உன் புன்முறுவல் ஒன்று போதுமே
என் மனதினை குளிரச் செய்ய
அரசாங்க உத்தியோகம் செய்பவன் நான்
அணுஅணுவாய் கொல்கிறார்கள் அனுதினமும்
திட்டுகிறார்கள் கண்மூடித்தனமாய்
நான் அரசாங்க ஊழியராம் கண்மணி
இவர்கள் ஆடம் ஐந்து வருடம் தான்
மகிழ்ச்சியை இருந்துவிட்டு போகட்டும்
முட்டாள் ஜனங்களின் வோட்டுக்கள்
அவர்கள் காசு குடுத்து வாங்கினார்கள்
திருப்பி கொடுத்ததெல்லாம் நாமங்கள்
கண்ணுக்கு தெரியாத பாலங்கள்
விளக்கு பிடிக்க வேண்டுமாம்
இவர்கள் வீட்டில் 'அதை' செய்ய
நல்ல லாந்தர் வைக்க கூட
வசதியில்லாத அற்றினை கபோதிகள்!
வந்து விட்டார்கள் வாக்கு கொடுத்து
பிடித்து விட்டார்கள் ஆட்சியை
குறைவதில்லை திமிர்த்தனங்கள்
ஆண்டவன் அடக்குவான் இந்த தலைமுறையில்!
தெ.பொ.மீ
22 minutes ago
No comments:
Post a Comment