Friday, September 12, 2008

ஒரு ருபாய் அரிசி தமிழ்நாடு

கருணாநிதி தமிழ்நாடு ஏழைகளுக்கு ஒரு ருபாய் அரிசி மாதம் இருபது கிலோ கொடுக்க போகிறார் என்று அறிவிப்பு செய்துள்ளார், செப்டம்பர் பதினைந்து முதல். நல்ல திட்டம். வரவேற்கிறேன். ஒரு நாள் வேலை செய்தால் ஒரு மாத உணவு. நல்லது. ஏசி ரூமில் உட்கார்ந்த நாம் கும்மியடிப்போம், தவறென்று சொல்லி.

ஆனால் விவசாயி நிலைமை? (இதற்கும் ஆர்காடாருக்கும் என்ன சம்பந்தம்)

அதனால் நான் ஒரு திட்டம் போடுகிறேன். நண்பர்களும் செர்ந்துகொள்ளேலாம்.

ஒரு கோடி ரூபாய்க்கு எவ்வள்வு ஏக்கர் நிலம் கிடைக்கும், அரிசி சாகுபடி செய்ய?

எவ்வளவு போகம் எடுக்கலாம்?

எவ்வளவு வருமானம் வரும்?

என் அருமை நண்பர் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு சேலம் ராசிபுரம் பகுதியில் நல்ல அரிசி சுமார் பதிமூன்று முதல் பதினைந்து வரை கிலோவிற்கு எடுக்கிறார். பணம் வாங்கியவுடன் கந்து வட்டிகாரர்கள் வந்து பணம் பிடுங்கும் கட்சி மிகவும் கொடியது என்கிறார்.

அவரும் நானும் ஒரு கோடி முதலீடு செய்து (ரிஸ்க் காபிடல்), அரிசி சாகுபடி செய்து, வருமானம் பார்க்கலாம் என்று இருக்கிறோம். விவரம் தெரிந்த நீங்கள் சொல்லுங்கள்.

டெக்கான் கோபிநாத் மற்றும் சிலர் அரிசி சாகுபடி செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே அவர் நோர்மல் விட ஏழு பங்கு அதிகம் லாபம் நிலத்தில் பார்த்தவர், இயற்கை உரம் மூலமாக. நான் அரசாங்கத்தில் வேலை பார்த்த பொது விவசாயிகள் சொன்னது, பீயை எவனாவது போட்டு அரிசி வளப்பானா என்று. திருந்தாத ஜென்மங்கள். இப்போ சாண்ட கிளராவில் (கலிபோர்னியா) மீதேன் வாயு எடுக்கிறார்கள் மலத்தில் இருந்து. அதை வைத்து ஜெனரடோர் ஒட்டி கரண்ட் கொடுக்குறார்கள்.

சுமார் ஆயிரம் கோடி ருபாய் மாணியம் வழங்கும் அரசு, வியேட்நாம் போலே ஏன் செய்யவில்லை?
(அரசே விவசாயம் ஒரு நிறுவனம் மூலம் செய்வது, லாபத்தின் குறிகொளோடு).

கையுட்டு. லஞ்சம்.

தொடர்புடைய பதிவுகள்...

ஜோதிபாரதி, சிங்கப்பூர்
ஜ்யோவ்ராம் சுந்தர், சென்னை

செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா - உதவி செய்யுங்கள்

செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா - உதவி தேவை

ஒரு நல்ல செஸ் வீரருக்கு இந்த உதவி, நிச்சயம் செய்யுங்கள்.

நண்பர் விஜயஷங்கர் பதிவில் அக்கௌன்ட் விபரம் உள்ளது.

அமேரிக்கா கல்வி முறை

அமெரிக்க கல்வி முறை ஒரு மாறுபட்ட வடிவம். இந்தியாவில் இருப்பதைபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு, மூன்று அல்லது நான்கு (ஹோனோர்ஸ்) படிப்பு, பிறகு மேல் படிப்பு (மேலாண்மை, மருத்துவம் வகையாரா)... டாக்டர் படித்து காசு சம்பாரிப்பது இருபத்தி எட்டு வயது ஆகிவிடும். ரெசிடென்சி பண்ணும் போது மூன்று வருடம் மூவாயிரம் டாலர் கொடுப்பார்கள் டாக்ஸ் இல்லாமல் . சேருவதற்கு மிகவும் கஷ்டமான கோர்சு மருத்துவம். அமெரிகாவில் இடம் இல்லாவிட்டால் ஜாமைக்கா அல்லது அங்குள்ள தீவு நாடுகளில் நிச்சயம் உண்டு. மணிபால் உனிவேர்சிடியும் உண்டு.

போன பதிவில் என் அக்கா மகள் நிதினா காலேஜு செல்வதாக எழுதி இருந்தேன். பதினாறு வயதில் சாட் (SAT) எனப்படும் நுழைவு தேர்வு எழுதி 1600 இக்கு 1600 வாங்கினாள். ஆங்கிலத்தில் நன்றாக கதை கட்டுரை எழுதுகிறாள். ஆறு வயதில் ஒன்றாவது முடித்துவிட்டாள். அமெரிக்கர்கள் அப்போதுதன் ஆரம்பிப்பார்கள். ஆறாவது படித்து முடித்தவுடன், மேல் நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்தாள். அறிவு. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதுஅதிகமாக கோர்சுகள் மேற்படிப்பு லெவலில் எடுத்தாள். வீட்டருகிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். மாரிலாந்து உனிவேர்சிட்டி. கோட் செய்கிறாள். வெப் வடிவமைக்கிறாள். இப்போதே உனிகோட் தமிழ் வடிவம் பற்றி பேசுகிறாள்.

இந்தியாவில் இருந்து படிக்க வந்த தமிழர்களுடன் நல்ல உறவு உள்ளது. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுகிறாள். தாய்மொழி மராத்தி, தந்தை மொழி குஜராத்தி (பரோடா கேக்வாத் ராஜா வம்சம் எனலாம்). நான்கு வருடம் படிப்பை மூன்றில் முடித்து விடுவாள். மேற்படிப்பு 2011 இல் இந்தியா வந்து நான் படித்த அஹமேடபாத்தில் மேலாண்மை கல்வி சேருவாள் என்கிறாள்.
வாழ்த்துக்கள்! என் மனைவி, இப்போதே, அங்கே ராஸ், மிசிகனில் எம்பியே படிக்கும் கசின் பாரத்தை, கட்டி வைக்கலாம் என்கிறாள். ஆறு வயது தானே வித்தியாசம்? இதற்கும் சென்னையில் பேமண்ட் சீட்டில் படித்தவன். பாடாவதி காலேஜ். மதவாதிகள் நடத்தியது. ஜிமாட் எழுதி,எலுநூட்ரி பத்து வாங்கி, நல்ல ரெகோ (ஐயா தயவு கூர்ந்து இவனுக்கு இடம் கொடுக்கவும்...அடியேன் உட்பட) கொடுத்து, சேர்ந்துள்ளான்.

இந்த
டேட்டிங் கலாச்சாரம், ஒரு கொடுமை அங்கே! பதினாறு வயதில் செக்ஸ் விசயத்தில் அக்டிவ் ஆகிறார்கள், அங்கே.
நான் பார்த்த பால்டிமோர் பள்ளியில் (மேல்நிலை) காண்டம் வெண்டிங் மெசின் உள்ளது. இப்போது அமேரிக்கா குடியரசு ரைட் விங் கட்சி பாலின் மகள் பதினேழு வயதில் ஐந்து மாதம் கருவுற்றிகிறாள். நாடு அப்படி. (அதாங்க காரணம் ஆகாரம், சீசு, பர்கர், பீட்சா வகையரா மற்றும் அவர்கள் அணியும் அரைகுறை ஆடை என்கிறாள் மனைவி).

என்ன அமெரிக்காவில்
பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பு செலவு கிடையாது... உனிபார்ம் இல்லை... பிற்பாடு காலேஜில் கஷ்டம் தான். வருடம் இருபதாயிரம் டாலர்கள் ஆகும். வீட்டிலிருந்தே படித்தால், பாதி மிச்சம். என்ன கடைசி வருடம் கண்டிப்பாக ஹோஷ்டல்.

லீவு நாளில் கார் வாஷ் செய்கிறார்கள், பத்து டாலர் ஒன்றுக்கு. மெக்டோனல்ட்ஸ் வேலை. கேமார்ட், வால்மார்ட், ஜியன்ட் போன்ற கடைகள், பூட்டி பார்லேர்ஸ்.... போடோயர்ஸ்... எட்டு டாலர் ஒரு மணி கூலி. ஆனால் கோட் செய்தால் முப்பது டாலர் கிட்டும் மணிக்கு. (என் நண்பர்கள் ஐ.ஐ.டி. படித்த பின், டெக்சாசில் கக்கூஸ் கழுவி மேல்படிப்பு படித்தார்கள்!)

உங்களுக்கு தெரியுமா, சுத்தமான ஐயர் பையன் ஒருவன், என் நண்பன் நாராயணன், பண்ணி/மாடு ஸ்டேக் என்றால் ஒரு வெட்டு வெட்டுகிறான். வெஜிடரியன் என்றால் காசு ஜாஸ்தி! இப்போது அவன் ஒரு அமெரிக்க பெண்ணை கட்டி, பத்து வருடம் நிறைவு. பெரிய விஷயம் அது. அழகு.

ஒரு புல் அமெரிக்கன் மீல் ட்ரிங்க்ஸ் உட்பட பத்து டாலர். ஒரு மசாலா தோசை (வர வர) பத்து டாலர். எது பெட்டெர்?

Thursday, September 11, 2008

அமேரிக்கா பயணங்கள்

என் அமெரிக்க உறவு 1991 முதல் 1994 வரையும் (வாழ்ந்து சம்பாரித்த ஊர்), பிறகு 1996, 1998, 1999, 2001, 2004, 2006 (இரண்டு, நான்கு, ஆறு வாரங்கள்) என தொடர்கிறது..... என்று செப்டம்பர் பதினொன்று பதிவில் எழுதி இருந்தேன்.

நான் மேற்படிப்பு முடித்தவுடன், முதன் முதலில் அக்டோபர் 1991 இல் அமெரிக்க பயணம்.

நான் சென்னையில் வேலை செய்த காரணத்தினால், சென்னையில் இருந்தே புறப்பட்டேன். மேஇல் வேலைக்கு சேர்ந்தேன். ஆறு மாதத்தில் பயணம். விசா குறித்தும் (அமேரிக்கா) ஒரு பதிவுபோடுகிறேன். ஒரு கொடுமை, பயம் என்றால் என்ன என்று இருந்த என்னை பயமறிய செய்தது.

இரண்டு வருடம் முன் தான் அக்கா அங்கு சென்று மருத்துவ மேல் படிப்பு ஆரம்பித்து இருந்தார். அப்போதெல்லாம் விசாவிற்கு கேடுபுடி எல்லாம் கிடையாது. என் அக்கா கல்யாணம் இந்தியாவில் நடந்தது. டிசம்பர் 1991. சொந்த செலவில் ஒரு வாரும் லீவுக்கு இந்தியா வந்தேன். தினம் 60 டாலர் சம்பளத்தில் (பெர் டேயம் முக்கால் காசு, இந்தியா சம்பளம் தனி கால் காசு), ஐந்து வேலை நாட்களுக்கு கழிவு. பரவாயில்லை. வேலை நாட்களுக்கு மட்டும் டாட்டா எடுத்துகொன்டனர். டிசம்பர் இருபது இரவு கிளம்பி, கல்கத்தா இருபத்தி இரண்டு அதிகாலை வந்து இறங்கினேன். அக்கா கல்யாணம் டிசம்பர் 26 நடந்தது. இந்தியாவில் சரியாக எழு நாட்களுக்கு பிறகு நான் டிசம்பர் 29 சண்டே இரவு கிளம்பி டிசம்பர் முப்பது காலை நியூ யார்க்கில் போய் சேர்ந்தேன். இடையில் டிசம்பர் 24, மற்றும் 25 லீவு கிறிஸ்துமசுகாக. டிசம்பர் 31 கூட லீவு தான், நியூ இயர் உட்பட. நல்ல ரெஸ்ட்.

அக்காவும் மச்சானும் கோவில் விஷயங்கள் எல்லாம் முடித்த பிறகு, 1992 ஜனவரியில் சங்கராந்தி (பொங்கல்) முடித்து விட்டு அமெரிக்காவில் குடித்தனம் நடத்த ஆரம்பித்தனர். அக்டோபரில் அக்காவுக்கு நிதினா பிறந்திருந்தாள், அப்பா அம்மா அங்கிருந்தனர். இந்தியா சென்று வரும் போது வரும் போது அழைத்து வந்தேன். கிரீன் கார்டு ஒரு வருடத்தில் கிடைக்கும் என்று சொன்னார்கள் அப்போது, மச்சான் ஸ்பொன்சர் மூலம். ஆரம்பித்தனர். கிடைத்தது.

டிசம்பர் முப்பத்தி ஒன்று வாழ்கையில் மறக்க முடியாத நாள். டைம்ஸ் சதுரத்தில் (முக்கோணம் அது, எதற்கு சதுரம் என்று சொல்கிறார்கள்?) நியூ யார்க்கில் உலக பிரசத்தி பெற்ற பந்து இறக்குதல், புத்தாண்டு வரவேற்ப்பு.

மச்சான் வீட்டில் (அப்போது பால்டிமோர்) தங்குவேன், இரண்டு வாரம் ஒரு முறை. நியூ யார்க் பெண் ரயில் நிலையத்தில் இருந்து அம்டிராக் உண்டு. இருபது டாலர் ஒன் வே. பிலேதேல்பியாகு ஒரு மணி நேரம். அங்கிருந்து இரண்டு மணி நேரம். சுகமான பயணம். அரை நாவல் படிக்கலாம். வெள்ளி இரவு எழு மணிக்கு கிளம்புவேன், சண்டே இரவு சுமார் பத்து மணிக்கு திரும்புவேன். நல்ல உணவு, அக்கா குழந்தை. சொந்தம். பேச்சு. சினிமா. நியூ யார்க்கில் நான் இருந்த இடம் எண்பத்தி நான்காம் குறுக்கு தெரு, சல்மான் ருஸ்டி வீடு அருகில் தான் - மண்ஹட்டன். டாக்சியில் ஐந்து டாலர்.

இரண்டாயிரம் டாலர் வாடகையில் , இரண்டு ரூம் வீட்டில், நான்கு பேர் ஒன்றாக இருந்தோம், இரண்டு பெண்கள் உட்பட, ஒரே (!)கம்பெனி. நியூ யார்க்கில் மனிதன் இந்தியா உணவு சாப்பிட மாட்டான். அதனால், நாங்கள் நியூ ஜெர்சிக்கு போவோம். மொகல் என்று ஒரு இடம். ஒக் ட்ரீ ரோடு. போக வர டாக்சியில் .... மொத்தம் செலவு ஆளுக்கு பத்து டாலர் மட்டும் ஆகும். சமையல் சாமானமும் வாங்கி வருவோம். விருந்தினர் வந்தால், ஹாலில் நானும் என் நண்பனும், ரூமில் அக்கா குடும்பத்தினர் அல்லது பிற நண்பர்கள்.

அப்போது தான், நியூ யார்க் அகாடமி ஒப் ஆர்ட் வழங்கிய திரைப்பட கல்வி பயின்றேன். மறக்க முடியாத நினைவுகள்.

இதை பற்றி விரிவாக ஒரு பதிவு அல்லது கதை சீக்கிரம். மறக்க முடியாத நினைவுகள். ஒரு தடவை கையில் பாஸ்போர்ட் இல்லாமல் நியூ யார்க் ஸ்டேட் போர்டேரில் கனடாவில் நுழைந்த அனுபவம், குறுக்கு வழியில் அமெரிக்க நுழைந்தது.... அமெரிக்க வாழ்க்கை சில சமயம் ஜெயில் போன்ற வாழ்க்கை அது என்று தோன்றியுள்ளது
.

பிறகு 1994 வரை இரண்டு முறை இந்தியா பயணம். ஒரு முறை 1993 சிவில் செர்விசெஸ் எக்ஸாம் எழுத. 1994 இல் திரும்பினேன், வேலையை விட்டு விட்டு. கையில் நான் சம்பாரித்த கொஞ்சம் பணம். மனதில் தயிரியம். மையின் எக்ஸாம் எழுதினேன். அரசாங்க வேலை. நாட்டுக்காக. சில மாதங்களில் முசொரியில் படிப்பு. தமிழர்கள் யாரும் இல்லை. பீகார் மற்றும் ஆந்தரா ஜாஸ்தி. எனக்கு தமிழ்நாடு வேலை.

நான் சுற்றி பார்த்த இடங்கள் பற்றி ஒரு கதை போடுகிறேன்.

1996 இல் நாங்க வாரம், சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ், வாஷிங்டன் அருகில் வீடு. இந்தியாவில் அரசாங்க வேலை, மன நிம்மதி.

1998 எனக்கு மனைவியாக வரபோகிறவள் (காதலி) அங்கு சில காலம் பிலெதேல்பியா அருகில் வேலை. சென்று பார்த்தேன். கல்யாணம். சம்மதம். பெற்றோர் அங்கே இருந்ததனால், ஈஸி. பித்த்ஸ்பர்க் கோவிலில் திருமணம். அவளுடைய பெற்றோரும் அங்கு இருந்தனர். இந்தியா திரும்பினேன். மனைவி அங்கே. நான் இங்கே, தனிமை சுகம். பிரிவு சுகம். அவளும் சில மாதங்களில் திரும்பி வந்தாள். அந்த காதல் கதை பற்றி ஒரு அல்லது பல பதிவுகள் உண்டு, சீக்கிரம். இந்தியாவில் வாழ்க்கை ஆரம்பித்தோம், சென்னையில். பிறகு அமெரிக்கா செல்ல இரண்டு வருடங்களுக்கு மேல் ஆயிற்று.

௨001 ஒன்றில் சென்றது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அக்கா வீட்டில் ஒரு விசேஷம், அதற்கு. செப்டம்பர் பதினொன்று....

2001 இக்கு பிறகு, அங்கு செல்வதா வேண்டாமா என்று ஒரு மன நிலை. 2002 இல் ராஜா பிறந்தான். அதனால் 2004 ஏப்ரல் தான் பயணம். ஜூலை கடைசியில் திரும்பினோம். சேர்த்து வைத்த அரசாங்க விடுப்பு நிறைய இருந்தது. மூன்று மாதம் பிளான். மாரிலாந்து மற்றும் ஜார்ஜுடவுன் பல்கலைகழகத்திலும், மல்டிமீடியா இன்பர்மடிக்ஸ் பாடம் பயின்றேன். பிராஜக்ட் மேலாண்மை குறித்து பயின்று அறிவு வளர்த்தினேன். ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஒரு நண்பர் பயின்று வந்தார். பார்க்க சென்றோம். பல பாடங்கள்நடக்கும் வகுப்பில் (மேலாண்மை) சிறப்பு மாணவர் ஆக கலந்து கொண்டேன். அரசியல் புகழ் சுப்பிரமணிய சுவாமியும் இன்டர்நேஷனல் எகோநோமிக்ஸ் எடுத்தார். சூப்பர்!

அங்கு நன்றாக சுற்றி பார்த்தோம். நினைவில் இன்னும் இருக்கிறது. அங்கே ஒரு இந்தியர் இன்னொர்வரை பார்த்தால் கேட்டுக்கொள்ளும் விஷயம், சாப்ட்வேர்ஆ அல்லது கிரீன் கார்டு வாங்கியாச்சா, டெலிபோன் கம்பெனி (சீப்கால்ஸ் ), இந்தியா உணவு மற்றும் சினிமா பற்றி தான். நடிகர்களை அழைத்து அங்கு கும்மாளம் போடுவது ஒரு பேசன். அங்கே இந்தியர்களுகுள்ளும் ஜாதி மதம் அல்லது குறைந்த பட்சம் மொழியாவது பார்பார்கள். அமெரிக்க இந்தியர்கள் வீட்டிற்கு அழைத்து சோறிடுவது ஒரு கலை. அதை பற்றி ஒரு தனி பதிவு போடுகிறேன்.

சென்னையில் குழந்தை மஞ்சுக்கு எல்.கே.ஜி. அட்மிச்சொன் கிடைத்துவிட்டிருந்தது . ஒரு மாதம் முதலிலேயே விடுப்பு எடுத்தவள் ஆனாள். பிரீ.கே.ஜி. யில் படித்த காரணத்தால் இந்த சலுகை. இரண்டு வய்து மகன் ராஜா பேச கற்றுக்கொண்டு இருந்தான். அமெரிக்க ஆங்கிலம் நன்றாக ஒட்டிகொண்டது. வீட்டில் தமிழ் சிறிது , அமெரிக்கன் அச்சனட் ஆங்கிலம் அதிகம் அவனுக்கு. இப்போதும் நண்பர்கள் அவன் அமெரிக்காவில் பிறந்தவனா என்று கேட்கிறார்கள். உருவாகியிருக்கலாம்! அவன் எனது அக்கா குழந்தைகளிடம் பேசும் விதம், டோட்டல் அமெரிக்க பாசை தான்.

என்னுடைய குடும்பத்தில் என்னை தவிர யாரும் மராட்டி பேசுவதில்லை. மனைவி ஹிந்தி மாதிரி நினைத்து பேசுகிறாள். சமஸ்கிருத ஒற்றுமை. உறவினர்கள் எல்லோரும் ஹிந்தி மாதிரி தான் பேசுகிறார்கள். தப்பித்தோம்!

செப்டம்பர் பதினொன்று

செப்டம்பர் பதினொன்று இரண்டாயரத்தி ஒன்று, ஒரு மறக்க முடியாத நாள். நான் அப்போது குடும்பத்தோடு அமெரிக்காவில் எனது அக்கா வீட்டில் இருக்கிறேன். இரண்டு வாரம் பயணம், ஒரு வீட்டு விசேஷம் அங்கே. அப்போது என் மகள் மஞ்சு மட்டும் தான். ஒரு வயது. என் அமெரிக்க உறவு 1991 முதல் 1994 வரையும் (வாழ்ந்து சம்பாரித்த ஊர்), பிறகு 1996, 1998, 1999, 2001, 2004, 2006 (இரண்டு, நான்கு, ஆறு வாரங்கள்) என தொடர்கிறது.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் பிடிக்காமல், பின் லாடேன் படை, திவிரவாதம் என்ற பெயரால் நியூ யார்க்கின் புகழ் பெற்ற உலக வர்தக மைய்யத்தை விமானம் கொண்டு தகர்க்கிறார்கள். இரட்டை கோபுரம் என்றும் சொல்வார்கள். தெனாவெட்டு அடக்கப்பட்டது என்றார் என் தமிழ் நண்பர் ஒருவர்.

சுமார் நான்காயிரம் பேர் மரணம் அடைந்தனர். அவர்களை இந்நேரம் நினைவு கூறுவோம்.

எதற்க்காக என்பது எதுவாக இருந்தாலும், ஒரு கொள்கைக்காக அப்பாவிகளை கொல்வது, கஷ்டமாக உள்ளது. இது இராக் மீது படை எடுக்க உதவியது. சதாம் ஹுசைனும் கொல்லபட்டார். பெட்ரோல், டீசல் இப்போது இராக்கிலிருந்துஅமெரிக்காவிற்கு பறக்கிறது. இதற்காகவா?

என் அக்கா குடும்பம், இந்தியா திரும்பி விடுவது நல்லதா என்று யோசிக்க தொடங்கினார்கள். இன்னும் அங்கு தான் உள்ளார்கள், தினம் தினம் உஷார் தான். அக்கா மருத்துவ மேல் படிப்பு படிக்க ௧௯௮௯ இல் அங்கு சென்றார்.

என் அக்கா வீட்டருகில் ஒரு நினைவு அஞ்சலி கூட்டம் காலை பத்து மணிக்கு, செப்டம்பர் பதினைந்து. அன்று நாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். விமானங்கள் சர்வீஸ் மீண்டும் தொடங்கிய நாள். முதன் முதலில் ஒரு கூட்டம் கண் கலங்கி (அவர்கள் குடும்பம் சம்பந்தம் இல்லாமல்) நிற்பதை பார்த்தேன். முதல் முறையாக தேம்பி தேம்பி அழுதேன், பப்ளிக்காக. ஏன் என்று தெரியவில்லை. என் அப்பா அம்மாவும் அங்கு இருந்தனர். அவர்கள் மனம் கஷ்டப்பட்டது. அவர்கள் வருடம் ஆறு மாதங்கள் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை அங்கே தான் இருப்பார்கள். இது நிறைய வருடங்கள் தொடர்ந்தது. என் கல்யாணத்திற்கு மட்டும் கொஞ்சம் முன்னாக வந்தார்கள். அப்பா சென்ற வருடம் காலமான பிறகு (அப்போது கூட நான் சரியாக அழவில்லை), அம்மா அங்கேயே தான் இருகிறார்கள். உடல் நலம் அம்மாவுக்கு சுமாராக உள்ளது. சென்ற மாதம் கிட்னி அபொரசொன் செய்தார்கள். கிரீன் கார்டு இருப்பதால், கட்டாயம் இரண்டு வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு வருடம் (366 நாட்களாவது) இருக்க வேண்டும். அப்பாவிற்கு 1250 டாலர்கள் உதவிதொகையும், இப்போது அம்மாவிற்கும் தொடர்கிறது. 65 வயதிற்கு மேல் கட்டாயம் தொடர்கிறது. அதை அவர்கள் அங்கேயே உதவி செய்து மனம் த்ருப்தி அடைகிறார்கள்.

செப்டம்பர் பதினைந்து இரவு எட்டு மணிக்கு பிராங்க்பர்ட் வழியாக, சென்னைக்கு. இரண்டு மணி நேரம் முன்பாக புறப்பட இருந்ததை சோதனைக்காக இன்னும் ஒரு மணி நேரம் முன்னதாக கிளம்பினோம். அமெரிக்க தலை நகர் வாஷிங்டன் டி.சி. இரண்டு ஏர்போர்ட் கொண்டது. அறை மணியில் வீட்டிலிருந்து செல்லலாம். நான்கு மணிக்கே கிளம்பி விட்டோம். நல்ல வேலையாக பிரச்சனை இல்லாமல் விமானம் ஏறினோம். பிராங்க்பர்ட் தான் கஷ்டம் கொத்து. அங்கும் மீண்டும் பற சோதனை. என் குழந்தை த்ரொலெயை ஸ்க்ரெவ் டிரைவர் போட்டு திறந்து பார்த்தனர். கொடுமை அது. ஒரு ஊனமுற்றவர் அணிந்திருந்த காலை, எக்ஸ்ரே மூலம் ச்செக் செய்து கொண்டே இருந்தனர்.

அதன் பிறகு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அங்கு குடும்பத்தோடு சென்று வருகிறோம். குழந்தைகள் பள்ளி செல்வதால் ஏப்ரல் மற்றும் மே ஆறு வாரம் அங்கு தான். அங்கு செல்லாத போது இந்தியா சுற்றுப்பயணம். அக்காவும் குடும்பத்தோடு அதே மாதிரி நான்கு வாரம் வந்து செல்கிறார்கள் நவம்பர் டிசம்பரில், தீபாவளியை பொறுத்து மற்றும் அவர்கள் குழந்தைகள் பள்ளி விடுமுறை கணக்கில் வைத்து (நவம்பர் மூன்றாவது வாரம் முதல் ஜனவரி முதல் வரை). இந்த வருடம் அம்மாவை அழைத்து செல்ல வந்த மாதிரி ரெகுலராக இனி மேல் ஜூலை ஆகஸ்டில் வரலாம், அங்கு முழு ஆண்டு பள்ளி விடுமுறை அப்போது தான். இந்த வருடம் முதல் அக்காள் மகள் நிதினா காலேஜு செல்கிறாள். எப்படியும் சுமார் ஒரு வருட இடைவெளியில் நேரில் பார்த்து விடுகிறோம். பிறகு தினமும் ஒரு பத்து நிமிடம் இரவு (அங்கு காலை) வீடியோசாட் செய்கிறோம்.

இந்தியாவா அமெரிக்காவா என்பது அங்கு வாழும் இந்தியர்களுக்கு இன்னும் குழப்பம். குழந்தைகள் அங்கு பழகி விட்டால், இந்தியா திரும்ப வருவது அவர்களுக்கு கஷ்டம். (என் குழந்தைகளுக்குஅங்கு கிடைக்கும் பர்கர் மற்றும் பிரெஞ்சு பிரய்ஸ் ரொம்ப பிடிக்கிறது - வெஜீடரியான் தான்)

சல்மாவின் படைப்புகள்

ஒரு முஸ்லீம் பெண் எழுத்தாளர் கதை, கட்டுரை எழுவது, அதுவும், தமிழில்என்பது மிகவும் ஆச்சிரியத்தை உண்டு பண்ண கூடிய விஷயம். அவர் தான் சல்மா.

இயற்பெயர் ராஜாத்தி என்கிற ரொக்கையா. கனிமொழிக்கு நல்ல பழக்கம். அரசியலும் செய்கிறார்.


இரண்டாம் சாமத்தின் கதைஎன்ற நாவலின் ஆத்தர். மிகவும் விமர்சனத்திற்கு ஆளானது போல் உள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அவருடைய கவிதை தொகுப்பு ஒன்று "ஒரு மாலையும் இன்னொரு மாலையும்"பற்றி நாகூர் ரூமி அவர்கள் எழுதியதை இங்கே படிக்கலாம்.

Wednesday, September 10, 2008

நாகூர் ரூமி வலைத்தளம்

நாகூர் ரூமி வலைத்தளம் மிகவும் சிறப்பாக எழுதுகிறார். ஒருவன் எப்படி முழுமையான முஸ்லீம் ஆகிறான் என்பதை மிகவும் தெளிவாக கூறுகிறார்.

ஒரு முறை கோவை ..ரோடு முஸ்லீம் ஒருவரை , என் நண்பரின் தாத்தா, நான் சில காலம் கோவையில் பணியில் இருந்த போது ... பார்த்துள்ளேன்... பேசியுள்ளேன். பெயர் மறந்து விட்டது. அந்த காலத்தில் குதிரையில் செல்வாராம். போலீஸ் ஆள் என்று கேள்வி. காலை மாலை இரு வேலை இரண்டு சப்பாத்தி தான் உணவு.

குரான் பற்றி நிறைய விளக்கங்கள் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். ஆங்கிலத்தில் படித்தேன், முழுவதும். 'நீ முழு முஸ்லீம் ஆகிவிட்டாய்' என்றார். 'ஏன்' என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார், எவனொருவன் ஆண்டவனின் முழு படைப்பையும் படிக்கிறானோ (குரான்) அவனே ஒரு முஸ்லீம்' என்று சொன்னார். மனதில் ஒரு இறை காவியம் படித்த மகிழ்ச்சி!

ஒன்று சொல்ல வேண்டும், சில விளக்கங்கள், மிகவும் அறிவுபூர்வமாக இருக்கின்றன (புரியும்படி). உதாரணம் சுமார் 700 பி.சி. யில் குழந்தை எப்படி உருவாகும் என்பதை எழுதி இருக்க முடியாது!


அந்த பெரியவர் சொன்ன இரு விஷயங்கள் நான் வாழ்கையில் மறக்க மாட்டேன். "வெள்ளை உணவு பொருட்களை மத்ய வயதில் இருந்து சாப்டாதே". யாரோ ஒரு சுபி பெரியவர் சொன்னதாம். (ரஜினிகாந்த் இதை தான் சொன்னார் சமீபமாக). மனிதனுக்கு நாவை அடக்குவது, இச்சை அடக்குவது, ஆட்கள் அடக்குவது சுலபம் ஆனால் இயற்கை உபாதை மட்டும் அடக்கவே முடியாது! அவ்வளவு உண்மை! இது மனோதிடம். தவம். இதற்கு தான் அவரவர்கள் இமயமலை சென்று வந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், எல்லாவற்றையும் வாழ்கையில் கற்றுவிட வேண்டும், முடிந்த வரை என்கிறார் அவர். வாழும் காலம், சிறிது தானே? நான் சந்திக்கும் பொது அவருக்கு என்பது வயது இருக்கலாம்.

நான் தூத்துக்குடியில் சந்தித்த பெரியவர் ஒருவர் (அவர் மகள் திருப்பூர் காதர் நிட்டிங் குடும்பத்திற்கு கட்டி கொடுத்துள்ளார்) எனக்கு சொன்னது. "காசு கொடுப்பவன் வள்ளல் இல்லை, ஆனால் சோற்றுக்கு உப்பை கொடுக்கிறவன் தான் பெரும் வள்ளல்" என்கிறார். யோசித்து பாருங்கள்! "உப்பிலா பண்டம் குப்பையில் தானே?".

ரமதான் மாதம் மிகவும் கஷ்டமான காலம் - மழை இருக்கும் அரேபியாவில் - அதனால் ஒருவன் கடவுளை நேசிக்கிறான என்பதை 'விரதம்' மூலம் சோதித்து பார்க்க வேண்டும் - நல்ல உடல் நிலையில் இருக்கும் பொது. வேறு விளக்கங்கள் உள்ளன. அதை நாகூர் ரூமி எழுதுவார்.

ரம்ஜான் வாழ்த்துக்கள்!

மொழி விளையாட்டு ஜ்யோவ்ராம் சுந்தரின் நூறாவது பதிப்பு

மொழி விளையாட்டு ஜ்யோவ்ராம் சுந்தரின் நூறாவது பதிப்பு , அடுத்ததாக போடபோகிறார்.

வாழ்த்துக்கள்!

இதுவரை வாசகர்கள் போட்ட நல்ல பின்னூட்டங்களை தொகுத்து வழங்குக. நன்றி.

கலைஞர் டிவி ரேடிங் முன்னணி சூப்பர்!

கலைஞர் டிவி முன்னணி சூப்பர்!

விஷயம் விவரமாக இங்கே . இட்லிவடையில் வரவேண்டியது, இடம் மாறி போச்சு?

அப்புறம் இங்கேயும் பாருங்க... (சன் டிவி இரண்டாம் இடம்னு தெளிவா சொல்லுங்க!)

ரேடிங் எல்லாம் மாயா மாயா. எனக்கு இந்த ரேடிங் பற்றி ஒரு ஆங்கிலம் சினிமாஞாபகம் வருது - ஒரு குடும்பம் மிரட்டப்பட்டு, முப்பது நாட்கள் ஒரே செனெலைபார்க்க வைப்பார்கள். (படம் பேர் 'ரேடிங்'?)


Tuesday, September 9, 2008

கண்டுபிடி

நான் அங்கேயே தான் இருக்கிறேன்
இன்று
நீ வந்தாய் என்னோடு

வார்த்தைகள் விளையாடடு
அன்று
விளையாடினோம் சுகமாய்

ஏழாண்டு காலம் நீ
என்னை
காத்திருக்க வைத்தாய்

காத்திருத்தலும் ஒரு சுகம்
கண்மணியே
என் வாழ்வில் நீ வந்தாய்

என் மவுனம் புரியவில்லை
உனக்கு
நீயே எனக்கென ஆனாய்

என்னை பற்றி நான்
உனக்கு சொல்லமாட்டேன்
நீயே இப்போது கண்டுபிடி

புரிந்த பின் பறக்கலாம்
காலத்தின்
கையை பிடித்து

இப்போது வாழ்கையை
அனுபவிக்கலாம்
ஒன்றோடு ஒன்றாய்
!

(ஏழாண்டு காதலித்த பிறகு 1998 இல் என் மனைவியை கை பிடித்தேன்)

காதலி கிடைத்துவிட்டாள்

என கனவு
சிறகுகள்
பறக்கின்றன

எனக்கு நிஜமாகவே
காதலி
கிடைத்துவிட்டாள்

நடையும் கொடி இடையும்
சில்லென்ற பேச்சும்
கிறங்கடித்தன

முகம் நோக்கி இல்லை இல்லை
கண்ணோடு கண் பார்த்து
பேசுவது அழகு

பாடங்கள் புரியாவிட்டால்
கொஞ்சி கொஞ்சி
சொல்லிகொடுப்பது அழகு

ஒரு முறை காலையோ மாலையோ விஷ்
செய்ய மறந்துவிட்டால் கோபம்
கொள்ளை அழகு

தேவதையே உன்னை தான்
தேடினேன் ஒவ்வொருநாளும்
கிடைத்துவிட்டாய் இப்போது!

(1989 இல் என் இன்னாள் மனைவி பார்த்தவுடன் எழுதியது)

ஒரு வெறுமை

காதல் செய்ய யாருமில்லை
கனவு தான்
வருகிறது

எனது ஹீரோயின்
தினம் தினம்
மாறுகிறாள்

அடுத்த வருடம்
காலேஜ்
அங்கு கிடைப்பாளா?

அக்காவின் நண்பிகள்
அறை குறை
ஆடைகளில் நீச்சலும்

அம்மாவின் இளம் வயது
பக்கத்து வீட்டில்
ஆண்டிகளும்

சுண்டி இழக்கின்றன பேச்சுகள்
எங்கு கிடைப்பாள்
என்று

கண்கள் நிற்பதில்லை
வேட்டை ஆடும்
நாய் போல

எங்கே என் தேவதை?
எங்கோ
பிறந்திருப்பாள்!

வெறுப்பு தான் எனக்கு
இப்போது எனக்கு
வெறுமை!

காதல் இல்லாமல் காதல்

மூன் மூன் சென் வருகிறாள்
சினிமாவில்,
மனம் படபடக்குது

மிருதுளா வந்தாள்
மார்கெட்டுக்கு,
மனம் படபடக்குது

கண்ணாடி பார்க்கிறேன்
நேரம் தவறாமல்,
மீசை வளர்க்க ஆசை

வேலைக்காரி வருகிறாள்
பிடிக்கவில்லை தான்,
ஆனாலும் ஓரக்கண் பார்வை

அம்மா அப்பாவிடம் சொல்கிறார்கள்,
பையன்
வயசுக்கு வந்திட்டான்!


உயிரோசையும் எனது பஸ் பாஸ் நினைவுகளும்

உயிரோசையில் ராமசாமி அவர்களின் இலவசங்கள் தரும் இழிவுகள் கட்டுரை, என் கண் முன் கிராமங்களின் இந்த காலங்களில் வாழ்கையும், நகர அவசர கண வாழ்க்கை முன் நிற்கிறது.

இங்கே படியுங்கள் இலவசங்கள் தரும் இழிவுகள்


நான் கல்கத்தாவில் பிறந்து வளர்ந்த காலங்களில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் மாணவர்களுக்கு எழுபத்தி ஐந்து சதவிகித தள்ளுபடி கொடுத்து பஸ் பாஸ் அளித்தார்கள். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கிடையாது.

என் பள்ளி பாட்பரவில் இருந்தது. டம் டம் அருகே இருந்த நல என்ற வண்ணார் குடியிருப்பு பகுதியில் தான் நாங்கள் இருந்தோம். தினமும் இரண்டு கிலோமீட்டர் கை ரிக்சாவில் சென்றால் மாதம் ௨0 ரூபாய். மலை காலங்களில் அதோ கதி தான்.அதனால் நானும் என் அக்காவும் சிவப்பு தகர டப்பா பஸ்சில் தான் செல்வோம். ட்ரம் கிடையாது. மாதம் ஒன்றுக்கு ஐந்து ருபாய் மட்டும். தலித் என்ற முத்திரை காரணமாக இது கட்டாயம் ஆக்கப்பட்டது. ரிக்ஷாகாரர்கள் வரமாட்டார்கள்.

அப்பா எஸ்டி பைக்கில் பாக்டரி செல்வார் (சொந்தம்). சில சமயம் வசூலுக்கு போகும் பொது (மிட்டல் கம்பெனி) எங்கள் இருவருக்கும் ட்ரோப் கிடைக்கும். இதெல்லாம் ஐந்தாம் வகுப்பு வரை தான். கன்டக்டர்கள் திட்டி கொண்டே இருப்பார்கள் அன்பாய். 'பாதிலே பாதிலே' சத்தம் இன்றும் கேட்கும் அங்கே. தூரமாக தெரியும் ஹூக்லி பிரிஜ் மற்றும் ஆற்றில் போகும் மீன் பிடி படகுகள், தரை இறங்கும் விமானங்கள் என அரை மணி நேரம் வேடிக்கை பார்த்து செல்வோம். அவ்வளவு நெரிசல் கூட்டம் இருக்கும் அப்போதே. குடிகுரா பவுடர் தப்பாவைத்திருப்பேன், வேர்வை வாசம் போக்க.

சில காலம் கழித்து, பள்ளி நேரம் அரை மணி முன்னதாக ஆகினார்கள், பத்து நிமிடம் மிச்சம் ஆனது. சாயந்திரம் வரும் நேரம் மட்டும் கொஞ்சம் காற்று வீசும் வகையில் சீட்டு கிடைக்கும். நடந்து வந்த காலமும் உண்டு, மதர் தெரேசா மிசன் இருக்கும் வீதிகள் வழியாக. சிக்கி மிட்டாயும், பஞ்சு மிட்டாயும் வங்கி தின்ற பருவம் அது.

பிற்பாடு அக்கா பெரியவள் ஆன பின்பு, பஸ்சில் செல்ல லாயக்கு இல்லை என்று, கை ரிக்சாவில் கொஞ்ச நாள், பிறகு ஆட்டோவில் சென்றோம். 1983 இல் அப்பா மாருதி கார் வாங்கினார். எட்டாவது படித்து கொண்டு இருந்தேன். லாட்டரி கிடைத்த மாதிரி இருந்தது. தினமும் ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவார். பெட்ரோல் ஒரு ரூபாய்
லிட்டருக்கு என்று நினைப்பு.

அக்கா மெடிக்கல் காலேஜ் 1984 இல் சேர்ந்தாள். காலேஜ் பஸ் வரும். நான் சில சமயம் என் பன்னிரெண்டாம் வகுப்பு சமயம் சைக்கிளில் செல்வேன். மாத்ஸ் வாத்தியார் வீடு மற்றும் ஐ.ஐ.டி. கோச்சிங் செல்ல வசதி. அது ஒரு சொர்க்க காலம்! காதல் இல்லாத ஹீரோ தான். 1985 கரக்பூர் செல்லும் வரை, சர்க்கஸ் செய்து கொண்டு செல்வேன் பஸ்சில். நினைவுகள் மறப்பதில்லை!

பெங்களூரில் ரியல் எஸ்டேட் மற்றும் ஏர்போர்ட்

மேலும் மேலும் அதிகரிக்கும் என்று விலை ஏற்றம் செய்யும் தொழில் ரியல்எஸ்டேட். நானும் கடந்த ஒன்றரை வருடங்கள் அதில் உள்ளேன். ஆனால், ஐந்துகோடி போன்ற மினிமம் விலையில் தான், தொழில்யாதிபர்களுக்கு.

புதிய ஏர்போர்ட் இருக்கும் இடம் தேவனஹள்ளி. ஒரு குக்கிராமம். தரை மட்டம். பெங்களூரில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தூரம். அருகில் சுமார் பத்துகிலோமீட்டர் அளவு தூரத்தில் நந்தி மலைகள். கிராமங்கள் எல்லாம் காலிஆகிவிட்டன. பதினாறு சென்ட் நிலம் ஒரு கோடி ரூபாய்க்கு மையின் ரோடில் நண்பர் வாங்கினார். பத்து வருடம் முன்பு மொத்தம் ஒரு லட்சம் தான்ஆகியிருக்கும். இபோதெல்லாம், பெங்களூரில் இருந்து எழுபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் தான் இடம் ஒரு
கிரவன்டு பத்து லட்சத்திற்கு கிடைக்கும். ஹோசூர் பரவாயில்லை 10 லட்சத்திற்கு இரண்டு கிரவன்டு வாங்கினேன் ரயில் நிலையம் அருகில்.

நான் வாழும் பெங்களூர் பன்னேருகட்டா ரோட்டில் இருந்து
புதிய ஏர்போர்ட் செல்ல அதி காலையில் ஒன்றரை மணி நேரம், பீக் ட்ரபிகில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகிறது. எலேக்ட்ரோனிக்சிட்டியில் இருந்து மூன்று மணி நேரம், குறைந்த பட்சம். அங்கிருந்து (எலேக்ட்ரோனிக்சிட்டி) பத்து நிமிட தூரத்தில் ஹெலிகாப்டர் வசதி உள்ளது. ஐந்தாயிரம் ஒருவருக்கு. என்ன செய்வது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி கொதிக்கிறார். கிரண் மஜும்டர் ஷாவும் அழுகிறார்.

சென்னை செல்வதற்கு நாங்கள் ட்ரைன் தான். காலை ட்ரைன் ஆறு மணி சதாப்தி பதினோரு மணிக்கு சென்ட்ரல் செல்லும். ஐந்து மணிக்கு எழுந்து கிளம்பினால் போதும் கன்டோன்மன்ட் நிலையத்துக்கு ஆறு பத்துக்கு தான் வரும். செலவு சுமார் ஆயிரம்.

காலி ஐந்து மணிக்கு எழுந்து குளித்து ஐந்தரைக்கு கிளம்பி டாக்ஸி எடுத்து எழுமணிக்கு ஏர்போர்ட் சென்று, எட்டு மணி விமானம் எடுத்தால், அதுவும் சரியான சமயத்தில் டேக் ஆப் செய்தால், சென்னை மௌன்ட் ரோடுக்கு போக பதினோரு முதல் பன்னிரண்டு மணி ஆகும். செலவு ஐந்தாயிரம்.

தேவன் ஆர்தர் ஹைலி

எழுத்தாளர் தேவன் பற்றி பத்ரி எழுதியது, அவரை பற்றிய ஆர்வத்தை தூண்டியது.

ஆர்தர் ஹைலி பற்றியும் யாராவது எழுதலாம்! அவருடைய நோவல்கள் சேகரிக்கிறேன். நன்றாக உள்ளன.

எழுத்தாளர் பா.ராகவன் அவருடைய கிழக்கு பதிப்பகம் தேவன் எழுதி ஐந்து புஸ்தகம் வெளியீடு விழா பற்றி எழுதியுள்ளார்..
.

Monday, September 8, 2008

கனவுகள் அர்த்தங்கள்

மனதிற்கு பிடித்தவை/பிடித்தவர்கள் உருவம் பெற்று கனவாய் வரும்/வருவார்கள் - ப்ராய்ட்.

அப்படி தான் கடவுள் உருவங்கள் ஆக்கப்பட்டன.

மதுரை வீரன் சாட்சி. எல்லைசாமிகள் சாட்சி. பயம் தான் எல்லாம்!

உங்கள் கனவு உங்கள் மன நிலையை கூறுகிறது.

நீங்கள் தி.ஜானகிராமன் பற்றி கனவு தினம் காண்கிறீர்கள் என்றால், அவர் மாதிரி வர வேண்டும் என்பது ஆசையா?

எனக்கு மோக முள் இன்னும் ஒட்டவில்லை....

காண்டம் ரிங்க்டோன் வேணுமா?

இங்கே பார்த்தேன்...

மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் பௌண்டேசன் மற்றும் பி.பி.சி. ஆகியோர் முயற்சி இது.

வரவேற்போம்.

நான் நிறைய காண்டங்கள் பார்த்துள்ளேன்....
ஆனால் இந்த மாதிரி கிடையாது...
பாலகாண்டம், சுந்தரகாண்டம், ஆரண்யகாண்டம் மட்டுமே பெருமை என்றிருந்தோம்.
அது மாதிரி இதுவும் (காண்டம்) வாழ்க்கைக்கு வேணும்!
எந்த புத்திலே எந்த பாம்பு இருக்குமோ, தெரியாது.

நல்ல முயற்சி செய்வார்களா?

இங்கே கொடுகபட்டிருக்கும் ஒரு விஷயம் நல்ல முயற்சி ஆகும். அலைபேசி மூலம் குழந்தை பேரு காலத்தில் உதவி.

படியுங்கள் இவ்விடம்

எல்லோர் கையிலும் அலைபெடி (மொபைல்) உள்ளது இக்காலத்தில்.

என் வீட்டு வேலைகாரி ஒரு பழைய மாடல் அலைபேசி தினமும் கொண்டு வருகிறாள். இது அவசியம் என்று சொல்கிறார். நல்லது!

தென் இந்தியாவில், நோய் குறித்த அறிவுரை வழங்க ஒரு வெப்சைட், மற்றும், தொண்டு ஆர்வலர்கள் இணைக்க வேண்டும். நான் வேலை பார்த்த காலத்தில் மெடிக்கல் டிபர்டுமேன்டில் சலாம் அடிக்கவே சரியாக இருக்கும், நேரம்.

Sunday, September 7, 2008

திருட்டு குறும்படம்

கேபிள் சங்கரின் திருட்டு குறும்படம் ஆக்சிடென்ட்

பார்த்தேன் முகவும் மோசமான திரைக்கதை அமைப்பு. 1992 - 93 நியூ யோர்க்கில் திரைப்பட கலை கற்றுள்ளேன். பல குறும்படங்கள் இயக்கி உள்ளேன். எனது பெங்கால் நண்பரின் திரைப்படத்திற்கு திரைகதை அமைத்துள்ளேன் (என் பெயர் வராது). 'நரேடிவ் ஸ்டைல்' என்று ஒன்று உள்ளது, அதில் மட்டமான வகை இது . இதற்க்குள் விளம்பரம் வேறு!

பரிச்சல்காரனின் கொதிப்பு..

சுஜாதாவின் 'சசி காத்திருக்கிறாள்' என்ற கதையின் உல்டா (அட்டக்காப்பி) என்று கேள்வி! சங்கர் நாராயணன் திருமதி சுஜாதா அவர்களிடம் ஓசி பெர்மிசன் வாங்கி இருக்கலாம், வருமானம் வராத படம் என்பதால்.

சுஜாதாவோடு நான் ஒரு முறை பேசிய போது, 1% இன்ச்பிரேசொன் மாற்றுமொழிகளில் இருந்து எடுத்து கொள்வது தப்பில்லை என்றே கூறினார்.

உங்களுக்கு தெரியுமா 'ரோமியோ and ஜுளிஎட்' பெர்சிய (ஈரான்) நாட்டு 'லைலா மஜ்னூ' கதையை தழுவியது என்பது?
(சுமார் 400 வருடம் இடைவெளி)