Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, October 11, 2008

சினிமா - மலரும் நினைவுகள் ஒரு அப்டேட்

நான் எழுதியது... சினிமா - மலரும் நினைவுகள்!

நண்பர் விஜயஷங்கர் எழுதியது ...சினிமா - மலரும் நினைவுகள்!

திவ்யா எழுதியது ...சினிமா - மலரும் நினைவுகள்!

பா.ராகவன் எழுதியது..
சினிமாவும் நானும்

அதிஷா எழுதியது நினைவுகளாய் மலரும் சினிமா சினிமா ...

இன்னும் எத்தனை பேர் கிளம்பியிருக்காங்க தெரியலை!

Friday, October 10, 2008

சினிமா - மலரும் நினைவுகள்!


இந்த பதிவு, இந்த இரண்டு பதிவுகளுக்குசம்பந்தம் கிடையாது... மன்னிக்கவும்....

அடுத்த ஓராண்டு தமிழ்ச்சினிமா இல்லை?

சினிமா - மலரும் நினைவுகள்!

ஏதோ என்னால் முடிந்தவரை நான் எழுதியுள்ளேன்.

சரி இதோ கேள்வி பதில்.

*********

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

முதலில் பார்த்தது என் அப்பா அம்மா அழைத்து சென்ற 'அமர் அக்பர் அந்தோணி' அமிதாப் நடித்தது. சிறு வயது ஒரு ஆறு இருக்கும். இன்னும் நினைவில் உள்ளது. இருட்டு . சிகரெட் புகை வாசம்... போப்கார்ன். பேல் சாட். பாண்டா. ஜாலியாக இருந்தது. அப்புறம் அக்காவின் ஜடை இழுத்து திட்டு வாங்கியது, மறக்கவில்லை. படம் கடைசியில் தூங்கி விட்டேன். காலையில் வீட்டில் எழுந்தேன். படம் முடிந்து விட்டதா என்று கேட்டேன். ஒரே அழுகை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. பெங்களூர். ஒரு தப்ப தேயடர்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கிழக்கே போகும் ரயில். என் மனைவி ரசித்த படம். டிவிடி வாங்கினோம். முதல் சீனில் இருந்து எனக்கு பிடித்தது. சினிமா என்றால் ஒரு நல்ல திரைக்கதை வேண்டும். பாரதி ராஜா அருமையாக செய்துள்ளார். தமிழ்நாடு மண் வாசம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

பல. இருந்தாலும் காமடியில் சதி லீலாவதி. காதலில் ஒரு தலை ராகம். அருவெறுப்பு நியூ. அப்புறம் அழகி, வெற்றி கோடி கட்டு, இப்படி பல. என்ன இருந்தாலும் வீடு என்று ஒரு படம், பாலு மகேந்திராவின் படைப்பு. ஒரு கிழவரின் நடிப்பு (சதி லீலாவதி தாத்தா?) ... சரியான அடி.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

இதயக்கனி என்று ஒரு எம்.ஜி.ஆர். படம், சமீபத்தில்
டிவிடி பார்த்தேன். மலை தோட்ட தொழிலாளி சப்ஜெக்ட். அருமை. அதில் அவர் இரட்டை இல்லை சின்னத்தை அழகாக அறிமுகம் செய்து ஆட்சி பிடித்தார். 1977.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

வெய்யில். அந்த மஞ்சள் நிறம் காமிரா பில்டர். அருமை. கொஞ்சம் வருத்தம்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறையா டைம் இருக்கு. ஜே.கே.ரித்தீஷ். பற்றி தெரிந்து கொள்ள குமுதம், விகடன் மற்றும் பல ப்லோகர்ஸ்.

7.தமிழ்ச்சினிமா இசை?

டப்பாங்குத்து, ஒரு முறை 'நாக்க மூக்க' கேட்டு பார்க்கவும். அப்புறம் அந்த அராபிய ராய் இசை சுடல். இரைச்சல். பெங்காலி திரைப்படம் அந்த வகையில் பெட்டர். ஹரிப்ரசாத் சொவ்ராச்யா போன்றவர்கள் இசை அமைப்பார்கள். ரவிஷங்கரும் செய்தார். (காந்தியில் அவர் தான் இசை.)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பெங்காலி, மராட்டிய மற்றும் ஹிந்தி படங்கள். ஓம் சாந்தி ஓம். மிகவும் பிடித்தது. ஆங்கிலத்தில் நேற்று இரவு பார்த்த ராண்டம் ஹார்ட்ஸ். ஹாரிசன் போர்த் நடித்த படம். உணர்ச்சிபூர்வமான நடிப்பு. அதை தான் நண்பர் ரமேஷ் அரவிந்த் ஆக்சிடன்ட் என்று கன்னடத்தில் எடுத்தார். படம் ஹிட். அப்புறம் மீண்டும் மீண்டும் பார்ப்பது, மகேன்னாஸ் கோல்ட். என்ன அருமையான திரைக்கதை. இதே லெவெலில் தி கூட். தி பேட். தி அக்லி.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆம். மற்றும் இல்லை. யாரும் என் கதை கேட்க மாட்டேன்கிறார்கள். ராம் கோபால் வர்மாவோடு ஒரு முறை பேசினேன். என் பெங்காலி நண்பரோடு ஒரு படத்திற்கு திரைக்கதை அமைத்தேன். அந்த கதை ஹிந்தியிலும் எடுத்தார்கள். தமிழில் வராது. குத்து பாட்டுக்கு சான்ஸ் இல்லை. அந்த படம் வேண்டுமானால் நான் டைரெக்ட் செய்கிறேன். என்னிடம் பல கதைகள் உள்ளன, குழந்தைகள் முதல் பெரியவர் வரை திருப்தி படுத்த.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாதி செத்து விட்டது. பாக்யராஜ் போன்றவர்கள் படம் எடுக்க வேண்டும். இப்போது சிம்பு ஒரு வித்தியாச கோணத்தில் எடுக்கிறார். அப்புறம் இந்த சென்னை இருபத்தி எட்டு, சரோஜா, கோவா டீம். நான் தமிழ் சினிமாவிற்கு வந்தால், நல்லாட்சி அமையும். காவிரி பிரச்சனை தீர்த்து வைப்பேன். இது உறுதி!

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சந்தோசம். ஆயிரம் படங்கள், அல்லது குறைந்த பட்சம் முன்னூற்றி அறுபத்தி ஐந்து உலக படங்கள் பார்ப்பேன். நன்றி.

தமிழர்கள் டிவி பார்பார்கள். பழைய படங்களையே இந்திய தொலைகாட்சியில் முதன் முறையாக என்று சொல்லி பதினெட்டாம் முறை போடுவார்கள், அப்போது பார்பார்கள். அப்புறம் அழுகை டிவி சீரியல்கள் உள்ளன. கோலங்கள். சொந்தம். ... வீடா... போன்றவை. ஜவ்வு இழுப்பார்கள்.


Thursday, October 9, 2008

சத்தியவான் சாவித்திரி

இன்று நடிகர் ரமேஷ் அரவிந்த் (நிஜ பெயர்) மீட் செய்தேன்.

அவரிடம் காமடி செய்த ரோல் எது நன்றாக செய்தீர்கள் என்று கேட்டேன்.

உடனே பதில் வந்தது. சதி லீலாவதி. தமிழ். கமல் கலக்கியிருப்பார். எனக்கு பிடித்தது கோவை சரளா செய்யும் டைமிங், கட்டு கத்தல் வேற....கன்னடத்தில் ராமா ஷாமா பாமா வந்தது. கமலும் மங்களூர் கன்னடா (மலையாள, ஸமஸ்கிரது மிக்ஸ் ஏசி) நடித்தது...வெள்ளி விழா படம். அவர் தான் டைரக்ட் செய்தார். விழா மேடையில் அவர் உட்காரவில்லை. தமிழர் என்பதால். அப்போது காவிரி பிரசனை.

சந்திரமுகி செய்த போது, விழாவின் போது பி.வாசுவும் இப்படி தான்.

கன்னட நடிகர்களில் ஹீரோ கணேஷ் நன்றாக காமடி செய்கிறார் என்றார். அவருடைய மூங்காறு மாலே ( கோடை / மான்சூன் மழை? ) படம் ஒரு சூபர்ஹிட் என்றார். எவ்வளவு ஒற்றுமை.

சரி இன்னொரு காமெடி சொல்லுங்கள் என்றேன். சாத்தியவான் சாவித்திரி, டைரக்டர்
அஜதா சத்ரு படம் என்றார். பெரிய ஹிட். மூன்று வருடம் முன்ன வந்தது. யாருங்க அவர் பேரு வித்தியாசமா இருக்கு என்றேன். "நான் தான்" என்றார். "ஒரு கன்னட டச், சிறு வயது முதல்". என் இரண்டாவது டைரக்சன். நல்ல மனிதர். ஒரு சிறு குழந்தை வைத்திருந்தார் அவர் மனைவி. ரமேஷ் அரவிந்த் என் வயது இருக்கலாம். மேற்கொண்டு கேட்கவில்லை.

அப்புறம் அவர் ஆக்சிடான்ட் படம் பற்றி கேட்டேன். என் பெங்கால் நண்பர்அவரோடு திரைக்கதை அமைத்தது. சுமாராக போயிற்று என்றார். தமிழில்அதை எடுக்க முயற்சி செய்யலாம் என்றார். மூலம் ஹாரிசன் போர்ட் நடித்த படம். 1999 வந்தது. Random Hearts. ஒரு பெண் பார்வையில்.... இவர் ஆண் பார்வையில்... அவளளவு தான், கன்னடபடுத்தி.. ஹீரோ ஒரு ரேடியோ ஜாக்கி. சுடும் போது ஹீரோ ஹீரோயின் தொழில் மாறும். மனைவி இறந்து விட, அதுவும் கூட வேலை செய்யும் தோழனோடு... அப்புறம் the யூசுவல் ...ஆனால் ஒன் லைன் 'நீதிக்கு தலைவணங்கு' போல இருக்கும் என்றார். த்ரில்லேர்? யாராவது சொல்லுங்கள்.

அவர் தமிழ் சரியாக படிக்க மாட்டாரம்... ப்லோக் எல்லாம் ஆங்கிலம் தான்.

ஹீரா போன்ற நடிகைகள் அவரை தமிழில் இருந்து துரத்தி விட்டனர். கடைசி படம் பஞ்ச தந்திரம். அப்புறம் அதே சமயத்தில் மும்பை எக்ஸ்பிரஸ்.

அப்புறம் ஒரு கொசுறு நியூஸ். இவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மகன் ஒருவரோடு படித்தவர்.

அப்புறம் எங்க வம்ச கதை படத்தில், கமல் மீண்டும் நடிக்க அழைத்துள்ளார். (மர்மயோகி)

*****

இன்னைக்கு ஆர்த்தி கதை தட்டனும். வேலை மோக களியாட்டம். ப்லோக் உலகம் எல்லாம் சைலன்ட். வாசகர் குறைவு. ஆயுத பூஜை லீவு ... அதான். திங்கள் முதல் மீண்டும் கும்மிதொடரும்... அப்படியா?

அப்புறம் எங்கள் ஊர் (கல்கத்தா) துர்க்கா பூஜா இன்று. ரொம்ப மிஸ் செய்கிறேன். அது தான் கெஞ்சி கேட்டு பூரி டிபன்.

மனைவி பூரி சுட்டுள்ளார். நேற்றைய சுண்டல், உருமாறி இப்போது காபூலி சன்னாவாக உருபெற்று தட்டில் காத்துக்கொண்டு உள்ளது.

ஆறு சின்ன பூரி போதும். நூறு கிலோ எடை தொட்டு விட்டேன். பயம்.

Saturday, September 27, 2008

உன் மனதை பிடி

காட்ச் யூர் மைன்ட் அதாவது உன் மனதை பிடி என்ற படம் சுவாமி கந்தன் என்பவரால் அளிக்கப்படுகிறது. தலைப்பு அருமை!

என்னை போலவே அவரும் நியூயார்க்கில் திரைப்படக் கல்வி பயின்றவர். வாழ்த்துக்கள்.

அமேரிக்கா வாழ் மக்கள் பற்றி, குறிப்பாக, இப்போது புலம் பெயர்ந்தவர்கள் பற்றி ஒரு சாட்டையடி எனலாம்... தொண்ணூறு நிமிடங்களில் சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை.

அக்டோபர் மூன்றாம் தேதி, வரும் வெள்ளியன்று நீங்கள் பார்க்கலாம்.

அந்த படத்தின் வலைத்தளம்

Friday, September 19, 2008

பொய் சொல்ல போறோம் -விமர்சனம்

படம் நன்றாக தான் இருக்குது... சீரியல் மாதிரி..


உம்மணாம் மூஞ்சி நடிகர் எவம்,
சென்னை (evam, chennai) குரூப் மெம்பெர் கார்த்திக். எப்போதும் பாரின் ரிடர்ன் வேஷம், அல்லது ஐடீ பணியாளர்... ரேடியோ ஜாக்கி, பாடகி சுசித்ரா புருஷன்.. வேஸ்ட் பண்ணிடாங்க.. பிரசன்னா போட்டிருக்கலாம்.

மௌலி ஒரு சிறப்பான நடிகர். அவருடைய
பிலயிட் நும்பெர் 172 பார்த்துடீங்களா?

இங்கேயும் விரிவாக படிக்கலாம்..

பொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்!
பொய் சொல்ல போறோம்! - விமர்சனம்