Friday, March 13, 2009

பரிசல்காரன் என் எனிமியா?

பரிசல்காரன் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன், பதிவுகள் எழுத.

தமிழ் வலிபூக்களில் ஒரு வித்தியாசமான முயற்சியில், அவர் செய்த கூத்துக்கள் அருமை.

இப்போது அவர் புதிய பதிவில் இருந்து......

எதிரிகளைக் காதலிக்கிறேன்!

*********


சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் வந்ததன் சாராம்சம் இது. ஹாலிவுட்டில் 70-80 களில் பிரபல நகைச்சுவை நடிகரான ஜார்ஜ் கார்லின் (சமீபத்தில் காலமானார்) சொன்னவை...

நமது வாழ்வின் முரண் என்னவென்றால்...

நாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம்.
பெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது.
நிறைய வசதிகள் இருந்தாலும், குறைவான நேரமே இருக்கிறது. நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்..

நிறைய குடிக்கிறோம், நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம், வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம், தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை!

நிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..? ஒரு கணத்தில் வெறுக்கிறோம்.

மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.

-இப்படியே போகிறது அந்த மின்னஞ்சல்.

4 comments:

Raju said...

இதன் மூலமாக தாங்கள் சொல்ல விரும்புவது...?!?

பரிசல்காரன் said...

//வலிபூக்களில்//

என்ன ரமேஷ் இது? என் பதிவெல்லாம் படிச்சு அடிபட்டதால வந்த வலியா?

Ramesh said...

@டக்லஸ்
//இதன் மூலமாக தாங்கள் சொல்ல விரும்புவது...?!?//

பரிசல்காரன் என் பதிவுலக நண்பர். ஒரு எதிர்வினை, அவ்வளவு தான். ஒரு சிறு குறிப்பு. ;-)


@பரிசல்காரன்
/* //வலிபூக்களில்//

என்ன ரமேஷ் இது? என் பதிவெல்லாம் படிச்சு அடிபட்டதால வந்த வலியா? */

வேற ஒன்னும் இல்லீங்க பரிசல்காரன், வலைப்பூக்கள் என்பது வலிப்பூக்கள்னு டைப் ஆகிவிட்டது.

Ramesh said...

Sorry டக்ளஸ் became டக்லஸ்!