் பிடித்துள்ளார்.

மனம் தான் முக்கியம், கலர் என்ன?

பெருவெளியில் இதெல்லாம், சகஜம்.

Tuesday, December 23, 2008

ஸ்கூல் கிறிஸ்தமஸ்

இங்கே தீபாவளி என்று செய்வதில்லை ஸ்கூலில்.

அதென்னவோ கிறிஸ்தமஸ் மட்டும் செய்கிறார்கள்.

நீங்கள் சொல்லுங்கள்.

தெர்மாகோல் பெல் செய்து அனுப்பினேன் இன்று...

ஆங்கிலேயர்கள் ஆதிக்கம். கொடுமை.

Monday, December 22, 2008

புதுசு

சில பதிவுகள் படித்தேன்... அருமை...

என்னுடைய இந்த பதிவிற்கு... சத்யம் தவறிய கதைகள் ஒரு கமன்ட் கூட வரவில்லை. நன்றி. ஷ்.... அப்பாடா...

முதலில் பரிசல்காரனின் அபியும் நானும் படம் விமர்சனம்... அபியும் நானும் - விமர்சனம்

நாட்டில் இப்படியும் நடக்கிறது... திருட்டு கல்யாணங்கள்

ஒரு கதை .... பென்டியம் மனிதர்கள்

****************

வீடு வாங்குவதற்கு இது நல்ல நேரம். சென்னை அண்ணா நகரில் ஒரு பிளாட் 5800 ஒரு சதுர அடிக்கு விற்றது, சனிக்கிழமை என் மாமனார், 3100 ரூபாய்க்கு அட்வான்ஸ் கொடுத்தார். விலை வீழ்ச்சி ஒரு வருடத்தில். வாழ்க ரியல் எஸ்டேட்.

Friday, December 19, 2008

சத்யம் தவறிய கதைகள்

சேர்த்து வைத்து ஏமாற்றுவது சிலருக்கு கை வந்த கலை போல உள்ளது. சத்யம் நிறுவனம் இப்படி செய்துவிட்டார்கள் என்று முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டு நிற்கிறார்கள். இன்னும் எப்.ஐ.ஐ. மேனேஜ்மன்ட் குழுவை மாற்றவில்லை. டுபாகூர் கம்பனி.

நேற்று சி.என்.என். ஐ.பி.என் சேனலில் ஒரு ப்ரோக்ராம்.... இப்படி செய்தது நியாயமா என்று கேள்வி. பத்து மணிக்கு என்.டி.டிவியும் கேட்டு துளைத்தார்கள்.... முடிவு சொல்ல தெரியவில்லை...

இதை படியுங்கள்....

சத்யமும் வியாபாரமும் திருட்டுத்தனமும்

சத்யம் தவறிய சத்யம்

****************************************************

சரி சிறு இன்வேஷ்டர்கள் என்ன செய்ய வேண்டும். இது ஒரு மட்டமான ஸ்டாக் என்று வெளியேற வேண்டும். வேறு பார்க்கலாம்...

Wednesday, December 17, 2008

ஷூவும் புஷும்

எல்லோரும் எழுதிவிட்டார்கள்... ஷூவும் புஷும் .... ~ .... பற்றி... ஷூவும் புஷும் ஒரு காவியம்... மக்களுக்கு... செருப்பால் அடிப்பது இராக்கில் கேவலம்... மக்களுக்கு ஒரு வகை கோபம்....

சிலது மிகவும் அருமை...

shoes, slippers

புஷ்’ஷூ’

ஒபாமா இதை பற்றி கருத்து சொல்லவில்லை. வஞ்ச புகழ்ச்சி?

Monday, December 15, 2008

எந்த நாடு பெரியது

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்னீரும் விளையாடுது
மூன்று தமிழ் ஓங்கும் இடம் எங்கள் நாடு.... ஓய்...

பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக் காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திருமஞ்சள் முக சிலையல்லவா

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

யானைகட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
திருக்கோயில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

****************

இது ஒரு சிவாஜி பட பாடல். என்னுடைய நானூறாவது பதிவின் - உண்மை.

நான்கு மாதங்களில் நானூறு பதிவுகள். கிட்டத்தட்ட 24000 வாசகர் பார்வைகள். நன்றிகள்.

கடந்த ஆறு நாட்களாக பிசி. வேலை... சரி மீண்டும் எழுதுகிறேன். நிறைய பேர் கமண்ட்ஸ் போட்டுள்ளார்கள்.

என்னுடைய
Astrology and Ayurveda ப்லோகும் 8000 பார்வைகள் பெற்றது. நன்றி.

Tuesday, December 9, 2008

படித்ததில் பிடித்தது

கவிதை தலைப்பை க்ளிக்கினால், எழுதியவரின் இடத்திற்கு செல்லும்.

புத்தரும் நானும்

ஈரத்தெருக்களை ரசித்தவாறே
மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்..
உற்றுப் பார்த்த விழிகளுக்குள் புத்தர்
புத்தரா என வினவியதற்கு
ஆமென்று தலையசைத்தார்
இலங்கையிலிருந்து திரும்பியிருந்த புத்தர்
முடிவில்லா வன்முறைகளைப் பற்றிய
என் கேள்விகளுக்கெல்லாம்
புன்னகை பிரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்
புத்தர்கள் தோன்றுவது இங்கு வீண் என்று.
மக்கள் திடீரென்று திரண்டனர்;
சிலர் அவரைக் கிள்ளிப் பார்த்தனர்
சிலர் இழுத்துப் பார்த்தனர்
கைப்பேசியில் அவசரமாய் புகைப்படம் எடுத்தனர்
அரசியல்வாதிகள் சிலர் கட்சியில் சேரும்படி
மிரட்டியும் கெஞ்சியும் கேட்டுக்கொண்டனர்
எல்லாத் தொலைக்காட்சியிலும்
அலை அலையாய் புத்தர் நிரம்பினார்!
முடிவில்லா கேள்விகளின் கூர்முனைகளில்
ஓய்ந்த புத்தர்
தப்பித்துப்போக எத்தனித்தார்
அவருக்கு முன் வந்து விழுந்த
ஒரு கைத்துப்பாக்கியையும்
ஒரு கூரான கத்தியையும்
தன் மென் கரங்கள் நடுங்க
எடுத்துப் பார்த்தபடி.

*******************

படித்ததில் பிடித்தது..

நரசிம் எழுதிய மனசுக்கு ரீசார்ஜ்.!. குளிச்சா..

வினிதா சுட்டிகாட்டிய இதுவும் ஒரு வகை டேரரிசம் தான்

திவ்யாவின் வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்

****

அடுத்த பதிவு நான்கு மாதத்தில் நானூறு...

ஏதாவது என்னை எழுதவேண்டும் என்றால், சொல்லுங்கள்.

நன்றி.

Monday, December 8, 2008

கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும்

இந்தியாவில் கல்யாணம் என்ற கூத்து பெற்றோர்கள் மனசு திருப்தி படுத்த மட்டும் நடைபெறும் விஷயம் ஆகிறது. குழந்தைகள் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என காரணம் இருக்கலாம்.

நானும் காதல் திருமணம் செய்தவன். என் மனைவி குடும்பத்தோடு நன்கு பழகிய பிறகு தான் திருமணம் என்ற பேச்சு. முதலில் நண்பராக ஆரம்பித்து, பிறகு, ஒரு புது உறவு ஆனது... ஜாதியெல்லாம் இடம் பெறவில்லை.

எனது வக்கீல் நண்பர் ஷைலஜா சொல்கிறார்... இப்போதெல்லாம், 1990 இக்கு பிறகு நடந்த திருமணங்களில், இந்தியாவில் மட்டும் ௰% டைவேர்ஸ் ஆகிறது என்று.

கவலை ... நிஜம்... என்ன தீர்வு?

பெண்களுக்கு ஒத்துவராவிட்டால், கணவனை (முன்னால் செய்வதற்கு) மற்றும் அவர்கள் குடும்பத்தை... அடித்து துவைத்து விடுகிறார்கள்... ஐ.பி.சி. செக்சன் 498 ஏ கொண்டு.

ஆண்களுக்கு தெரியவில்லை, அதே செக்சன் கொண்டு பெண் மீதும் வழக்கு போடலாம்... பணக்கார பெண்கள் செய்யும் கொடுமை.

காதல் கல்யாணம் ஒரு தீர்வு. மறுமணம் இன்னொரு தீர்வு. நிறைய கல்யாணங்கள்....

நானும் கோபப்பட்டு குமரி ஒரு ஆங்கில பதிவு போட்டுள்ளேன்.

IPC SECTION 498A

மாடிசன் கவுண்டியின் பாலங்கள்

இங்கே வாங்கலாம்... ஒரு அருமையான கதை. காவியம். மாடிசன் கவுண்டியின் பாலங்கள்!

லதனாந்த் அவர்களின் பரிசு போன்ற கதை இது.

சும்மா ஒரு அறிமுகம்.

இந்தியா மாநில எலக்சன்கள் முடிவுகள்

சமீபத்தில் ஆறு மாநில எலக்சன்கள் நடைபெற்றன. இன்னும் ஜம்மு காஸ்மீர் பாக்கி.

இன்று ஐந்து எண்ணப்படுகிறது. மக்களுக்கு என்ன லாபம்?

ராஜஸ்தானில் பி.ஜே.பி. விழுகிறது, காங்கரஸ் ஆட்சி பிடிக்கிறது.

டெல்லியில் காங்கரஸ் ஆட்சி தொடர்கிறது.

மத்ய பிரதேஷில் பி.ஜே.பி. ஆட்சி தொடர்கிறது.

ஷடீஷ்கரில் பி.ஜே.பி. ஆட்சி தொடர்கிறது.

மிசோராமில்
காங்கரஸ் ஆட்சி பிடிக்கிறது.

மக்களுக்கு நன்மை கிடைத்தால் சரி.

Saturday, December 6, 2008

டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்

டிசம்பர் 6, இன்று. பயமில்லாமல் கழிந்தது. அரசாங்க வேலையில் இருந்த் போது, லீவு கூட கிடைக்காது. அமைதி உருவான அம்பேத்கர் அவர்கள் நினைக்க வேண்டிய தினம். இன்று போய் வேறு ஒன்று நினைவில் வருகிறது, பாபர் மசூதி இடிப்பு... பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, நான் அமெரிக்காவில் இருந்த சமயம், தூங்கி எழும் முன், தரைமட்டம்... கொடுமைங்க.

பயத்தோடு தான், இந்திய வந்து திரும்பினேன் அதன் பிறகு....

அம்பேத்கர் என் தாத்தா தன் பெயரை உயர் ஜாதி பெயர் என்று ஒன்றை ஒட்ட வைக்க காரணமாக இருந்த உறவினர்.

பின்னொரு காலத்தில் பர்மாவில் புத்த மதம் தழுவியவர். அதனால், ஜாதி மட்டும் அகலவில்லை. ஜாதி குறித்து பேசும் போது அம்பேத்கர் பெயர் நினைவுக்கு கண்டிப்பாக வரும். எஸ்.சி., எஸ்.டி. (பிரிட்டிஷ் காலத்தில், நோடிபிட் ட்ரிப்ஸ்) அட்டவணை அமைக்க நல்ல முயற்சி எடுத்தார்.

***

மர்மயோகின் கதை, எங்கள் மூதாதயரின் கதை. மீண்டும் நிறுத்திவிட்டார், கமல்.

************

இங்க படியுங்கள்... முத்துக்குமார் எழுதுகிறார்.

நாய், பூனை, இந்துமதம்

சிறுகதை பெட்ரோல் விலை குறைப்பு

பரிசல்காரன் சொல்கிறார்..... சிறுகதை எழுதுவது எப்படி?

நரசிம் சொல்கிறார்..... சிறுகதை எழுதுவது இப்படி.. யா???

எல்லோரும் நல்ல சிறுகதை எழுதுங்க....

**************

எப்படியோ பெட்ரோல் விலை குறைச்சுட்டாங்க, நீண்ட நாட்கள் ஜூலை முதல் பெண்டிங் போட்ட ட்ரிப்ஸ் எல்லாம் பண்ணனும்.

மன்மோகன் சிங் கட்டாயம் நல்லது செய்வார்.

ஐந்து ருபாய் குறைவு என்பது, மொத்தம் 6000 கோடி துண்டு விழ வைக்கும். அதற்கு எங்களை தான் டார்சர் செய்து டாக்ஸ் போட்டு கொல்லுவார்கள்.

வாழ்க இந்தியா.

ஒன்று கவனித்தீர்களா... அரசியல்வாதிகள் எல்லாம் வாழை சுருட்டி அடங்கிவிட்டார்கள்?

****************

பெண்ணிடம் வாலாட்டினால் என்ன கோபம் பாருங்கள்...

உதவிக்கு

Friday, December 5, 2008

ஹிந்தி ரஜினிகாந்த் நான்

இங்கே ஒரு அட்டகாசமான பதிவு ஒன்று.. ஹிந்தி படிப்பது பற்றி...

சில கருத்துக்கள் நல்ல கோர்வை செய்யப்பட்டுள்ளது. நன்றி.

பெங்களூரில் தமிழ் படிக்க என் குழந்தைகள் பள்ளியில் நான் போய் கேட்டது உங்களுக்கு தெரியும். பிரின்சிபால் கேட்கிறார்...இரண்டு பேர் மட்டும் படிக்க வைக்க முடியுமா? மனைவி வீட்டில் சொல்லிக்கொடுக்கிறார்.

தமிழ் தெரியாமல், அதுவும், நான் காதல் செய்த போது, காதலி (இப்போ மனைவி) அவர் தமிழ் சொல்லிக்கொடுப்பார். தேர்ந்தெடுத்து, கெட்ட வார்த்தைகளாக கற்றேன். அப்புறம் இரண்டு வருடத்தில், ஒரு மசாலா கலவையாக... அப்புறம் 1994 முதல், கவர்மென்ட் ட்ரைனிங் முடித்தவுடன், சென்னை வந்த போது, டாகுமென்ட்ஸ் எல்லாம் தமிழில்.

கஷ்டப்பட்டு படித்தேன். இப்போது உங்களுக்கே தெரியும், கதையெல்லாம் எழுதும் அறிவு. நல்ல வேலை மறதி கிராமர் ஸ்டைல் தமிழ் மாதிரி தான். டப்பிங் ஈசி. என் மனைவியும் மராட்டி பழகி விட்டார், என் அம்மாவுடன் பேசும் அளவு. ஹி ஹி. (பேசுகிறார்கள் தான்..)

தாய்மொழி தவிர ஒரு நாட்டு மொழி படித்துவிடுவது நல்லது. இந்தியாவில் ஹிந்தி படிக்காவிட்டால் (ஜெயலலிதா ராமர் கோவில் கட்டும் விஷயம் பற்றி சொன்ன மாதிரி) வேறு எங்கு போய் படிக்க முடியும்? ஹிந்தி பேசுவது 60% பேர். எல்லோரும் திணிக்கவேண்டாம் என்று சொல்வது ஒக்கே தான். ஆனால், மூளை வளர்ச்சி பெற, அச்சுதானந்தன் மாதிரி ஆகாமல் இருக்க ஹிந்தி அவசியம்.

அட யோசிச்சு பாருங்க, ஹிந்தி இல்லாவிட்டால் டெல்லி மும்பை எர்போர்ட்டுகளில், நீங்கள் டாக்சிக்கு இரண்டு மடங்கு கொடுப்பீர்கள், நிச்சயம்... பாதி ஆட்கள் சாப்ட்வேர், வெளிநாடு என்று செல்பவர்கள் தனி ராகம்...

அப்புறம் இந்த ஸ்பானிஷ், பிரெஞ்சு போன்றவை... யுரோப் டூர் போகும் போது, பாதி காசு மிச்சம் செய்யலாம் மொழி தெரிந்தால். இண்டர்நெட்டில் தேடும் அளவு பயிற்சி வேண்டும். ஒரு ஸ்டைல் தான்... தாட் பூட் தஞ்சாவூர் என்கிறார் மனைவி. எனக்கு புரிகிறது. உங்களுக்கு?

எனக்கு என் தாய்மொழி எழுத படிக்க தெரியாது... கொஞ்சம் தான் தெரியும். நல்லா பேச தெரியும், மராட்டி. ரஜினிகாந்தும் அப்படி தான். ஆனால் அவர் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி அருகே நாச்சிகுப்பதில் பிறந்தவர். நானோ கல்கத்தாவில்... அதனால்...பெங்காலியில் விட்டு விளாசுவேன்.

நரி குறவர்கள் சொல்வார்கள் ஒரு எம்.ஜி.ஆர் படத்தில்... தாம் டிக்கோ தமுக்கு டப்பா... அதன் அர்த்தம் இன்னும் தெரியவில்லை. அது என்ன?

இப்போவெல்லாம், தமிழ் கெட்டவார்த்தையில் பாட்டு வருகிறது. மொழி அறிவு உச்சத்தில்.... அடல்ட்ஸ் ஒன்லி... ஜாக்கிரதை. ஆபீஸில் ஸ்பீகர் ஆப் ப்ளீஸ்.



பிரபுதேவாவின் குழந்தை மரணம்

பிரபுதேவாவின் குழந்தை மரணம் ... மகன் விஷால் பதிமூன்று வயதில், மூளை டூமரில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டார்.

மனது கஷ்டமாக உள்ளது.

குழந்தை பெற்றோருக்கு தான் தெரியும் அதன் வலி.

Heartfelt condolences to the family!

May the departed soul Rest in Peace!

Thursday, December 4, 2008

பலமும் பலவீனமும்

இந்தியாவின் ஒரே பலமும் பலவீனமும் ஜம்மு காஸ்மீர் தான்.

சரி என்ன செய்தால் நாடு உருப்படும்.

ஜம்மு காஸ்மீர் மக்களை கேட்க வேண்டும். கூட ஒரு வோட்டு போட சொல்லி இருக்கலாம்... யு.என். ஒத்துழைப்போடு, இரு பக்கமும்.

நாம் (ன்) எழுதி பிரயஜோனமில்லை. யாருக்கு தெரியும் எங்கு எப்போது எலெக்சன் நடக்கும் என்று. உள்ளூரில் சாராயம் குடிக்க பிரியாணி சாப்பிட காசு கொடுத்தால், தான் தேர்தல். இல்லையா?

அரசியல்வாதிகள், கேடுகெட்ட மனிதர்கள். அவர்கள் யோசிக்க மாட்டார்கள்.

சவுத் இந்தியன்ஸ் எல்லாம், தான் ரெட் டேப் நடத்தும் ஆட்கள். செக்ரேடரிஸ் அட்வைசர்ஸ் போல அங்கு, நார்த் ப்லோக். இப்போ ஹோம் மினிஸ்ட்ரி தமிழ்நாட்டு கையில். இருவரும் ஹிந்தி தெரிந்த தமிழ். பார்க்கலாம்...

ஜம்மு காஸ்மீர் ... கஷ்டம்... உட்துறை கவனித்து வெளியுறவுத்துறை கவனிக்க வேண்டுமா?

தமிழர்களும் சாதிகளும் - நான் ரசித்த பின்னூட்டம்

தமிழர்களும் சாதிகளும் - நான் ரசித்த பின்னூட்டம் (ப்ளோகில் தான்!) இது என்னுடைய கருத்து கிடையாது...
=============================================================

தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் - அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.

உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை - அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் - தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது

மார்கழியும் சங்கீத சீசனும்

விஜய் டிவி மூலம், வீட்டில் காலை நல்ல சங்கீதம் ஒலிக்கிறது. பார்க்கவும் செய்வோம்.

மார்கழியும் சங்கீத சீசனும் ஒன்றோடு ஒன்று ஒட்டி பிறந்தவை.

யு டுப் மூலம், சில சிகழ்ச்சிகள் நான் பார்ப்பேன்.

கர்நாடிக் மூசிக் என்று தேடவும். சிலவற்றை நான் அறிமுகம் செய்கிறேன்.

இரவில் குளிருக்கு சங்கீதம் இனிமை.

எனக்கு கல்கத்தாவில் தான் கர்நாடிக் சங்கீதம் அறிமுகம் ஆனது. என்னோடு படித்த சேதுராமன், அழைத்து சென்றான். இப்போது அவன் இருப்பது டெட்ரோயட். அமேரிக்கா.

வருடா வருடம் கீளிவ்லாந்தில் சங்கீத நிகழ்ச்சி நடத்த உதவி செய்கிறான்.

அடுத்த வருடம் நான் அந்த பங்கசன் நடுக்கும் சமயம் டோலிடோவில் இருப்பேன்.

ஒரு சிறிய... அருணா சாய்ராமின்...

Wednesday, December 3, 2008

மும்பை தாக்குதலும் பிரபலங்களும்

மும்பை தாக்குதலும் பிரபலங்களும் என்ற பதிவு எழுதவேண்டியதில்லை தான்.

ஆனால் சில விஷயங்கள் பதிவில் போட்டால், நன்று.

அப்புறம் அமிதாபுக்கு கோபம். ஜெயமோகனுக்கு கோபம். எனக்கும் வருது. அடக்கிகிட்டேன். மனைவி சொல்கிறார், வந்த போயிட்டு வரவேண்டியது தானே. நிஜம். கோபம் வந்தால் மும்பை சென்று கத்திவிட்டு வர வேண்டும் போல இருக்குது.

இன்று அதை தான் செய்கிறார்கள், ஐந்நூறு பேர். அதையும் டிவி சேனல்கள் சென்று படம் பிடிக்கிறார்கள். என்ன கொடுமைங்க இது?

இந்தியாவில் ஐம்பதாயிரம் கோடிகள் நஷ்டம். எனக்கு ஒரு ட்ரிப் மூலம் 1500 ருபாய் நஷ்டம் டிக்கட்டுக்கு, கேன்சல் செய்ததில். அப்புறம், வர வேண்டிய பிசினஸ்? ஒரே மாஸ்டர்கார்ட் மொமன்ட்ஸ் தான். விட்டு பிடிக்க வேண்டியது தான்.

********

படித்ததில் பிடித்தது...

எஸ்.. பாஸ் !

ஹைகூ. - சில விளக்கங்கள்

பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்

தாவணிக்கனவுகள் - V/S - CINEMA PARADISO - ஒரு ஒப்பீடு !

ஹோம் மேக்கர்

பெண்மையும் உதவியும்

என்னுடைய அமேரிக்கா நண்பர் ஒருவரை மதித்து ஒரு பெண் பற்றிய பிரச்சனைக்காக, கோவை கல்லூரியில் படிக்கும் ஒருவரின் உறவினர் நாடியிருந்தார்.

அது ஒரு பெண் இழிவு சமாசாரம், ஒரு நல்ல ஆசிரியர் செய்யும் வேலை அல்ல அது.

அதை நல்ல முறையில், முடித்து கொடுத்து, ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு உதவி செய்துள்ளார். வாழ்த்துக்கள்.

பிரச்சனைகள் தீர்வுகள்

இந்த ப்லோக் மூலமும் நிறைய உதவிகள் செய்யப்படுகின்றன.

Tuesday, December 2, 2008

புரியாத புதிர்

கண்டோலீசா ரைஸ் எதற்காக இந்தியா வருகிறார்? அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர், பில் கிளின்டன் (ஆமாங்க புஷ் சொல்லலே) சொன்னதற்காக இந்தியா வருகிறார்... போர் நிறுத்தம், இன்னும் ஆரம்பிக்காத ஒன்று.

லண்டனில் இருக்கும் அவர், பாகிஸ்தான் இந்தியாவிற்கு நல்லா ஆதரவு கொடுக்க வேண்டும் என்கிறார்.

ஒபாமாவும் ஹில்லரி கிளிண்டனும், இந்தியா பாகிஸ்தான் மீது குண்டு போடுவது (தீவிரவாதிகள் மேல் - அப்படி என்று சொல்லி) தான் நல்லது என்கிறார்கள். பயந்து?

சர்தாரியும், தீவிரவாதிகள் அக்கிரமம் செய்தால், பாகிஸ்தானியர்கள் என்பதால், எங்களை மிரட்ட வேண்டாம் என்கிறார்.

"சமீபத்தில்" 1971 பங்களாதேஷ் வாருக்கு பிறகு, மீனும் "மிக சமீபத்தில்" கார்கில் போர் 1999 நடந்தது. அதற்கும் அரசியல்வாதிகளுக்கும் பாகிஸ்தானியர்கள் சம்பந்தமில்லை .எஸ்.. தான்.. என்றார்கள்...

இது ஒரு புரியாத புதிர்!

Monday, December 1, 2008

மும்பை தீவிரவாதிகள் லைவ் டிவி

மும்பை தீவிரவாதிகள் லைவ் டிவி என நடந்த கூத்து அசிங்கம்.

புதிய உள்துறை அமைச்சர் அதனை தட்டி கேட்பாரா?

என்.எஸ்.ஜி. தலைவர் சொன்னது...

என்.டி.டிவி தான் உண்மை நிலையை உடனுக்குடன் தீவிரவாதிகளுக்கு கொடுத்தனராம்.

ஒவ்வொரு இன்னொசென்ட் உயிரும் அப்போ என்.டி.டிவி பொறுப்பு அல்லவா?

******

தமிழ் சினிமா நடிகர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ... ஒருவர் கூட மும்பை நிகழ்ச்சி குறித்து இரங்கல் தெரிவிக்கவில்லை.

இது தாண்டா உலகம்!

Sunday, November 30, 2008

அரசியல் வாரிசுகள்

வாரிசுகள் யார் என்ற கேள்வி?

குடும்பங்களின் ஆக்கிரமிப்பு...

போன்றவை, தமிழ்நாடு கட்சிகள் சாபம்.

நீங்கள் எழுதியிருக்கிறீர்களா?

கட்சி மாறிய பிரபலங்கள் பற்றி எழுதினீர்களா?

தொடர்புடைய ப்லோக் "இதுதான் கட்சிகளின் கதை!"

தீவிரவாத போதை

இந்தியாவில் ஏன் மக்கள், தீவிரவாதம் செய்ய போக்ரிஆர்கள். அது ஒரு போதை.

வேலை இல்லா இளைஞர்கள் கிராமத்தில் கத்தி கப்படா (ஹிந்தியில் துணி) எடுப்பதை போல, இதுவும் நடக்கிறது.

சினிமா தான் காரணம்.

வன்முறையை ஆராதனை செய்கிறார்கள், மானங்கெட்ட ஜென்மங்கள்.

வன்முறை காட்டி, அதற்கு தீர்வு வன்முறை என்பது தவறு.

எவ்வளவோ வழிகள் உள்ளன.

மும்பை டேரரிச்டுகள் செய்தது, சிறு விஷயம் என்று நண்பர் ஆர்.ஆர்.பாட்டில் (துணை முதல்வர், மஹராஸ்ட்ரா கூறுகிறார்) என்னங்க நியாயம் இது? அவர் குடும்பத்தில் ஒருவர் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும். எப்படி தாஜில் இருந்த பதினைந்து எம்.பிகளும் தப்பினார்கள்?

தொடர்புடைய பதிவு... சில நிகழ்வுகள்

Friday, November 28, 2008

ஒபாமா குழந்தைகள் புஷ்

அஹா என்ன ஒரு வித்தியாசம்? ஆள் பொறுத்து தாங்க அம்சம்! இண்டர்நெட்டில் பார்த்த படங்கள் இவை.


மும்பையில் இருக்கும் கூத்து பார்த்து, இன்று ட்ரிப் கேன்சல்.

Thursday, November 27, 2008

மனிதர்களின் மனம்

மும்பையில் இருந்து வெளிநாடு கிளம்பிய நண்பர், குண்டு வெடிப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் கிளம்பினார். ஒரு வாரத்திற்கு முன் தான் கணவருடன் மும்பை தாஜில் தங்கினார். இன்று தாஜ் நிலைமை?

அவர் எழுதிய பதிவு ஒன்று...

நியூ யார்க் வந்தாச்சு

அதில் அவர் கூறியிருக்கும் ஒரு சென்னை அம்மாவின் மனம், ஏமாற்று குணம், ரொம்ப சிந்திக்க வைக்கிறது.... வசதி வாய்ப்பு இருந்தும் ஏன்?

ஒரு வகையாக ஏமாற்ற ஆள் கிடைத்தால்... ஏமாற்றும் உலகம் இது தான்.

********

அத்வானியும், மோடியும் யு.பி.ஏ கவர்மன்ட்டை குறை சொல்லவில்லை. ஒற்றர்கள் தகவல் சரியில்லை என்றார்கள்...

மும்பையில் இன்னும் டேரரிச்டுகள் அட்டகாசம் ஓயவில்லை. ஒரு நூறு பேர் இருப்பார்கள் போல, பாக்கிகள்.

ஆண்டவா....

மும்பையில் பயங்கரம்

சொல்ல வார்த்தைகள் இல்லை.

நாடு எங்கே செல்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள் மும்பையில் அடிபட்டு உயிர் நீத்தொருக்கு... ஒரு 200 பேர் இறந்திருப்பார்கள் என்று மும்பை போலிஸ் ஐ.பி.எஸ். நண்பர் சொன்னார்.

நியூஸ் பேப்பரில் 80 என்று வரும். அப்படித்தான் உலகம்.

ஹாச்பிடல்களில், பணம் உள்ளவர்க்கு தான் திரீட்மன்ட்.

இன்னும் தாஜில் சண்டை. 100 பேர் கதி? பாரினர்ஸ் எல்லாம் தப்பிப்பார்களா?

****************

நாளை நான் மும்பை செல்ல வேண்டியது, என்ன ஆகும் தெரியவில்லை. ஓர் பெரிய டீல். ஏர்போர்ட் அருகில் தான் ஹோட்டல்.

பயம்.

சரி,

நண்பர் எழுதிய இந்த பதிவு, யோசிக்க வைக்கிறது.....

பாஸ்டனில் நான்

ஒரு நாள் முன்னாள் தான் மும்பையில் இருந்து ஊருக்கு கிளம்பினார்!

இப்போது தான் பேசினேன், யு.எஸ்.டிவிகளில் ஹிந்து மிலிடண்ட் ரிடாளியேசன் என்கிறார்களாம்.

கொடுமைங்க....

எல்லாம் நலமாக இருந்தால் சரி.

சாய் பாபா காப்பாற்று!

Wednesday, November 26, 2008

வாரணம் ஆயிரம்

ரசனையில்லாத படம். நான் கோவையில் சென்ற வாரம் பார்த்தது. எழுத இப்போ தான் டைம் கிடைத்தது. உடனே எழுத அப்பா ஒன்றும் பெரிய பிஸ்தா படம் இல்லை...


என்னமோ தெரியலே, காக்க காக்க எடுத்த ஆளா இவர் என்று சொல்ல வைக்கிறார், கவ்தம்.

பாடல்கள் கேட்கும் விதம். சுதா ரகுநாதன் வருகிறார், பாம்பே ஜெயஸ்ரீக்கு... ஹாரிஸ் ஜெயராஜ், ஏசுநாதர் பாடல் மாதிரி செய்திருக்கிறார். அல்லேலூயா.

அதுவும் அரசியல் கூட்டணியோடு ரிலீஸ் செய்துள்ளார், மு.க.அழகிரி மகன். சொல்ல வேண்டுமா, எப்படி தியேட்டரில் ஓட்ட வைப்பார்கள் என்று?

இது கமல் நடித்திருக்க வேண்டிய கதை. சூர்யா மாதிரி ஒரு மட்டமான வேஸ்ட் நடிகர் எனக்கு தெரியவில்லை. அவர் தம்பி பரவாயில்லை.

அமேரிக்கா மோகம், கட்டாயம் சூட்டிங் செய்ய வசதி... காசு பணம் இப்படி நடுத்தர வர்க்கம்...

இது பாரஸ்ட் கம்ப்பின் ஆப்சூட்... அப்பா சூர்யா தான் தம் ஹாங்க்ஸ் செய்த கேரக்டர்... பப்பா யார்... இன்னும் தெரியவில்லை புரியவில்லை... சிம்ரன் அருமை.... எனக்கு அவர் இன்னும் ஹீரோயின் தான். குழப்பமான கதை அமைப்பு.

படம் டப்பா. ப்ளீஸ் கவ்தம், விட்ருங்க. ஐ.டி. ஜாபுக்கு போங்க. யு.எஸ். உங்களை வரவேற்கிறது. நான் படம் எடுக்கிறேன்...

குழந்தைகளும் வந்திருந்தார்கள், எல்லாம் ஏ.சி. தியேட்டரில் குறட்டை விட்டு தூங்கியது அருமை.... காட்சி!

என்ன இந்த படம் பார்த்தால், எனக்கு கோவை அன்னபூர்னாவில் (ஆர்.எஸ்.புரம்) ஒரு கட்டு கட்டு , வெட்டு வெட்ட முடிந்தது, நல்ல டிபன். ரோஸ்ட். சேவை. புரோட்டா. ரோஸ் மில்க். ஹி ஹி ....

Tuesday, November 25, 2008

இராப்பிச்சைக்காரி

எங்கள் வீட்டு அருகில் இருக்கும் குட்டை குளம் அருகே இருக்கும் ஷண்டியில் வாழும் ஒரு இராப்பிச்சைக்காரி , தினமும் காலை பூ விற்கிறாள்.

ஏன் இராப்பிச்சைக்காரி ? அவள் இரவுகள் இரந்து உன்னுவாள்.

தினம் காலை ஏழு மணிக்கு வந்து விடுவாள், பார்ப்பதற்கு படு சுத்தமாக இருப்பாள்...

இன்று காலை பூவிற்கு காசு கொடுக்கும் போது கேட்டேன்... (காசு உடனே வாங்கிவிடுவாள், கறார்... கடன் இல்லை...) ஏன் இரவல் பிச்சை எடுத்து உண்ணுகிறாய்?

*********

அவர் ஒரு ஜாமீன் பரம்பரை சேர்ந்தவளாம்... தும்கூர் அருகே..

அவர்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவனோடு காதல் வயப்பட்டு நகரத்திற்கு வந்துவிட்டாள், பதினெட்டு வயதில். குழந்தை இல்லை. இருபது வருட குடும்ப வாழ்க்கை, நல்ல வீடு, கணவன் எதோ வொர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தான்.

ஒரே ஒரு முறை, மீனாட்சி கோவிலில் (அவள் இருக்கும் இடம் அருகில் தான்) அவள் அப்பா அம்மாவை பார்த்தாளாம்... எதோ கட்சியில் இருக்கிறார்... பேரன் பேத்திகளுடன் வந்திருந்தாராம்... இப்போது தெரியவில்லையாம்..

அதனால் தான் அந்த கோவில் அருகே இருக்கிறாள். கணவன், இன்னும் தனியாக வயதான காலத்தில், வாழ்கிறான்.

இப்போது அவளுக்கு வயது அறுபது, நாற்பது என்று சொல்ல தோன்றும் ...

சரி ஏன் பிச்சை? அவர் அடுப்பு பற்ற வைப்பதில்லை. காலையில் பூ விற்கும் காசில் எதாவது உணவு. பிறகு கோவிலில் சென்று பூ விற்க, அபப்டியே எதாவது பிரசாதம் வந்தால், சாப்பாடு. வரும் வருமானத்தை, கணவனுக்கு கொடுத்து விடுகிறாள். இரவு மட்டும் நோந்துகிட்ட வேண்டுதலாம்... அதனால் பிச்சை.

எப்படியாவது அவள் அப்பா அல்லது அண்ணன்மார்கள் அவளை அழைத்து செல்வார்களாம் கூடிய விரைவில். நம்புகிறாள்.

அவள் கணவன் அவள் ஊரில் இராப்பிச்சைக்காரி யின் மகன்.

சொர்கமும் கடவுளும் நம் ஊரும்

அருமையான பாடல், நண்பரின் ப்ளோகில் இருந்தது.... ராமராஜன் மற்றும் கவ்தமி கலக்குகிறார்கள்... இளையராஜாவின் இசைமழை... அருமை...



நாம் கேட்பதை கொடுக்கும் கதவில் இருந்திருந்தா, நல்லா இருந்திருக்கும்.

விண்வெளியும் மனதும்

நிலவை காட்டி சோரூட்டினேன்
பசியாறினான் மகன்
நிலவை காட்டி மகிழ்வு செய்தேன்
கொஞ்சினால் மகள்

உன் முகத்தில் நிலவு பார்க்கிறேன்
என்று சொன்னேன் மனைவியிடம்
அன்போடு தழுவி
ஆனந்தம் அடைந்தாள்

நிலவை பிடித்துவிட நீ
நன்றாக படித்துவிடு என்றேன்
அட போப்பா நீ
என்று சொன்னான் மகன்

Monday, November 24, 2008

நாகார்ஜுனனின் பதிவும், சிறப்பான பின்னூட்டங்களும்

நாகார்ஜுனனின் பதிவும், அதில் இடப்பட்ட சிறப்பான கருத்துக்களும், சிறப்பான பின்னூட்டங்களும் நீங்கள் படிக்க வேண்டிய அவசியமான ஒன்று.

"சென்னை சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை"

நான் எழுதிய பின்னூட்டம் இதோ....

அருமையான சுட்டிக்காட்டல். சிறப்பான பின்னூட்டங்களும் புரிதலை, மெருகூட்டுகிறது.

கண்டிப்பாக, ஒரு இன்க்ளுசிவ்னஸ் இல்லாமல், பல வித ஜாதி அமைப்புகள், புரியாமல், 'இது நம்ம ஆளு' என்று விதண்டாவாதம் செய்து ஒரு சொலுசன் இல்லாமல் செய்துவிடுவார்கள்.

இங்கே தான் லிட்டேரசியும் வருகிறது. படிப்பறிவு குறைவாக உள்ள கிராமங்களில், நாட்டுப்புற கூத்து மூலம் கருத்துக்கள் சொல்லலாம்.

ரயில்வே பவன், எனர்ஜி மிச்சபடுத்துகிறது

ரயில்வே பவன், எனர்ஜி மிச்சபடுத்துகிறது!

லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளார். எமெர்சன் (இந்தியாவின் டாட்டா வோல்டாஸ் கூட்டு) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தேவையான அளவு எ.சி. ஹீடிங் வசதி செய்து, நிறைய கரண்ட் செலவு மிச்சம் செய்து, சுற்று சூழல் (எ.சி. கூலன்ட்) கெடாதவாறு முயற்சி எடுத்து செய்துள்ளார்.

நல்ல தலைவர்.



அவர் வாழ்க வளமுடன்.

நிச்சயமாக அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி தான்!

இதை என் தமிழ்நாட்டு அரசாங்க ஊழியர் நண்பர்களுக்கு சொல்லியுள்ளேன். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று.

பரிசல்காரனின் வலைசரம்

பரிசல்காரனின் வலைசரம் இங்கே இருக்குங்க. இந்த வாரம் முழுதும் அங்கே, அவர் தன் சேட்டை வேட்டைகளை நடத்துவதாக கேள்வி.

கலக்குங்க! வாழ்த்துக்கள்! Best Wishes!

"ரஜினிக்கு பிடித்த பதிவு!"

அப்புறம் காலையில் நான் படித்த ஒரு பதிவு...

பரிசல்காரனின் தந்தை எனக்கெழுதிய கடிதம்!

அருமையா அருமை!

அப்புறம் எதோ ஒரு கான்ட்ராவர்சி போல இருக்கு....

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 ராகினிஸ்ரீ

Sunday, November 23, 2008

பெங்களூர் மழை கோவை மழை

எட்டேமுகாலுக்கு ப்ளைட் இறங்கிய நாங்கள், ஒன்பதேமுக்கால் மணிக்கு வீடு வந்தோம். மழையோடு பயணம். சில்லென்ற காற்று.

இதமான பயணம்... குழந்தைகள் ரொம்பவும் சந்தோசப்பட்டார்கள். ஜனவரியில் மீண்டும் சந்திப்போம்
.
இன்று காலை பேரூர் மற்றும் மருதமலை சென்று வந்தோம். விட்டது மழை. திரும்பும் வழியில், துணி பர்சேஸ். சூடான உணவு... நண்பர் வீட்டில். பிறகு ஏழு மணி வரை பேச்சு, அவர் குடும்பத்தோடு. ... ஏழு பத்துக்கு ஏர்போர்ட். எட்டு மணிக்கு ப்ளைட் கிளம்பியது. குலுங்கி குலுங்கி பெங்களூர் வந்து இறங்கினோம்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெயிட் லிமிட் 80 கிலோ. கொண்டு சென்றது 20 கிலோ. 60 கிலோ நல்ல அரிசி ராஜபோகம், எடுத்து வந்தோம். பெங்களூரில் கிடைப்பது கஷ்டம். கையில் எடுக்கும் விதமாக, மூன்று 20 கிலோ பிளாஸ்டிக் பேக்ஸ். உருப்படியாக வீடு வந்துள்ளது.

நல்ல பர்சேஸ். முக்கியம் குழந்தைகள் துணி... மறக்காமல், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா...

ஒரு சந்தோசம், எங்களோடு ஐ.ஐ.எம் மில் படித்த ஒருவர், இப்போது தாத்தா ஆகி உள்ளார். சந்தோசம் சுவாமிநாதன். சென்ற வருடம் தான் அவர் மகளுக்கு கல்யாணம். வாழ்த்துக்கள்.

அதற்குள், நண்பர் ஒரு பதிவு போட்டுவிட்டார்.... சில வரிகள்

காரிலேயே டைப் செய்தேன். மேரு டாக்சி பரவாயில்லை. 080 44 22 44 22.

Saturday, November 22, 2008

மழையில் கோவை

நன்றாக இருக்கிறது மழை. விட்டு விட்டு தூறலும், சோ என்று கொட்டும் மழையும்.... மனதிற்கு இதமாக உள்ளது...

பெங்களூரிலும் மழை கோவையும் மழையோடு வரவேற்றது.

காலை ஆறு மணிக்கு எழுந்து, குளித்து ரெடி ஆகி...குழந்தைகள் குதுகுலத்துடன் கோவை ட்ரிப். திவ்யாவின் வீடு நகரின் மைய்யப்பகுதி. பத்து மணிக்கு தான் ப்ளைட். ஏழரைக்கு டாக்சி. பத்து நிமிடம் முன்னாள் வந்து விட்டான். போகும் வழியில் பேகரியில் தில் பசந்து ரோல்கள் பேக் செய்து கொண்டோம். கோவையில் இல்லை. நல்ல ஸ்நாக்.

ஒன்பது மணிக்கு செக்கின் செய்துவிட்டு, அறை மணி நேரத்தில் சில நூறு சாகலேட் செலவு.. இது வேண்டும் அது வேண்டும் என்று... ப்ளைட்டில் தணீர் மட்டும், சமோசா மற்றும் சண்ட்விச் இருந்தது. குழந்தைகள் சாப்பிட்டார்கள். முப்பது நிமிஷம் ப்ளைட்.

ப்ளைட் கரக்ட் டைம் கிளம்பியது. பதினோரு மணிக்கு நாங்கள் ஏர்போர்ட் வெளியே. குடையோடு திவ்யா, மற்றும் அவர் பெற்றோர். ஏர்போர்டில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா வாங்கியிருந்தார்கள். கம கம மனம். ரோட்டில் கூட்டம் இல்லை, டிரைவர், ஸ்கார்பியோவை சர்ரென்று ஒட்டி, பதினொன்றரைக்கு வீடு...

சூடான இட்லி சாம்பார். அருமை. குழந்தைகள் விளையாட சென்று விட, பேசிக்கொண்டு இருந்தோம்.

இப்போ லேப்டாப் பவரில் போட்டு விட்டு மெயில் செக், பேசிக்கொண்டே ப்லோக் டைபிங்.

மதியம் ஷாப்பிங் செல்கிறோம், எட்டிமடை தோட்டம், ஈஷா மையம் என்று பிளான். சாயந்திரம் சினிமா செல்லெலாம். நாளை கோவில் செல்லவேண்டும்.

திவ்யாவின் தங்கை குழந்தைகளுடன் மஞ்சுவும், ராஜாவும் ஒன்றிவிட்டார்கள். வீடியோ கேம், பாட்டில் ஆப் டூம் என்று விளையாடுகிறார்கள்.

கோவை பெங்களூரை விட அருமையாக இருக்கிறது. பச்சை பசேலென்று...

ஒக்கே. நாளை இரவு தான் பதிவு.

தொடர்புடைய பதிவு... மைகேல் ஜேக்சன் மதம் மாறினார்

Friday, November 21, 2008

மக்காசோளம்

மக்காசோளம் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது, என் மனைவி அவள் அலுவலகத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார்.

அது இந்தியாவின் பிரபல சாப்ட்வேர் கம்பனி. வருடம் முழுவதும் வேலை. வெளிநாட்டில் ஒரு ஆள் மூன்று மாதம் செய்யும் வேலையை, மூன்றில் ஒரு பங்கு காசில் மூன்று ஆள் வைத்து அதே ஒரு மாதத்தில்... எப்படியோ, பாரின் காசு வந்தால் சரி...

கண்ணாடி கூண்டுக்குள் வைத்த கூலிகள் என்கிறார். ஆங்கிலத்தில் சாப்ட்வேர் கூலிஸ்.

நிதர்ஷன ரெட்டி என்பது அவள் பெயர். சென்ற வருடம் கல்கத்தா மேனேஜ்மன்ட் காலேஜ் ஒன்றிலிருந்து ஆள் பிடித்து வந்தார்கள்... அது தாங்க கேம்பஸ் ப்லேச்மன்ட்.

அவளுக்கு பிடித்த உணவு மக்காசோளம்.

வேலை வேலை என்பதால் அவளை வாட்டி எடுத்தார்கள்...

ஒரு நாள் ரிசைன் செய்து விட்டாள், நான் ஊருக்கே போய் விடுகிறேன்.... இங்கே பிடிக்கவில்லை...

ஜூனியர் எச்.ஆர். எல்லாம் பேசியும் மசியாதவள், என் மனைவியிடம் அழைத்து வந்தார்கள். கொஞ்ச நேரம் பேசியவள், சொல்ல ஆரம்பித்தாள்... சிடி விட்டு இவ்வளவு தூரம் தள்ளி ஆபிஸ், பக்கத்திலேயே ஜெயில் மாதிரி வீடு...டிவி மட்டும் இருந்தா போதுமா, அடிக்கடி ஊருக்கு போகணும், சொந்தங்களை பார்க்கணும்... அப்புறம் எங்க தோட்டத்தில் விளையும் மக்காசோளம் ரொம்ப பிடிக்கும்..

அன்று பார்த்து, என் மனைவி டிபனில் வேக வைத்த மக்காசோளம் எடுத்து சென்றுள்ளார். ஒன்று எடுத்து கொடுத்துள்ளார்...

மிகவும் சந்தோசம் ஆகிவிட்டது. அந்த வேளையில், வேலையில் தொடர்கிறேன் என்று சொல்லிவிட்டாள் நிதர்சன ரெட்டி.

இப்போது அந்த கம்பனி வாசலில் மக்காசோளம் விற்பவர் நின்று நல்லா வியாபாரம் செய்கிறாராம். எச்.ஆர். தந்திரம்!

********

மனைவி சொன்னார், ஒரு பர்சன்ட் அட்ரிசன் (வேலை விட்டு ஆட்கள் நிற்பது) ஒரு மாதத்தில் அதிகம் இருந்தால்... கோ சேர்மன் (குடிகாரன், இந்தியாவை வளமாக்குவது என்று அருமையாக இப்போ புது புஸ்தகம் வேறு எழுதி இருக்கிறான்...) திட்டி தீர்த்து விடுவானாம்... அவனுடைய அல்லக்கை, கணக்கு வழுக்கு பார்த்தவன், இப்போது டைரக்டர் ஆக இருக்கிறான்.. கூட சேர்ந்து திட்டுவானாம்.. அவர்கள் வேலை விட்டு போவது யாரினால், யாருக்காக? யோடனைகெட்ட ஜென்மங்கள்..

தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை லஞ்சம்

நிச்சயமாக நிஜமாக தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை லஞ்சம் !

நான் என் அரசாங்க பணியை விட்டு விலகியதற்கு லஞ்சமும் ஒரு காரணம்.

லஞ்சம் பல முகங்களை கொண்டது..

என் மூலம் எதாவது காரியம் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில், கிட்டதட்ட எல்லா கடைக்காரர்களும், விலை குறைப்பு, அசலுக்கு கொடுப்பது போன்றவை நடந்திருக்கலாம்.

எனக்கு தெரிந்த வரை, லஞ்சத்தால் வாழாமல் கெட்டுப்போனவர்கள் தான் அதிகம். வருமானம் வரும் என்று, தேவைக்கு அதிகமாக செலவு செய்து... கச்டப்பட்டுளார்கள். ஒரு சிலர், குடிக்கு அடிமையாகி, வேலைக்கு குடித்து வரும், நிலைமை வந்து, வேலை விட்டு சஸ்பென்ட் ஆகியுள்ளார்கள்.

தொடர்புடைய பதிவு.... பரிசல்காரனின் லஞ்சபேய் .

Wednesday, November 19, 2008

இந்தியாவில் ரியல் எஸ்டேட்

இந்தியாவில் ரியல் எஸ்டேட் சரிவு நிலைமையில் இருந்தாலும் அது ஒரு வரப்பிரசாதம், பாடம் முதல் போடுபவர்களுக்கு...

எப்படி?

அமேரிக்கா ஒரு சேமிப்பு இல்லாத நாடு... அதை தயவு செய்து கம்பேர் செய்ய வேண்டாம். சப் ப்ரைம் கரைசிஸ் எல்லாம் தண்டம்... இந்தியா வேற.

இந்தியாவில் 25% கட்டாயம் மிடில் க்ளாஸ் வர்க்கம் சேமிக்கும். வீடு ஒன்று எப்போதும் கனவு தான்... சென்னையில் நான் சந்தித்த, பிளாட்பாரம் வாசி, சோளிங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தார்...

அதுவும் சென்னை சுற்றி வளர்ச்சி அதிகம். நான் ஒரு 14 ஏக்கர் 1996 சமயத்தில் வாங்கினேன், மடிப்பாக்கம் அருகே. பல்லாவரம், வண்டலூர், தாம்பரம் செல்லும் வழி. புழுதிவாக்கம் தாண்டி... ரோடு சரி இல்லை, இன்னும்... ஒரு ஏக்கர், ஒரு லட்சம். நான் 2006 விற்கும் போது, மொத்தம் பல கோடிகள்.... இன்றும் அதை வாங்கியவர் வருடம் பல லட்சங்கள் வரும் தென்னை, மற்றும் செட் / குடோன் வைத்துள்ளார்... அனேகமாக ஒரு இண்டஸ்ட்ரி வரும். என்ன தண்ணீர் தன் கொஞ்சம் குறைகிறது!

புது தொழில்கள் தொடங்க இது நல்ல சமயம். பைசா குறைவாக செலவு செய்தால் போதும். நானும் என் நண்பரும் பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க உள்ளோம்... அதற்கு சில மாதங்கள் இலவசமாக வாடகை இல்லாமல் இடம் ஒன்று கிடைத்தது, இன்னொரு நண்பர் மூலம். நண்பா முடியுமா? மாற்றம் வரும் போது தன்னால் வருமானம் வரும்.

பெங்களூரில் இது தான் வீடு வாங்க நல்ல சமயம். என்னிடம் 45 லட்சம் சொல்லிய ஒரு வீடு, மங்களம் என்ற ஒரு ப்ராபர்டி, இன்று 36 கொடுங்கள், போதும், இரண்டு கார் பார்க் தருகிறேன் என்கிறார். அசல் பணம், முதலீடு வந்தால் போதும் என்று முடிந்த நிலையில் இருக்கும் ப்ரபர்டிகள் விற்கிறார்கள். நஷ்டத்திற்கு யாரும் விற்கமாட்டார்கள். எனக்கு தெரிந்த ஒரு பாங் மேனேஜர் சொல்கிறார், இப்போதெல்லாம் என்ன 20% டவுன் பேமண்ட் கேட்கிறோம். அதையும் பெர்சனல் லோனாக கொடுத்துவிடுவோம்....

ஆனால் வீடு கட்டி விற்கும் நிறுவங்களில் முதலீடு (சேர், டெபாசிட் போன்றவை) தவறு. ஆரஞ், சூர்யா ஷைன், வைட் பீல்ட் போன்ற நிறுவனங்கள் ஓடி விடும் சாத்தியம் அதிகம்.

நிச்சயம் பணம் இருந்தால், வாங்க வேண்டிய முதலீடு, இந்தியாவில் ரியல் எஸ்டேட் !

நம்பியார் காலமானார்

எனக்கு பிடித்த தமிழ் சிறப்பு நடிகர், வில்லன் மற்றும் நல்ல கதா பாத்திரங்களில் நடித்த நம்பியார், இன்று காலமானார்... அவருக்கு வயது, 89! மார்ச் 7, 1919 பிறந்தவர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்... இங்கே மேலும் படிக்கலாம்...



ஐயப்பா பக்தர்களை பார்த்தால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது அவர் தான்.

ப்ளோகில் கூட சிலர் அவரை பற்றி தாறு மாறாக எழுதினார்கள்.

A good person is one who attempts to live and preaches what he talks about!

குமுதம் கூட சில வாரங்களுக்கு முன், அவர் நோய் பற்றி படு கேவலமாக கிசு கிசு எழுதியது. அதை வன்மையாக கண்டிக்கிறேன்! :-(

ஓர்மிச்சால் மதுரிக்கும்!

லதானந்த் எழுதிய இந்த கதை சூப்பர் டச்.

பரிசு

என்ன சொல்ல.... சூப்பர்!

//வெள்ளி வட்டலுக்கு மாத்திபோட்டேன்//

எனக்கு The Bridges of Madisson County படம் தான் ஞாபகம் வந்தது...

அருமை.

ஆமாங்க, ஓர்மிச்சால் மதுரிக்கும்! அப்பிடீனா என்னங்க?

தேவதை

இன்று என் தேவதையும் , குட்டி தேவதையும் காய்ச்சல் வந்து வீட்டில் படுத்திருக்கிறார்கள். சளி ஜூரம்... வெள்ளி இரவிற்குள் சரி ஆக வேண்டும், சனி ஞாயிறு கோவைக்கு செல்கிறோம்.

மகன் கொஞ்சம் தெம்பாக ஸ்கூல் போயிருக்கிறான், அனேகமாக க்ளாசில் தூங்கி எழுந்து வருவான்... பர்ஸ்ட் யைட் ரூம்...

அரிசி பருப்பு காய்கறி உணவு மட்டுமே உன்ன வேண்டும் ....

ஆனால் பிரெட் மட்டும் தான் உள்ளே செல்கிறது இந்த காலத்தில்.

மதியம், பாயாசம் செய்ய வேண்டும். வாய்க்கு ருசியாக சாபிட்டால் நன்றாக இருக்கும்... உடம்பு வலி பறந்து விடும். என் டாக்டர் அக்கா சொல்லிய வைத்தியம் இது... எல்லோரும் காய்ச்சல் வந்தால், பிரெட் சாப்பிட்டு விட்டு சீக்கிரம் ஜீரணம் ஆகாமல், வயிற்றை பிடித்துக்கொண்டு இருப்பார்கள்.

பிறந்த சிறு குழந்தையை காலையில் வெயிலில் காய வைக்கும் பழக்கம், பெரியவர்களுக்கும் வேண்டும். இன்று காலை எல்லோரும், பேல்கனியில் உட்கார்ந்துக்கொண்டோம்.

என் பக்கத்து வீட்டு நண்பருக்கு குழந்தை பிறந்துள்ளது... அவர் குழந்தையை வெயில் காய வைத்துக்கொண்டு இருந்தார்.



Tuesday, November 18, 2008

நூறாவது நாள் பதிவு: சாதீயம்

சுந்தர் எழுதுகிறார்... சட்டக்கல்லூரி மாணவர் மோதலும் பொதுப்புத்தியின் தலித்விரோதப் போக்கும்

என்னுடைய கமன்ட்...

நடு நிலையான பதிவு!

நான் அடிதடி ஏற்பட்டதன் காரணத்தை, அடுத்த நாளே விரிவாக என் போலிஸ் நண்பர்கள் மூலம் கண்டறிந்து, பதிவுபோதையில் எழுதிய போது, கொக்கரித்து போடா தலித் நாய் (நேற்று தான் தெரிந்தது தமிழ்நாட்டில் எங்கள் சமூகம் எம்.பி.சி தான்!) என்று கூகிள் அக்கவுண்டோடு எழுதினார்கள். இன்னும் அந்த பதிவில் கிண்டல் செய்த இருவர் கமண்ட்ஸ் விட்டு வைத்துள்ளேன்.

இந்த அடிதடி சம்பவங்கள், நான் கல்கத்தாவில் காலேஜில் கண்ட சி.பி.எம் / டி.ஓய.எப்.ஐ. v/s காங்கிரஸ் அடிதடி போல இல்லை! அங்கு வெட்டியே சாக்கடையில் போட்டு போவார்கள் தோழர்கள்... போலிஸ் ஒன்றும் செய்யாது. நந்திக்ராம் இன்னும் ஒரு படி மேல்.

கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்!

இதில் சம்பந்தப்பட்ட நான் எழுதிய பதிவு... சென்னையில் இருந்து

அவர் இரண்டு கேள்வி முன் வைக்கிறார்...


1. என்ன இது காட்டுமிராண்டித்தனமான வன்முறை?

தூண்டினார்கள்... கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்!


2. வன்முறையைக் கண்டு போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அவலமில்லையா?

அடித்து முடிக்கட்டும் என்று இருப்பார்கள் எப்போதும் ...எங்கேயும்... இல்லாவிட்டால் அரசியல் பலம், தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்படுவார்கள். காதை அறுத்த சம்பவத்தை காதும் காது வைத்த மாதிரி முதுகெலும்பில்லாத பத்திரிக்கை ஆட்கள் எழுதாதது போல, அவர்களும் கண்டுக்கொள்ளவில்லை. ஏற்கனவே நான் எழுதிய மாதிரி நொந்து போன கமிஷனர், சந்தோசமாய், வேலை மாற்றல் ஆர்டர் வாங்கி போய்விட்டார்.

மேலும் என் நண்பர்கள் மூலம் ஒரு தகவல், ஆளும்கட்சி அரசாங்க உளவுபிரிவு மூலம், இந்த சாதி சண்டை பற்றி எங்கு, யார், எப்படி எழுதினாலும் அவர்கள் பார்வைக்கு அனுப்புகிறார்களாம்.

அப்படியே விஜயகாந்த் சொல்கிற மாதிரி கொஞ்ச அரசாங்க ரேசன் அரிசியில் சமைத்து சாப்பிடுங்கள், அனைத்து மந்திரிமார்களும். ப்ளீஸ்.

அப்புறம் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய, எதற்கு கப்பம் கட்டாயம் வாங்குகிறீர்கள்? எவனோ நிலம் விக்குறான், எவனோ வாங்குறான்! உங்களுக்கு கொடுக்கும் ஆயிரம் ருபாய் நோட்டுக்கட்டுகள் நாசிக்கில் அடிக்கவில்லை தெரியுமா?

*****

இது எனது நூறாவது நாள் பதிவு: சாதீயம் என்று அப்பட்டமாக என் உணர்வை பிரதிபலித்தது...

Monday, November 17, 2008

வெங்காயம்

என் குழந்தைகளுக்கு பிடிக்காத ஒன்று... வெங்காயம்!

பெரியார் அடிக்கடி சொல்வது... வெங்காயம்!

20,000 வாசகர் பார்வைகள் என்றேன், மனைவியிடம்... பதில் ... வெங்காயம்!

நன்றி கலந்த வணக்கங்கள், என் வாசகர்களுக்கு...

Sunday, November 16, 2008

ஹாரிஸ் ஜெயராஜ் சுடல்



ஹாரிஸ் ஜெயராஜ் சுடல் ... நல்லாத்தான் சுடரார்...

ரயிலடி

என் மாமனார் அடிக்கடி ரயிலடி என்று சொல்லுகிறார், சென்ட்ரல் என்று காதலோடு அனைவரும் அழைக்கும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன். அது ஒரு பிராமண பாசை மாப்பிளே! (சுத்த தமிழா?)

வெய்டிங் லிஸ்ட் டிக்கட் எப்படியாவது கன்பார்ம் செய்து கொடுத்துவிடுவார். ( இட வசதி இல்லாமையால், நிறுத்திவைக்கபட்டிருக்கும் இடம்...)

மாப்ளே, ஈ.க்யு. இருக்கில்லே!

ரொம்ப அருமையா பென்ஸ் மெயின்டைன் பண்ணுறார். சிட்டி யூஸ் மட்டும்.

****

சென்னை பதிவர் சந்திப்பு இந்த சட்ட கல்லூரி குறித்து தானா இருந்திருக்கிறது?

சரி அடுத்து தடவை கலந்து கொள்ள வேண்டும்.

குறைந்த பட்சம் பார்வையாளனாக இருக்க வேண்டும்!

****

அடுத்த சனி காலை, கோவை செல்கிறோம். குழந்தைகள் இரண்டு நாள் ட்ரிப் கேட்டார்கள். அங்கும் மழை போல....

இன்று இரவு பெங்களூர் மழையோடு வரவேற்கும்..

ஒபாமாவின் விதிகள்

ஒபாமாவின் விதிகள்...

1.வீண் விவாதங்கள், புலம்பல்கள்,கோள் சொல்லுதல்களுக்கு நோ. இரண்டே குழந்தைகள் தானே, அதுவும் பெண்கள், பேசியே கொள்வார்கள்.

2.வீடு சுத்தமாக இருப்பதைவிட மனசு சுத்தமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தாலும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அது மனசை சுத்தம் செய்ய வைக்கும்.

3.அவரவர் வேலையை அவரவரே செய்யவேண்டும். ஒபாமா இரண்டு வேலை செய்தவர். லேயர் மற்றும் சமூக சேவகர். பணம் இல்லாமல் போனதால் சிகாகோ யுனிவர்சிடியில் பாடம் நடத்தினார்.

4.இரவு எட்டரை மணி குழந்தைகள் தூங்கச் செல்லும் நேரம். வெள்ளி, சனி பரவாயில்லை. ஞாயிறு முதல் வியாழன் வரை அப்படி இருக்க வேண்டும். ஒபமாவும் குழந்தைகள் தூங்கப்போகும் முன் பார்ப்பதில்லை. வருவதற்கு லேட்.

5.அலாரம் இல்லாமலே சரியான நேரத்தில் எழுந்திருப்பது போல் மனதை தயார் செய்யவேண்டும். இருந்தாலும் சில சமயம் அலாரம் வைத்துக்கொல்லேலாம்.

6.குழந்தைகள் வீட்டு வேலை செய்தால் வாரத்துக்கு ஒரு டாலர் பரிசு. சில சமயம் காசு இல்லாவிட்டால் கொடுக்கமாட்டார். இப்போது நிறைய கிப்த்ஸ் தானாக வரும்.

7.குறைவாக சாப்பிட்டு நிறைவாக இருக்க வேண்டும். சில சமயம் காப்பி மட்டும் தான் உணவு!

8. வீட்டில் செல்ல பிராணி எதுவும் வளர்த்த கூடாது. யாரவது கேட்டால்... அலர்ஜி என்று சொல்ல வேண்டும்.


*********

ஒபாமாவிற்கு பிடித்த வார்த்தைகள்... மாற்றம், நம்மால் முடியும்.

Change and Yes We Can!

Saturday, November 15, 2008

சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு

பதிவர் சந்திப்பு ... அந்த கூட்டம் இல்லைங்க, இது வேற.

பீச் பக்கம் நான் போகலே. அந்த சந்திப்பு கொஞ்சம் கார சாரமாக இருக்கும் போல.

நான் சந்தித்தவர்கள் பதிவு போட்டுளார்கள்... என்ன ரவி மட்டும் ப்ளோக்கர் இல்லை. நாளை காலையில் நாகேஸ்வர ராவ் பார்க்கில் சந்திக்கிறோம்!

சென்னையில் பதிவர் சந்திப்பு

சென்னை மற்றும் கோவை

எனக்கு பிடித்த விஷயம், ப்லோக் பற்றி பேசாமல், உலக விஷயங்கள் பேசியது. நல்ல நண்பர்கள். குழந்தைகள் எல்லாம் கொஞ்சம் அடங்கி நடந்தார்கள்.

****

ரொம்ப நாளைக்கு பிறகு சென்னையில் ஒரு ப்ராஜெக்ட் முடிந்தது. திருப்தி. ஒருவர் கமன்ட் போட்டுள்ளார், எவ்வளவு கமிசன் வரும் என்று. அவர் சொல்றான், இவன் செய்யறான், பூவாக்கு எதோ கொஞ்சம் வருது.

நான் வெள்ளி காலை ப்ளைட்டில் சென்னை கிளம்பினேன்.

என் மனைவி மற்றும் குழந்தைகள், சாயந்திரம் ப்ளைட்டில் வந்தார்கள்.

நாளை சாயந்திரம் ட்ரெயின். இன்னும் கன்போர்ம் ஆகவில்லை. கிடைக்கும். மாமா வாங்கி கொடுப்பார்!

இது திடீரென்று ஏற்பட்ட ட்ரிப்.

தீபாவளி முடிந்து இரண்டு வாரங்களில்... குழந்தைகள் சந்தோசம்.

எனக்கும் சினிமா வேலை ஒன்று நாளை காலை மீட்டிங் இருக்கு. அரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்ல வேண்டும்!

மாமனார் இப்போது பீச் சென்று வரலாம் என்கிறார். டின்னெர் டிபன் பாக்ஸ் கூட வரும். இன்று நான் பழம் மட்டும் தான்... பெங்களூர் போல சொல்லிட்டு வரதில்லே இந்த மழை! ஒரே தூறல் தான் போங்க!

குழந்தைகளுக்கு திங்கள் அன்று ஹிந்தி பரீட்சை. கிளம்பும் அவசரத்தில் மறந்து விட்டார்கள். நல்ல வேலை அதே புத்தகம் இங்கு கிடைத்தது, மனைவி வாங்கி வந்துள்ளார். மனைவி டின்னெர் செய்ய, மாமியார் சொல்லிக்கொடுக்கிறார். நான் உலகின் முக்கிய வேலை ப்லோக் டைப் செய்யறேன். (எதோ இன்னொரு ப்ரோஜக்ட் டிடேயில்ஸ் என்று நினைக்கொண்டு இருக்கிறார்கள்!)

அப்புறம் கனி என்ற கடையில் மூன்று செட் சுடிதார் எடுத்துள்ளார் மனைவி. மகளுக்கும் ஒன்று. நாளை மதியம் தைத்து ரெடி ஆக இருக்கும். பெங்களூருக்கு பாதி விலை. மகன் அழுகிறான். ஒரு ரெடிமேட் எடுக்கணும். திவ்யா ஒரு டி.ஷர்ட் கொடுத்திருந்தார்... Vote for Obama!

ஒரு நண்பருக்கு கல்யாணம் ஆன பத்து வருடங்கள் பிறகு இப்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... பிரார்த்தனையாக, சென்று பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு பவுன் தங்கம் காசு கொடுத்து அனுப்புகிறார். இப்படியும் சிலர்!

நாளை மதியம் நண்பர் வீட்டில் விருந்து. திவ்யாவின் குடும்ப நண்பர்.

*******

நல்ல தமாசான படங்கள் போட்டேன். பின்னூட்டங்கள் வரும் என்று நம்புகிறேன்!

தமாஸ் படங்கள்



என்னமா செய்யறாங்க?

பொய் சொல்ல போறோம்

நேற்று என்னோடு நெருங்கி பழகிய சென்னை நண்பர் அழைப்பின் பேரில் காலை சென்னை வந்தேன்.

சிறு வேலை. நாளை வரை சென்னையில் அலைய வேண்டும். ஒரு நிலம் விஷயம். நாற்பது ஏக்கர். நேற்று வரை ஒரு ஏக்கர் ஒரு லட்சம் விற்றது, இன்று ஒரு கோடி கேட்கிறார்கள். நூறு வருட ரிகார்ட் பார்க்க வேண்டும். வில்லங்கம் போன்றவை. செங்கல்பட்டு மாவட்டம்... ஸ்ரீபெரும்புதூர்... வெளிநாடு கம்பனி... இருபது கோடிகள் பட்ஜெட். ஆளும்கட்சி ஆள், பதினைந்து பாத்திரம் கையில் வைத்திருக்கிறார். யார் யார் பேரிலோ இடங்கள்.... ஊரை ஏமாற்றி பறித்த சொத்து ஆக இல்லாமல் இருக்க வேண்டும். கொஞ்சம் சந்தேகம் வந்தாலும்... நானே வர வேண்டிய பிசினசை தொலைத்து விடுவேன்.

கூட வந்த ப்ரோகர் சொன்னார்... பொய் சொல்ல போறோம் படம் மாதிரி ஜல்லி அடிப்பாங்க இங்கே. புரிந்த மாதிரி இருந்தது. என் பாடி கார்ட் சிரித்துக்கொண்டார்! அவர் கையில் இருந்த ஏ.கே கன் நடுங்கியது.

கொஞ்சம் பயம் தான்.

********

அமெரிக்க நண்பர் ஒருவர் வருகிறார். இன்று இங்கே சென்னையில் சந்திக்கிறேன்.

நான் துவங்கவிருக்கும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் குறித்து ஒரு ஆலோசனை நடத்த வேண்டும். சில கோடிகள் முதலீடு.

Friday, November 14, 2008

சென்னையில் இருந்து

சென்னையில் அக்கிரமமான விஷயம். லா காலேஜ் மாணவர்கள் தலை தொங்க போட்டு நடக்கிறார்கள். லாயேர்கள் அதை பற்றி பேசுவதில்லை..

போலிஸ் நண்பர்கள் (ஐ.பி.எஸ்) கூறிய தகவல் ஆச்சிரிய பட வைத்தது.

அடிவாங்கிய மாணவர்கள் தலித்கள். எப்போதும் போல அடி வாங்கும் சமூகம் (நானும் அதில் ஒருவன்). வாய் பேசி தகராறு ஆரம்பம். ஹாக்கி ஸ்டிக்ஸ் தடை செய்ய வேண்டும், காலேஜுக்குள்... விளையாடடு சாமான் என்ற வகையில் உள்ளே கொண்டு செல்கிறார்கள், சட்டம் தடுக்க முடியாது.

அடித்தவர்கள்... ஜாதி மூலம் சங்கம் அமைத்து பிறகு அரசியல் செய்யும் கட்சி சேர்ந்தவர்கள். அவர்கள் வாரிசு அரசியல் கண்டால் பிடிக்காதவர்கள். அந்த ஊர்க்காரர்கள்.

ஆளும் கட்சி மேலிடம் ஆர்டராம், அமைதியாக இருக்க சொல்லி. கொடுமை இது. அரசியல் விளையாடடு அதிகம். 2031 இல் சென்னை தண்ணீரில் முழ்குவது, இப்போதே முழ்கினால், ஆண்டவன் இருக்கிறான் என்று நம்பலாம். மதுரைக்கு தலைநகர் மாற்றுங்கள்.

அடித்தவர்கள் எழுபது பேர், பேருக்கு எட்டு பேர் (வசதி குறைந்த பரிதாபிகள்) என்று ஏற்கனவே, நினைத்த மாதிரி, சார்ஜ் சீட் போட்டுவிட்டார்கள். சஸ்பென்ட் ஆர்டர். ஒரு வருடம் கழித்து தேர்வு எழுதி பாஸ் ஆவர்கள். வழக்கறிஞ்சர்கள்... கொடுமை...அப்புறம் அவர்கள் மீது ஆளும் கட்சி கூட கை வைக்க முடியாது, ரமணாவின் எ.டி.எப். தவிர.

மாற்றல் கேட்ட சென்னை கமிஷனர் (ஏற்கனவே மனம் நொந்து இருந்தவர், சென்னை ரூரல் என்று வந்து காசு பண்ணுவது குறைந்தபடியால்...) மாற்றம் செய்யப்பட்டார்... வேண்டியது கிடைத்தது... ஹா ஹா

பாவம் காலேஜ் பிரின்சிபால், சஷ்பென்ட் பண்ணியிருக்கிறார்கள். அவர் பாண்டிச்சேரிக்காரர். அடித்த சமூகத்தை சேர்ந்தவர்! மத்தியில் ஆளும் அன்பான மணியான கட்சி. தமிழகத்தில் ஆழ்ந்து விட்டு, இப்போது எதிரணி. குறித்து வைத்துக்கொள்ளுங்கள், அவர் தான் அடுத்த பாண்டிச்சேரி யுனிவர்சிடி டீன்.

ஜாதி எப்படி விளையாடுது பாருங்க!

ஜாதி ஒழிய வேண்டும்! மனிதனுடைய கேரக்டர் பார்த்து பழகும் நிலை வேண்டும்.

இதை எழுதுவதால், தமிழ்நாட்டில் எனக்கு வர வேண்டிய பிசினஸ், சில கோடிகள் குறையலாம்... மயிர போச்சு!

வாழ்க இந்தியா!

Thursday, November 13, 2008

என் கேள்விக்கு என்ன பதில்?

சுற்றும் உலகம் மேலே விமானம்

என்ற பதிவில் கேள்விக்கு விடை என்ன? என் கேள்விக்கு என்ன பதில்?

மூளை குலம்பிச்சா?

பதில் இங்கே:

ஒரு சுற்று முழுதும் வருவதற்கு 28500 கிலோமீட்டர்கள். ஆனால் விமானம் 24000 மட்டும் கிலோமீட்டர்கள் பறந்திருக்கும். கிளம்பிய இடம் வர இன்னும் 4500 கிலோமீட்டர்கள் இருக்கும். அவ்வளவு தான். ;-)

இந்த புவி ஈர்ப்பு விசை எல்லாம் சும்மா ஒரு கப்சா தான்.

*********

அப்புறம் ஒரு மணிக்கு 19000 வாசகர் பார்வைகள் பதிவுபோதைக்கு!

பதிலுக்கு பதில்

என்னங்க நடக்குது தமிழ்நாட்டிலே...

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport

சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறை


காட்டுமிராண்டிக் கல்லூரி

சட்டக்கல்லூரி: கண்களில் பிறப்புறுப்பை சொருகிக்கொண்ட சக மாணவர்கள்..

எழுத்தாளர் ஞானி எழுதவில்லை இதை பற்றி இன்னும்...

வருங்கால வழக்கறிஞ்சர்கள் , வருங்காலநீதிபதிகள், வருங்கால எம்.எல்.ஏக்கள், வருங்காலமுதல்வர்கள், இப்படி செய்யலாமா?

அந்த எட்டு பேர் வீட்டிற்க்கு ஆட்டோ அனுப்ப யார்தயார்? டீடெயில்ஸ் என்கிட்டே வந்ததும்கொடுக்கிறேன்! :-(

நானும் ஆங்கிலத்தில் எழுதினேன்....

Barbarians

மனம் இன்னும் ஆறவில்லை...

தோணி கன் வாங்கியப்பிறகு நான் தான்... வச்சுக்கறேன்!

அய்யோ

லக்கிலூக் கலக்குறார்!

"கலைஞர் எனக்கு அனுப்பிய வாழ்த்துச்செய்தி!"

மு.க. அவருக்கு கடிதம் எழுதினாராம்! (கனவில்)

அருமையான பதிவு!

ஹி ஹி.... அய்யோ மூன்றெழுத்து...

சுற்றும் உலகம் மேலே விமானம்

இன்னொரு இன்டர்வியு கேள்வி இது, நார்மல் விஷயம் தான்..

உங்களுக்கு தெரியும் ஈர்ப்பு விசை ( பாக்டர் ஆப் க்ராவிடி )...

சரி கேள்வி, (குழப்பம் தான்)

  • ஒரு விமானம் ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது பூமியின் மேலே.
  • பூமி 28500 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது 24 மணி நேரத்தில்.
  • பூமியின் சுற்று வட்டம் (சர்கம்பாரன்ஸ்) 28500 கிலோமீட்டர்
  • அந்த விமானத்தில் பறக்க 24 மணி நேரத்திற்கான எரிபொருள் இருக்கும்.
  • விமானம் ஈகுவேடார் மேல பறக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்.
  • சரியாக 24 மணி நேரம் கழித்து அந்த விமானம் எங்கு இருக்கும்?

பதில் என்னவாக இருக்கும்..... ? அடுத்த பதிவில்.

பரிசெல்லாம் கேட்க்காதீங்க....

பரிச்சயங்கள்

என்னிடம் டாடா கம்பனி ஐ.ஐ.எமில் கேட்ட ஒரு இன்டர்வியு கேள்வி... 1991 ஜனவரி. நார்மலா இருக்காதுங்க. கொஞ்சம் டிபரண்ட் ஆக தான் இருக்கும் எம்பியே சமாச்சாரம்!

  • ரூமில் நூறு பேர், சீப் கெச்டுக்கு ஒருவரை தான் நன்றாக தெரியும் (பழக்கம்) ஆனால், நூறு பேருக்கும் சீப் கெஸ்ட் பற்றி தெரியும்.
  • ஒவ்வொருவரும், ஒரு கேள்வியில் எப்படி சீப் கெச்டிடம், அவருக்கு தெரிந்தவரா என்று கண்டு கொள்வீர்கள்?
  • என்னை உங்களுக்கு நன்றாக தெரியுமா என்று டைரக்ட் ஆக கேட்க கூடாது!

பதில் - கிழே!

*****

குமுதத்தில் நண்பர் நர்சிம் எழுதியுள்ளாராம். வாழ்த்துக்கள்.

பல படைப்புகள் நரசிம்ஹன் என்ற பெயரில் வந்திருக்கலாம்...?

பரிசல்காரன் எழுதுகிறார்... எல்லாரும் குமுதம் வாங்குங்கப்பூ..!

அப்புறம் நண்பர் எழுதிய கலங்கும் கண்கள் , என்னவோ செய்தது...

*****

மேலே உள்ள கேள்விக்கான் விடை ....

"எனக்கு உங்களை தெரிந்த மாதிரி, உங்களுக்கு என்னை நன்றாக தெரியுமா?"

Do you know me so well, like I know you?

Wednesday, November 12, 2008

ஷங்கரை காப்பாற்றுங்கள், இது எனது 350 வது பதிவு

இட்லிவடை குழுமம் எழுதுகிறார்கள்... ஷங்கரை காப்பாற்றுங்கள்...



நிச்சயம் ஒரு மனித நேயம் மிக்க செய்தி...

கண்டிப்பாக உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்!

******

இது எனது... 350 வது பதிவு! பதிவு தொடங்கி மூன்று மாதங்கள் மேல் ஆகியுள்ளது... 18,700 சைட் விசிட்ஸ்... (இப்போதெல்லாம் எல்லோரும் கூகிள் ரீடர் தான் யூஸ் பண்றாங்க போல!) அஞ்சு நாளில் ஆயிரம் தலைகள் எட்டி பார்த்து பதிவுபோதை கொண்டுள்ளனர்!

நிறைய பேர் கேட்கிறீர்கள், ஏன் பதிவுகள் குறைகின்றன என்று....

வேலை தான்... பூவாக்காக!

******

குழந்தைகள் கேக் கேட்கிறார்கள், செலேப்ரேசனாம்... தேங்க்ஸ்.

பயிர்

பயிர் என்ற அமைப்பை பற்றி இங்கே படித்தேன். தேனூர் என்ற கிராமத்தில் நடக்கும் புரட்சி, நன்று.

ஒவ்வொரு கிராமமும், நிச்சயம் பார்த்து செய்ய வேண்டிய கடமைகள் அதிகம்!

செந்தில் மற்றும் குழுவினருக்கு, வாழ்த்துக்கள். நன்றிகள்.

****

முதலில் ஓர் தனி மனிதன், உணவிற்கு (தேவையான அளவு... கிராமத்தில் பீட்சா, பர்கர், பிரியாணி என்று கேட்க வேண்டாம்..)... முதல் முயற்சி செய்ய வேண்டும்! ஒரு ஜான் துணி மானத்தை மறைக்க...

செய்யும் வேலை விட்டு விட்டு, ஒரு வருடம் வீட்டில் உணவிற்கு வழி உண்டு எனில், இந்த மாதிரி, நீங்கள் பிறந்த ஊருக்கு திருப்பி கொடுக்கலாம்! திரும்பி சென்று நிச்சயம், இன்னும் சிறப்பாக வேலை செய்ய முடியும் உங்களால். செபாடிக்கல் என்பார்கள் இதை.

நான் என் நண்பர் சிவக்குமாரும், ராசிபுரம் அருகில் அரிசி சாகுபடி நிலம் வாங்க முயற்சி செய்து வருகிறோம். இடை தரகர் இல்லாமல், மூன்று வருடங்களில் போட்ட பணத்தை எடுக்கலாம். இது ஒரு கோடி ருபாய் திட்டம்!

காதலும் பாடல்களும்

பரிசல்காரன் தான் பதிவில் அழகாக எழுதுகிறார், கவிஞர் வாலியை பற்றி...

சூப்பர்... இங்கே படியுங்கள்...

வைரமுத்து கூறியதை போல வாலி, வார்த்தை நெசவாளி!

*****

அப்புறம், இப்போது தான் படித்தேன்... நண்பர் எழுதியது...

பாடல்கள்

*****

என்ன இது எல்லாம் பாடல் நாளாக உள்ளது?

அப்புறம், இந்த ஆர்டிகள் நல்லா இருக்கு (ஆங்கிலத்தில்)

Ethics, Corruption, and Economic Freedom

இதையும் படியுங்கள்...

10 tips to survive a layoff

Tuesday, November 11, 2008

உடல் தானம்

நல்ல விஷயம் தான்.. ஆனால் சிலர் விவரம் தெரியாமல் உள்ளார்கள்..

உயிருள்ள மகனை தானம் செய்ய விளைந்த கோவை தம்பதியினர்...

அவர்களுக்கு தெரியாது, இந்த மாதிரி குழந்தைகள், 18 வயது வரையாவது வாழும் என்று!

கிளிக் பண்ணி படியுங்கள்... தினகரன் செய்தி...


[MOOLAIVALARCHI.jpg]

யுகங்களும் வேலைகளும்

காலையில் இருந்து வேலை வேலை என்று அலைந்துக்கொண்டு இருக்கிறேன்.

இடையில் மெயில் செக் செய்ய மட்டும் டைம் இருந்தது!

இப்போது தான் கொஞ்சம் ஒக்கே.

என் என்.ஆர்.ஐ. கஸ்டமர் ஒருவர், பெங்களூர் சுற்றுவட்டாரத்தில் சில ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்டார். வெகு நாட்களுக்கு பிக ஒரு பெரிய ப்ராஜக்ட். ரிசார்ட் மற்றும் ஹோட்டல் கட்ட துடிக்கிறார்... புதிய ஏர்போர்ட் அருகில்..

அதிசயமாய் பார்கிறார்கள், என் ப்ரோகர் நண்பர்கள், நிஜமா வாங்குவார்களா என்று கேட்கிறார்கள். விலை குறைவு, பணம் இருப்பவர்கள் போடுகிறார்கள்.

பத்து நிமிடம் முன்பு வரை பதினைந்து இடங்கள் பற்றி விவரம் வந்தது. ஒரு ஆளும்கட்சி ஆள், பெரிய பீஸ் தருகிறேன் என்று வேறு சொல்கிறார்! இதுவும் பிரச்சனையில்லாத இடம்... அந்த இடம் தங்கம்.

சில சமயங்களில், நாம் நினைப்பது மாதிரி உலகம் இருப்பதில்லை...

Monday, November 10, 2008

ஒரு லட்சத்தை ஒரு கோடி ஆக்கும் வித்தை

எங்கே இது நடக்கும்?

நிச்சயம் இந்தியன் ஸ்டாக் மார்கட் தான்!

அப்புறம், லாபத்தை எடுத்து ரியல் எஸ்டேட்டில் போட வேண்டும்.

ரெகுலர் ஆக லாபம் எடுக்க வேண்டும்.

டாக்ஸ் 15% ஒரு வருடத்திற்குள் வருமானம் இருந்தால்..

ஒரு வருடத்திற்கு மேல் டாக்ஸ் இல்லை... இருந்தாலும் மக்கள் ஏன் ஸ்டாக் மார்கட்டில் பணம் போடுவதில்லை?

நண்பர் சொல்லுகிறார், இப்போது உள்ள நிலையில், சென்செக்ஸ் ச்டாக்சில் பணம் போட்டால், 18 முதல் 24 மாதங்களில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்று.

பாங் வட்டி 10% தான் வருது இல்லையா?

குழப்பங்கள்

குழப்பங்கள் வந்து
போகும் காலம்
குறைகள் இல்லை,
நிறைகள் தான் எந்நாளும்

கவலைகள் விலகின
கவிதைகள் மருந்தானது
கசப்புகள் இல்லை
கதை கப்ஸாக்கள் உதவியானது

என் வீட்டு தோட்டம்
உன் வீட்டு தோட்டம்
கண்களில் நீர்
அவர்களை நினைத்து

என்று பிறக்கும்
விடிவு காலம்
என் அருமை
இலங்கை தமிழருக்கு!

Sunday, November 9, 2008

காமமும் கதைகளும்

கதை என்பது என்ன? மனிதன் கவலை மறக்க சொல்லப்படும் கப்ஸா.

ஒரு போதை தான்!

சில காவியங்கள் உள்ளன. ராமாயாணம், மகாபாரதம் போன்றவை, மனிதர்களால் எழுதி, கடவுள் கதை என்று சொல்லப்பட்டவை.

சரி என் புது தமிழ் வாத்தியார், என்ன சொல்கிறார்?

ஒரு எழுத்தாளர், எழுவது ஆபாசம் என்றும் அப்படி சொன்னால் தவறு என்று சொன்னார்! எது சரி எது தவறு?

நான் வாங்கும் ஹிந்தி நாவல்கள் பாதி, பேபெர்பக், காமம் மிகுந்த கழிசடைகள்... வேறு வார்த்தை தெரியவில்லை. அவை தமிழில் வந்தால்... கருமம் ஆகிவிடும்..... காமம் அல்ல.. அந்த எழுத்தாளர்கள் சொல்வது, நான் எழுதிய காவியம்! ஓகே.

கொடுமை என்னவென்றால், காதலும் காமமும் ஒன்று தான், ஒரு இனகவர்ச்சி என்பது மக்களுக்கு புரியாதது..

கல்யாணமான ஆண் இன்னொரு பெண்ணை காதலிப்பது மாதிரி நடிப்பது கதை.. நன்று. அதுவே நிஜமானால், தவறு.

புரிகிறதா?

தொடர்புடைய பதிவு இங்கே.

சுத்தம் சோறு போடும்

எவ்வளவு அருமையான பழமொழி?

காலையில் இன்று டிபன் கிடைக்கவில்லை. ஞாயிறு ஆதலால் ... ஒரூ ரெஸ்ட் டே.... ஆனால்... தோசை வரவில்லை...

குளித்தால் தான்... சுத்தம் சோறு போடும் .... தண்ணீர் பிடித்து வைத்திருக்கிறோம்.. டான்க்க் கிளீன் செய்கிறார்கள். புழு பூச்சி...போன்றவை.. மண் புழுவும் இருந்தது... என்ன கிளீனிங் செய்கிறார்கள் பெங்களூர் முனிசிபல் தண்ணீர் சப்ப்லையர்ஸ்? கொடுமை.

ஆளை ஸ்விம்மிங் கிளாஸ் செல்ல வேண்டும். க்ளோரின் வாசத்தோடு திரும்புவார்கள் குழந்தைகள்.

***

நேற்று நண்பர்கள் குழந்தைகள் எங்கள் வீடு வந்து தங்கினார்கள். நண்பரின் குழந்தைகள், அவ்வளவு அருமையாக ஸ்லீப்-ஓவர் பழகி உள்ளனர். எங்கள் குழந்தைகள் நல்ல பழக்கம் பழகினால் சரி.

என்ன டிவி மட்டும் கிடைக்கவில்லை. மனைவிக்கு எப்போதும் போல, புஸ்தகம் படிப்பு. போன் அரட்டை, நண்பர் கோவை வந்துள்ளதால்...

சினிமா கதை வடிவமைப்பு செய்வதால், பரவாயில்லை. நேரம் தான் கிடைக்கவில்லை.

அப்புறம் இந்த புதிய நோவா ஆப் ஆர்க் என்ற படம் பார்த்தோம். அருமை.

A.R.K. என்ற தத்துவம்... Act of Random Kindness என்பது கடவுள் மனிதருக்கு சொன்னதாம்... நல்ல தத்துவம்.. முடிந்தவரை, எதாவது வகையில் சிறு உதவி செய்யுங்கள், அது உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

ஒரு உதாரணம்.. நான் எம்.ஜி. ரோடு செல்லும் போது, கார் பார்க் செய்ய இடம் கிடைக்காது... ஆனால் ஒரு திருப்பத்தில், எப்போதும் நின்று ட்ராபிக் கவனிக்கும் ட்ராபிக் போலிஸ் நிறுத்திக்கொள்ள சொல்வார். ஒரு சிறு உதவி. மக்கள் மனதில் போலிசும் நல்லவர் என்ற எண்ணம் கிடைக்கிறது...

சிந்தித்து பாருங்கள்...

Saturday, November 8, 2008

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது, சில காலம் எழுதவில்லை... வேலை, சுழற்சி...

சரியாக இரண்டு வாரம் கழித்து இப்போது!

என் புது தமிழ் வாத்தியார் எழுதியது.. இங்கே பாருங்கள் ...

அது எங்கிருந்து எதிர்வினை, லிங்க் ஒன்று என் பழைய படித்ததில் பிடித்தது அக்டோபர் 7, 2008 அன்று எழுதியது!

இதையும் பாருங்கள்... ஜனநாயகத்தின் மகத்தான வெற்றி

இன்னொன்று, நண்பர் எழுதியது, சுட்டிக்காட்ட விழைகிறேன்... மும்பை கஸ்டம்ஸ்

ஆங்கிலத்தில், சாராத் பாலினின் கோபம்... Palin calls attacks 'cruel' and 'cowardly'

கடைசியில், தெளிவான எழுத்துக்கள்...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-1)
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-2)

***
அப்புறம் 18,000 வாசகர் பார்வைகள். நன்றி. இப்போதெல்லாம், வருகை எல்லாம் கூகிள் ரீடர் மூலம் தன் அதிகம் என்று நினைக்கிறேன். அதை எப்படி கணக்கில் வைப்பது? தெரிந்தவர்கள் சொல்லவும்!

நிறைய பேர் படித்தால், நிறைய எழுத தோன்றும், அவ்வளவு தான்!

டென்சன் ஆகாதிங்க... எல்லாம் லுல்லுல்லாயிக்காக தான்...

Friday, November 7, 2008

புஷின் நாய் கடித்த நபர் இவர் தான்



வீடியோ தான்... வெள்ளை மாளிகை.. இன்டர்நெட் உலகம் எப்படி பார்த்தீர்களா?

அமெரிக்காவும் போரும்

நான் போர் அடிக்க வில்லை இங்கே.... போர், போரானால், அது போர் ஆகும்!

என்ன செய்வது....

கொடுமை சரவணன் இது. நண்பர் சரவணன் வீட்டிற்க்கு இப்போது டின்னெர் சாப்பிட பயணம்...

ஆனால், அவர் சமைக்கவில்லை... அவர் எதோ ஒரு நம்ம ஊரு ஹோட்டல் என்றார்.

சாப்பிட்டு விட்டு சொல்கிறேன்.

இதற்க்கு ஒரு பதிவா? இல்லை... போட வேண்டயது கிழே...

*****
அமெரிக்காவும் போரும் ஒரு இணை பிரியா "இது".

இது நாய்களும் எழும்பும் போல. ஒரு எலும்பு போட்டு பாருங்கள், நாய் விடாது, தொண்டையில் சிக்கும் வரை, கடித்து குதறும். வெற்றி யாருக்கு?

சரி அமெரிக்காவின் வருமானம் சுமார் பத்து% போர் சம்பந்தம் பட்ட விஷயங்கள். அப்புறம் இந்த கார், சொகுசு சமாச்சாரங்கள்...

தயார் செய்யும் தளவாடங்கள்... எங்காவது போய் போட வேண்டும் தானே...

இப்போது, இராக்கில் 60,000 பேர் பழி. போதும். ஆப்கானில், ௪0,000 பேர் பழி. போதும். பாகிஸ்தான் எல்லையில் கொஞ்சம் கொன்றுவிட்டு...

இப்படி போகிறது வாழ்க்கை... போரோடு போர் அடிக்கும் நிலைமை. நெல்லில் அரிசி எடுப்பது போரடிப்பது என்று சான்றோர் சொல்கிறார்கள்.

அவர்கள் அடுத்த கண் காஷ்மீர், பெலேச்டைன் மற்றும் ஸ்ரீலங்கா.

கொஞ்சம் விட்டால், அமேரிக்கா அல்லது வெளிநாட்டுக்காரன் சம்பளத்தில் ப்லோக் செய்து டைம் வீணடிக்கும் சிறு குழந்தை மனது படைத்தவர்களை, போட்டு தள்ளுவார்கள்.

கண்ணா மூச்சி

கண்ணா மூச்சி விளையாடடு ஆடியுள்ளார்கள், குழந்தைகள். ஒரு மணி நேரம்.

எட்டரை மணிக்கு பள்ளி சென்றவர்கள், வாடி வதங்கி, சற்று முன் தான் வந்து சேர்ந்தார்கள்.

பதினோரு மணிக்கு, டாமினோஸ் பீட்சா மற்றும் சிறு பாட்டில் கோக். வருடம் பிடுங்கும் ரூ.20,000/- பீஸ் எப்படி செலவாகிறது பார்த்தீர்களா?

சில நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு.... விளையாடடு!

படிப்பு என்ற விஷயம் எப்படி மாறி விட்டது பாருங்கள்.

கம்ப்யுட்டர் பீஸ், ஆன்லைன் ஆக்டிவிடி பீஸ் , கம்ப்யுட்டர் எய்டட் டீச்சிங் பீஸ்... எல்லாம் சில டப்பா கம்ப்யுட்டர் வைத்து... வாரம் இரண்டு நாள் மட்டும்...

அடுத்த வருடம் நான் ஒரு ஸ்கூல் ஆரம்பித்தால் என்ன?

வினைகளும் ஊக்கங்களும்

நாய்கள் நன்றியுள்ளது என்று சொல்வார்கள். சில நாய்கள் ஒரு படி மேலே போய், ஒரு குழந்தையாக வளரும். உங்கள் வாழ்க்கையில் வினைகள் செய்யாது!

ஒபாமாவும் பப்பியும் பற்றி படித்திருப்பீர்கள். மூன்று கால் நாயை, அவர் எடுத்து வளர்த்தார். மகள்களுக்கு புது பாபி ஒன்று பரிசு கொடுக்க போகிறார்!

என்ன இது ஒரே நாய் பேச்சு, ஒ... ஒபாமா பேசியதாலா?

ஒபாமாவின் அக்செப்டன்ஸ் ஸ்பீச் என்னுடைய ஆங்கில பதிவில் உள்ளது...

Acceptance Speech (c) Barak Hussein Obama

சிலர் ஒபாமா பற்றி எழுதினால், ரொம்ப சொரிகிறது என்கிறார்கள்.

சரி, ஒபாமா எந்த நாட்டுக்காரர்? நீங்கள் செய்யும் தொழில் எந்த நாட்டிற்க்கு பயன் படுகிறது? அதை வைத்து, ஒரு நாட்டின் சாட்

ஆனானப்பட்ட பி.பி.சி யே முழு பக்கம் விளம்பரங்கள், இந்தியா டுடேவில், பிசினஸ் டுடேவில், எழுதுகிறார்கள்...

எப்படி அமெரிக்காவின் பாலிசிகள், ஒவ்வொரு நாட்டிற்க்கு சுமையாக உள்ளது என்று சொல்கிறார்கள், விரிவாக.

நிலைமை இப்படியிருக்க, ஸ்ரீலங்காவின் தமிழ் பிரச்சனை பற்றி, வைக்கோ ஒபாமாவுடன் பேசுவார் என்று நம்புகிறேன். அவர் தான் தமிழில் ஒபாமாவின் "எஸ் வி கேன்!" என்ற புத்தகம் எழுதியவர் ஆயிற்றே!

கமல் சினிமா தசாவதாரம் பட்டர்ப்ளை எபாக்ட் பற்றி ப்லோகுகள் எழுதி தள்ளுவார்கள்... ஆனால் ஒபாமா என்ற ஒரு புது கருப்பு சக்தி, அடிமையாக இருந்த ஜென்மங்கள் உயர்ந்திருக்கும் போது பட்டர்ப்ளை எபாக்ட் வரும்.

அதனால் அதை ஒபாமாவின் வெற்றியை ஒரு ஊக்கமாக எடுத்து கொண்டு, உங்கள் குடும்பத்தோடு நன்றாக இருங்கள்!

ஆனால் ஒபாமா செய்த மாதிரி, கஞ்சா, போதை வஸ்துக்கள் அடிக்க வேண்டாம்! :-))

****

இன்று குழந்தைகள் ஸ்கூலில் உத்சவம் அதனால், பாதி நாள்... ஸ்கூலில் லன்ச் கொடுக்கிறார்கள்! ஸ்கூலில் ஷில்ப் என்று வேறு பெயர் வைத்துவிட்டார், முஸ்லீம் ஓனர், ஹிந்து ஓனர் ஸ்கூல் மாதிரி காட்ட.

கெஸ்? பீட்சா. கோக். எப்படி தான் குழந்தைகளுக்கு பிடிக்கிறதோ!

எனக்கு நான் காலையில் கிண்டிய வறண்ட உப்புமா!

Thursday, November 6, 2008

சட்டி சுட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

எறும்புத்தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!

*******

இந்தியா ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர்களும், ஜான் மெக்கைனை ஆதரித்தவர்களும், பாடுவது இது!

‘ஜுராசிக் பார்க்’ நாவலாசிரியர் க்ரைட்டன் மறைவு

‘ஜுராசிக் பார்க்’ நாவலாசிரியர் மைகேல் க்ரைட்டன் மறைவு... அவருக்கு 66 வயது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவருடைய, நாவல்கள் அருமையாக இருக்கும்.

சினிமா போன்ற அமைப்பு கொடுத்து எழுதுவார்.

நல்ல வர்னணை.

ஜான் க்ரிஸெம் போல புத்தகங்கள் அதிகமாக விற்பனை செய்தவர்.

Wednesday, November 5, 2008

இந்திரா நூயி அமைச்சர் ஆவாரா?

இப்போது உள்ள மில்லியன் டாலர் கேள்வி... இந்திரா நூயி காபினட் அமைச்சர் ஆவாரா?

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் பெரிய போஸ்ட் ஒன்றும் கொடுப்பதில்லை...

இப்போது ஒருவர் ௭00 மில்லியன் டிச்பர்ஸ் செய்ய, தலைவர். கோட்மேன் சக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்தவர். திவ்யாவின் நண்பர்.

அமைச்சர் ஆகும் வாய்ப்பு இந்திரா நூயி பெற வழி உண்டா?

மின்னசோட்டாவில் இந்தியர் தோல்வி

அஷ்வின் மாடியா என்ற இந்தியர் மின்னசோட்டாவில் தோல்வி அடைந்தார்... மாநில தேர்தல்...

என்ன கொடுமைங்க இது?

லூசியான கவர்னர் பாபி ஜிண்டால் மாத்திரம் இந்தியன் வம்சாவளி!

வேறு பேச்சு தான், வேலைக்கு உதவாது!

தேர்தல்: இந்தியாவும், அமெரிக்காவும்

இந்தியாவும், அமெரிக்காவும் தேர்தலில் சளைத்தவர்கள் இல்லை போல.

சில இடங்களில் தனித்து போட்டி இடுகிறார்கள். ஐம்பத்து சதவிகிதம், வாக்குகள் வேண்டும். எதிராளி இல்லாமல், இந்தியாவில் முடியுமா? அன் அப்போசிட்.

இப்போது நடந்து முடிந்த தேர்தலில், பிலேதேல்பியாவில், சில கவுன்டிகளில் ஒபாமாவிற்கு 100% வோட்டுக்கள் விழுந்துள்ளன! அதை அனுமதிக்கிறார்கள்!

கள்ள வோட்டு இந்தியா போல இல்லை எனலாம்...

ஆனால், எனக்கு தெரிந்து அதற்கு வாய்ப்பு உள்ளது.

நான் 1992 எலெக்சன் டைம் நியூ யார்க்கில் இருந்தேன். அப்போது தான் லைசன்ஸ் வாங்கினேன். ஆடோமாடிக்காக என்னை, வோட் லிஸ்டில் இணைத்து விட்டார்கள். எனக்கு வோட்டளிகுமாறு, பில் கிளிண்டன் மற்றும், பலர் எனக்கு லெட்டர் போட்டார்கள்.

நல்ல வேலை பார்டி ஒன்றிக்கு ரெஜிஸ்டர் செய்யவில்லை.

இப்போது, வெற்றி பார்டிகள், இரவெல்லாம் நடந்துள்ளன! இப்போது பேசிய நண்பர் கூறினார், அவரது கணவர், ஆயிரம் டாலர்கள் செலவழித்து, அதிகாலை அவர்கள் இருக்கும் அபார்த்மன்டில் டோனட்ஸ் பாக்கட் கொடுத்தாராம்!

எல்லாமே தமாஸ் தான்!

அமேரிக்கா தேர்தல், இந்திய கண்ணோட்டம்

ஒபமாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்! முதல் கறுப்பர் (வெள்ளை + கென்யா கருப்பு)... ஆண்டவன் அமெரிக்கவைகாபற்றுவான், ஜார்ஜ் புஷ்ஷின் தந்திரம் இல்லாமல்... இதுவரை ஒரு நியூஸ் வரவில்லை, அவர் பற்றி. நாளை சாவகாசமாக, ஒப்புக்கு சப்பாணி வாழ்த்து தெரிவிப்பார்! அவருக்கு டெக்சாஸ் ஆயில் கம்பனி உள்ளது, என்ன கவலை!

எனக்கு மெக்கைனின் பழைய பிரசார வீடியோக்கள், யூடுபே மூலம் கிடைத்தன.

மனதிற்கு கஷ்டம், இந்த ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கை கால்கள் இழந்த வீரர்களை பார்க்கும் போது!

சரி இந்தியாவிற்கு என்ன லாபம்?

முதலில் அரசியல் சரியாகும். சினிமா மூலம் வோட்டுக்கள் வராது என்பது அறிவுக்கு தெரிய வேண்டும்! அங்கேயும் அடி தான்!

ஐடி கம்பனிகளுக்கு, ப்ராப்ளம் தான்!

இராக்கிற்கு விடுதலை! ஆப்கநிஸ்தான்க்கு விடுதலை.

பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுப்பார் என்று சொல்கிறார். பார்க்கலாம்.

அப்புறம் இந்த பெட்ரோல் நாடுகளுக்கு வேண்டுகோள் வைத்து, விலை குறைக்க உதவ வேண்டும்.

ஒபாமா ஜெயிப்பாரா?

எங்கள் அபார்ட்மன்ட்டில் இருக்கும் ஒரு அமேரிக்கா இந்தியர், போஸ்டல் வோட்டு போட்டவர், பட்டாசு வெடித்தார், சற்று முன்! அருமை...

பாரக் ஒபாமா தான் வெற்றி பெறுவார் என்கிறார்கள், அமேரிக்கா போல் பண்டிதர்கள்.

அவர் சொல்வது, ப்ளோரிடா மற்றும் பென்சில்வேனியா ஜெயிப்பவர்கள் தான், அமேரிக்கா பிரேசிடண்ட் ஆவார்கள் என்று.

அப்புறம், இன்னொரு அமேரிக்கா நண்பர் எழுதுறார்... ஒபாமாவிற்கு விக்டோரி நிச்சயம்

எப்படியோ ... இந்தியாவிற்கு நல்லா காலம் பொறந்தா சரி!

ஸ்டாக் மார்கெட்டும், மேலே போகும் என்கிறார் நண்பர் ஒருவர்!

Tuesday, November 4, 2008

பாரக் ஒபாமாவிற்கு இரண்டாவது வெற்றி

பாரக் ஒபாமாவிற்கு இரண்டாவது வெற்றி, மீண்டும், கிடைத்த இடம் நியூ ஹம்ப்சைர் மாநிலம், அமேரிக்கா.

ஹார்ட் என்ற ஊரில், நடு நிசி (நன்றி வாத்தியார்!) வோட்டுக்கள் குத்தபட்டத்தில்... ஒபாமா 17, மெக்கைன் 10, ரான் பால் 2 என மொத்தம் நூற்றி சில்லறை இருந்த ஊரில், 29 வாக்குகள் ரெஜிஸ்டர் ஆனதில்...

59%.... இரண்டாவது வெற்றி...

வாழ்த்துக்கள் ஒபாமா...

நாளை காலை பத்து மணி அளவில் உலகிற்கு ஒரு புதிய காவலர்!

சுஷியா - ஜப்பானிய உணவகம்

சுஷியா என்றால், சுஷிக்கு ஒரு உணவகம் என்ற பொருள்.

சுஷியா ஒரு ஜப்பானிய உணவகம் ... மண்ஹட்டன்ல் வெஸ்ட் ஐம்பத்தி ஆறாவது ஸ்ட்ரீட்டில் உள்ளது. நான் அமெரிக்காவில் தங்கியிருந்த காலத்தில், மாதம் ஒரு முறையாவது செல்வோம்.

ஒரு சிறு ப்ரோப்ளம்.... வெஜிடேரியன் உணவு இல்லை! எல்லாம் (கருவாடு) ட்ரைட் பிஷ். சுஷி எனப்படும், அரிசி புட்டு. எட்டு டாலருக்கு, ஆறு கொடுப்பார்கள்... அருமை. இப்போது எவ்வளவு தெரியவில்லை.

எதற்கு திடீரென்று அதை பற்றி? அங்கு சாப்பிட இரு நண்பர்கள் பெங்களூரில் சாப்பிட கதை இது !

நேற்று இரவு, ஒபராயில் உள்ள, ஒரு உணவகத்தில், சிராச்சி சுஷி சாப்பிடோம், நண்பர் குடும்பத்துடன்... கோல்டன் கேட் ப்ராபர்டீஸ் என்று ஒரு நிறுவன தலைவர் அவர்.


****

மற்றொரு நினைவு!

லா ஹூபா என்று ஒரு இடம் உள்ளது... அங்கும் வித விதமான் உணவு கிடைக்கும். மண்ஹட்டன் , அறுபத்தி நான்காவது ஸ்ட்ரீட். அதன் அருகில், தான் அக்கா ஒரு சிறிய வீடு வாங்கியுள்ளார், 2002 இல், கிழே வாடகைக்கு, மேலே கெஸ்ட் ஹவுஸ், வருடம் மூன்று நான்கு முறை செல்வார்கள்... நாங்கள் செல்லும் போது அங்கு தான் தங்குவோம்.

சென்ற முறை அமேரிக்கா சென்ற போது திவ்யா, ஜோவுடன் என் குடும்பத்தோடு சாப்பிட்ட ஞாபகம். லா ஹூபா. அருமையான இடம். வெஜிடேரியனும் உண்டு!

ஒபாமா பெண் மற்றும் மெக்கைன் பெண்

அமேரிக்கா எலெக்சன் பற்றி சில தமாஸ்கள்.

என் அக்கா குடும்பம், விரும்பிய வீடியோ இது... ஒபாமாவின் வெற்றியை எப்படி தடுக்கிறார்கள், என்பதை பற்றி ஒரு ஸ்போப்.