Tuesday, September 9, 2008

கண்டுபிடி

நான் அங்கேயே தான் இருக்கிறேன்
இன்று
நீ வந்தாய் என்னோடு

வார்த்தைகள் விளையாடடு
அன்று
விளையாடினோம் சுகமாய்

ஏழாண்டு காலம் நீ
என்னை
காத்திருக்க வைத்தாய்

காத்திருத்தலும் ஒரு சுகம்
கண்மணியே
என் வாழ்வில் நீ வந்தாய்

என் மவுனம் புரியவில்லை
உனக்கு
நீயே எனக்கென ஆனாய்

என்னை பற்றி நான்
உனக்கு சொல்லமாட்டேன்
நீயே இப்போது கண்டுபிடி

புரிந்த பின் பறக்கலாம்
காலத்தின்
கையை பிடித்து

இப்போது வாழ்கையை
அனுபவிக்கலாம்
ஒன்றோடு ஒன்றாய்
!

(ஏழாண்டு காதலித்த பிறகு 1998 இல் என் மனைவியை கை பிடித்தேன்)

No comments: