Tuesday, September 23, 2008

என்னுடைய கதை மனிதனில் காதல் தீ பற்றி

மனிதனில் காதல் தீ அங்கே போய் படியுங்க.

எண்பத்தி எட்டாம் வருடம் ஹிந்தியில் எழுதியது.
காஸ்மீர் ப்ரிச்சனை ஆரம்பம் ஆன சமயம், ராஜிவ் காந்தி ப்ரிதமர் ஆன பிறகு நல்ல அடக்குமுறை ஜாஸ்தி ஆனது அங்கே.கொஞ்சம் தமிழ் சுவை கூறியிருக்கிறேன். எங்கள் காலேஜில் ஒரு போட்டி. விமல் வர்மா எழுதிய ஒரு புஸ்தகம் பரிசு - அட்டோக்ராபுடன். நிச்சயம் ஒரு நல்ல சினிமா எடுக்கலாம்.

எல்லோரும் முஸ்லீம் பார்வையில் காஸ்மீர் கதை எழுதும் போது, எனக்கு ஹிந்து பண்டிட்டுகள் பார்வையில் எழுத தோன்றியது. அதற்காகேவே பரிசு கொடுத்திருக்கலாம்! :-)

என் அப்பா அமரர்
ஆர்யா ரத்தன் டெண்டுல்கர், சான் பிரன்சிச்கோவில் பெங்காலி டிராமா ஒன்று இந்த கதையை கருவாக வைத்து நண்பர்களோடு சேர்ந்து இரண்டு முறை மேடை ஏற்றினார், சில வருடங்கள் முன், மாற்றம் - இராக்கில் நடப்பதாகவும் ஜோர்டனியன் ஒருவன் பிழைப்புக்காக இராக்கில் வாழ வருவதாகவும், அமெரிக்க தாக்குதல் சமயத்தில் அவரால் படையை எதிர்த்து இருவரும் உயிர் விடுவதாகவும் ... (ரொம்ப தில்லுங்க, அவருக்கு... இந்தியாவிலே விட்ருவாங்களா? கிரீன் கார்டு வைத்திருந்தார்!).

இன்னொரு யுத்தி நான் கை ஆண்டது, ஹீரோ பெயர் சொல்லாமல், படிப்பவர்க்கு ஒரு கற்பனை ஷக்தி கொடுத்தேன்.

No comments: