Tuesday, September 9, 2008

காதலி கிடைத்துவிட்டாள்

என கனவு
சிறகுகள்
பறக்கின்றன

எனக்கு நிஜமாகவே
காதலி
கிடைத்துவிட்டாள்

நடையும் கொடி இடையும்
சில்லென்ற பேச்சும்
கிறங்கடித்தன

முகம் நோக்கி இல்லை இல்லை
கண்ணோடு கண் பார்த்து
பேசுவது அழகு

பாடங்கள் புரியாவிட்டால்
கொஞ்சி கொஞ்சி
சொல்லிகொடுப்பது அழகு

ஒரு முறை காலையோ மாலையோ விஷ்
செய்ய மறந்துவிட்டால் கோபம்
கொள்ளை அழகு

தேவதையே உன்னை தான்
தேடினேன் ஒவ்வொருநாளும்
கிடைத்துவிட்டாய் இப்போது!

(1989 இல் என் இன்னாள் மனைவி பார்த்தவுடன் எழுதியது)

1 comment:

Anonymous said...

உடையான் உன்தன் நடுவு இருக்கும்
உடையாள் நடுவுள் நீ இருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்பதனால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம்
முடியாமுதலே என் கருத்து
முடியும் வண்ணம் நின்றே.
- திருவாசகம்