Wednesday, April 29, 2009

கார்காலம்

கண்ணில் தெரிகிறது
கார்காலம்
கனவுகள் மறைகின்றன
தினம்தோறும்

வாழ்க்கை ஒரு மீன்படகு
அனுபவம் மீன்பிடித்தல்
வைத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும்
அவரவர் இஷ்டம்

மனம் சுகம் தேடுவதில்லை
வாழ்ந்தால் போடும் என்கிறது
இருப்பதை வைத்து உண்டுவாழ்
எதற்கு இந்த வீண் ஆசைகள்

கருப்பு பணம் பதுக்குதல்
இருக்கத்தான் செய்யும்
தன்மானம் கெட்ட ஆட்கள்
நிலத்தில் இருக்கும் வரை

ச்விச்ஸ் என்ன
கேய்மன் என்ன
மரூசியஸ் என்ன
இருப்பவனுக்கு தான் வெளிச்சம்

சூடு சொரணை இல்லாமல்
வோட்டுக்கள் என்ற குறியில்
தின்னென்று வீம்பி நிற்கும்
அரசியல்வாதிகளின் கொட்டம்

இனி வருகிறது அவர்களுக்கு
தீர்ப்பு என்ற முடிவு
அடுத்தவனின் சொத்தை ஆள்பவர்
இருப்பதை வைத்து மடிவதே மேல்!

2 comments:

Vinitha said...

அருமை.

பி.ஜே.பியை தாக்குறீங்க!

Raju said...

கவிதை, அரசியல்வாதிகளின் ( அத்வானி) சுயரூபத்தை தோலுரித்து... காட்டுது...