Showing posts with label ஹிந்தி. Show all posts
Showing posts with label ஹிந்தி. Show all posts

Friday, December 5, 2008

ஹிந்தி ரஜினிகாந்த் நான்

இங்கே ஒரு அட்டகாசமான பதிவு ஒன்று.. ஹிந்தி படிப்பது பற்றி...

சில கருத்துக்கள் நல்ல கோர்வை செய்யப்பட்டுள்ளது. நன்றி.

பெங்களூரில் தமிழ் படிக்க என் குழந்தைகள் பள்ளியில் நான் போய் கேட்டது உங்களுக்கு தெரியும். பிரின்சிபால் கேட்கிறார்...இரண்டு பேர் மட்டும் படிக்க வைக்க முடியுமா? மனைவி வீட்டில் சொல்லிக்கொடுக்கிறார்.

தமிழ் தெரியாமல், அதுவும், நான் காதல் செய்த போது, காதலி (இப்போ மனைவி) அவர் தமிழ் சொல்லிக்கொடுப்பார். தேர்ந்தெடுத்து, கெட்ட வார்த்தைகளாக கற்றேன். அப்புறம் இரண்டு வருடத்தில், ஒரு மசாலா கலவையாக... அப்புறம் 1994 முதல், கவர்மென்ட் ட்ரைனிங் முடித்தவுடன், சென்னை வந்த போது, டாகுமென்ட்ஸ் எல்லாம் தமிழில்.

கஷ்டப்பட்டு படித்தேன். இப்போது உங்களுக்கே தெரியும், கதையெல்லாம் எழுதும் அறிவு. நல்ல வேலை மறதி கிராமர் ஸ்டைல் தமிழ் மாதிரி தான். டப்பிங் ஈசி. என் மனைவியும் மராட்டி பழகி விட்டார், என் அம்மாவுடன் பேசும் அளவு. ஹி ஹி. (பேசுகிறார்கள் தான்..)

தாய்மொழி தவிர ஒரு நாட்டு மொழி படித்துவிடுவது நல்லது. இந்தியாவில் ஹிந்தி படிக்காவிட்டால் (ஜெயலலிதா ராமர் கோவில் கட்டும் விஷயம் பற்றி சொன்ன மாதிரி) வேறு எங்கு போய் படிக்க முடியும்? ஹிந்தி பேசுவது 60% பேர். எல்லோரும் திணிக்கவேண்டாம் என்று சொல்வது ஒக்கே தான். ஆனால், மூளை வளர்ச்சி பெற, அச்சுதானந்தன் மாதிரி ஆகாமல் இருக்க ஹிந்தி அவசியம்.

அட யோசிச்சு பாருங்க, ஹிந்தி இல்லாவிட்டால் டெல்லி மும்பை எர்போர்ட்டுகளில், நீங்கள் டாக்சிக்கு இரண்டு மடங்கு கொடுப்பீர்கள், நிச்சயம்... பாதி ஆட்கள் சாப்ட்வேர், வெளிநாடு என்று செல்பவர்கள் தனி ராகம்...

அப்புறம் இந்த ஸ்பானிஷ், பிரெஞ்சு போன்றவை... யுரோப் டூர் போகும் போது, பாதி காசு மிச்சம் செய்யலாம் மொழி தெரிந்தால். இண்டர்நெட்டில் தேடும் அளவு பயிற்சி வேண்டும். ஒரு ஸ்டைல் தான்... தாட் பூட் தஞ்சாவூர் என்கிறார் மனைவி. எனக்கு புரிகிறது. உங்களுக்கு?

எனக்கு என் தாய்மொழி எழுத படிக்க தெரியாது... கொஞ்சம் தான் தெரியும். நல்லா பேச தெரியும், மராட்டி. ரஜினிகாந்தும் அப்படி தான். ஆனால் அவர் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி அருகே நாச்சிகுப்பதில் பிறந்தவர். நானோ கல்கத்தாவில்... அதனால்...பெங்காலியில் விட்டு விளாசுவேன்.

நரி குறவர்கள் சொல்வார்கள் ஒரு எம்.ஜி.ஆர் படத்தில்... தாம் டிக்கோ தமுக்கு டப்பா... அதன் அர்த்தம் இன்னும் தெரியவில்லை. அது என்ன?

இப்போவெல்லாம், தமிழ் கெட்டவார்த்தையில் பாட்டு வருகிறது. மொழி அறிவு உச்சத்தில்.... அடல்ட்ஸ் ஒன்லி... ஜாக்கிரதை. ஆபீஸில் ஸ்பீகர் ஆப் ப்ளீஸ்.



Saturday, September 20, 2008

நிர்மல் வர்மா

எனக்கு எப்படி ஜெயமோகன் மூலம் தமிழ் காவியங்கள் படிக்கிறேனோ அதேமாதிரி நிர்மல் வர்மா ஹிந்தியில் ஓர் விற்பன்னர். சிறு கதைகளில் ஒரு புரட்சி செய்தவர். தமிழர் யாருக்கும் அவரை தெரியாது, சுஜாதா உட்பட.

பெண்களை வர்ணிப்பதில் ஒரு வல்லவர். செக்ஸ் ஒரு முக்கிய அம்சமாக வைத்துக்கொண்டு எழுவது எனக்கு பிடிக்காது. அது மஞ்சள் பத்திரிக்கை சமாச்சாரம். மட்டமான இலக்கியம்.

என்னை போலவே கம்முனிச சிந்தந்ததில் ஊறி வளர்ந்தவர். ப்ராகில் பத்துவருடம் வாழ்ந்து, இலக்கியத்தில் ஊறியவர். அவருடைய 'வோ தின்' நாவல் பிராகை (செக்ஸ்லோவாக்கியா) கண முன்னால் நிற்க வைக்கும். கம்முநிச்டுகள் பற்றி பயம் வருவிக்கும். ஒரு ஜீன்ஸ் விளம்பரம் (லீவிஸ்) ஒரு பழைய காருக்கு பண்ட மாற்றம் செய்யும்போது காட்டும் ஊர் தான் அது. ஒரு நாள் அங்கு செல்ல வேண்டும்.

அவருடைய 'தீன் யெகந்த்' ( மூன்று அழகான அம்சங்கள்) ஒரு அருமையான நாடகம். இங்கேயும் பெண்கள் தான் முக்கிய அம்சம். என்ன கொடுமை சார் இது. என் அப்பாவும் கல்கத்தாவில் நாடகம் போடுவார் அமெரிக்காவை சாடி. எனக்கே பிடிக்காது. அக்காவும் நானும் அங்கிருந்த காலம், சண் ப்ரன்சிச்கோவில் ஒரு நாடகம் போட்டார்.

அவருடைய ' தேஜ் ' கதையை படி பித்து பிடித்தவன் போலே இருந்திருக்கிறேன்.

இப்போது அவர் ஆத்மா சாந்தி அடைந்திருந்தாலும், வஞ்சனை இல்லாமல் புகழலாம். 1999 இல் ஞானபீடம் அவார்ட் அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்போதுஅவருக்கு எழுபது வயது. சிம்லாவில் அவரை சந்தித்தேன். அசோகமித்ரனும் எழுவதாவது வயதில்பெரிய அவார்ட்ஸ் வாங்குகிறார்.

கதை எழுத்தாளர்கள் எல்லாம் கவிதை எழுதுவது குறைவு. ஆனால் இவர் எழுதிய கவிதைகள் .... அருமை. பாதி மாசோ-சாடிசம் நிறைந்த உணர்வுகள். எப்படி என்றால், ஆண்கள் பெரியவர்கள், பெண்களை ரசிக்க படைத்தவர்கள் என்று இருக்க கூடாது. என் எண்ணம்.

குறைவாக எழுதினாலும்... நிறைவாக செய்தார் என்று சொல்ல வேண்டும். இன்னும் ரஷ்யாவில் அவர் எழுத்து பிரபலம்.

எனக்கு தினமணி நிறைய பிடிக்கும், படி படியாக தமிழ் கற்றேன் அதை வைத்து. தமிழ் படிக்க ஆரம்பித்த போது, 1991 சென்னை சாலிக்ரமத்தில் வீடு. டாடா கம்பெனியில் வேலை. காலை ஹிந்து நியூஸ் பேப்பர் படித்தவுடன்,
தின மணியில் சில சமயம் தலையங்கம் மற்றும் ஒரு அரை பக்கம் (நடுவில்) கட்டுரை (.என்.சிவராமன் எழுதுகிறார் என்று சொன்னார்கள் - கஸ்துரி ரங்கன் - தின மணி கதிர் ஆசிரியர் - கணையாழியில் சில காலம் இருந்தவர் - சொன்ன ஞாபகம்) படிப்பேன். சினிமாக்களில் நடிக்கவும் செய்தார் என்றார்கள். தெரியவில்லை. கூத்துப்பட்டறை முத்துசாமி, கற்பகம், வாத்தியார் ராமன் போன்றவர்களை நான்அறிவேன். அவர்கள் ஞாபகம் வைத்திருபார்களா என்று தெரியவில்லை. ரவி விசுவநாதன் என்பவர் அமேரிக்கா வாழ் இந்தியர் கூத்துப்பட்டறை ஆட்களை அங்கு அழைத்து சென்று விழா எடுத்துள்ளார்.

இப்போதும் இணையத்தில் தின மணி படிக்கிறேன்.