Sunday, April 19, 2009

சோகம்

கண்ணுக்குள்ளே சோகம்
நண்பர்கள் இல்லை
வேலை செய்யும் இடத்தில்
ஏமாற்றும் சிரிப்பும்

இது ஒரு கவர்ச்சி நாடகம்
பார்த்தவர்களுக்கு புரியாது
புரிந்தாலும் தெரியாது
அறிந்தவர்களுக்கும் சாமன்யமில்லை

பவுடர் பூசும் முகமும்
வென்னிரமாக்கும் க்ரீமும்
புருவம் உயர்த்தி பேசுமழகும்
ஒரு நாகரீக நடிகன் ஆகிறான்

கடன் எனும் கந்துவட்டி
அலையன திரண்டு வரும் மக்கள்
வசுலாகுமா கேள்வி சுருங்கும் முகம்
வாங்க சார் லோன் நிச்சயம்!

1 comment:

Vinitha said...

அருமை. ஓகே.