Thursday, March 26, 2009

தேர்தல் தமாஷா

இது என்ன கூத்து... ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒருமுறை பாட்டாளி மக்கள் கட்சி. ராமதாஸ் (தமிழ் குடிதாங்கி அய்யா!). இப்போது நண்பரோடு (தொல்.திருமா) மோதும் சிதம்பரம். அதிலும் தி.மு.., தென்காசி தொகுதியைவிடுதலை சிறுத்தைகளுக்கு கொடுத்தால் தப்புவார்! (இப்போது - குற்றாலமா?). மேலும் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி கொஞ்சம், அ.தி.மு.க விற்கு போகும்...

விஜயகாந்த் நிச்சயம், தி,மு.காவிற்கு சாதகமாக தான், வாக்குகளை பிரிப்பார். என் இஷ்டம், அவர், பத்து சீட் கேட்டு வாங்கி, தி.மு.க (16)+ காங்கிரஸ்(12) + தே.மு.தி.(10) + வி.சி.கே(1) என கூட்டணி அமைத்தால், நலம். தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் வரும். பாண்டிச்சேரி காங்கிரஸ் வசம் கொடுத்துவிடுவார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி: அன்புமணி ராமதாஸ் தேர்தலில் நிற்க மாட்டார்! ராஜ்ய சபை வழி தான் , தனி வழி.

இங்கே கர்நாடகாவிலும், குடும்பம், சண்டை கோஸ்டி என பி.ஜே.பி ஓடுகிறது..

தேவ கவுடாவின் மகன்களின் அக்கப்போர் தாங்க முடியவில்லை.

No comments: