Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Wednesday, March 11, 2009

கூட்ஸ் வண்டி கவிதைகள்

கூட்ஸ் வண்டி என்ற வலைப்பதிவை படித்தேன்.... அஜயன்பாலா என்பவர் எழுதுவது.

இந்த கவிதை, என்னை மிகவும் லயிக்க வைத்து.

வார்த்தை விளையாட்டு!

***************

இரு காதல் கவிதைகள்

1
போனேன் கண்டு கலங்கி
அழகான பெண் ஒன்றை ஒர் நள்ளிரவில்
இன்னமும் தீராது நடுநடுங்கி மனசு
மண் புயலில் சுற்றி சுழலும் காலம்
கண்களில் மண் அப்பி
இறைவன் கொண்டு செல்வான் என வியந்து
கை தூக்கி நிற்கிறேன்
அவ்ள் கடந்து சென்றபோது
அதிர்ந்த ஸ்லீப்பர் கட்டைகளின் இடி முழக்கத்தில்
நொறுங்கி தூளாகும் என் எலும்புகளின் ஓசையுடன்
அசையா புகைப்படமாய்
கம்ப்யூட்டரில் ஒட்டியிருக்கிறது
உன் திரு.மதி.முகம்.
2
நேற்று நான் பாத் ரூமில் கதவை
தட்டியபோது
ஒரு குளிர் காற்றாய் உன் வளைக்கரம்
கன்விலே முகிழும்போது மட்டும்
ஏன் கொண்டை போட்டு வரவேண்டும்
என் கண்மணி
நேற்று நீ குளித்த் ஆற்றில்
செத்து விழுந்தனவே என் மன
பாரம்தாங்காதந்தகிளைகள்.
இன்னமும் மனசை மயக்குக்கிறது
நீ விட்டுச்சென்ற கல்லின்ஈர மஞ்சள்.

Wednesday, May 7, 2008

ஐந்து கவிதைகள்

(1)

என் ஈழத்து நண்பர் இப்போது அங்கில்லை

இந்தியாவில் இருக்கிறார் நான் சந்திப்பதில்லை

மெயிலும் செய்வதில்லை சாட்டுக்கு ஒரு "நோ"

நண்பனை இழக்கும் வரலாறு

இது போல்தான் மௌனமாய்

கற்களில் செதுக்கபடுகின்றனவா?

(2)

சிதைக்கப்பட்ட உடல்கள்

கொடுர படுகொலைகள்

தேவையற்ற திடீர் தாக்குதல்கள்

இப்படி தான் வரலாறு ஈழத்தை காட்டுமா?

(3)

எழுபத்தி மூன்று முதல் குருதிப்புனல்

கண்ணீர்த்துளியாக இறங்கி வற்றிவிட்டது

குடிக்கும் தேநீரும் குருதியாக கரிக்கின்றது

மரணம் என்ற போதையை பதிவிடுகிறது

இப்படி தான் நிஜ போதையை

வரலாறு காட்டுமா?

(4)

தன்னலமற்று கொலைகாரர்கள்

இறுதி வெற்றியை பெற்று

சாத்தான்கள் ஆகின்றனர்

தேவதைகளுக்கு பேச்சு வரவில்லை

வரலாறும் இப்படி தான் கொலைக்களத்தை எழுதுமா?

(5)

ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலங்கள்

ஈழம் பிரச்சனை வோட்டுகளை நிரப்புமா?

வரலாறும் இப்படித்தான்

மயானங்கள் அகதி முகாம்களாக்குகின்றனவா?