Friday, September 26, 2008

காதல் தியானம்

பூவாய் நீ வந்தாய்
பூஜைகளை செய்தாய்

வேண்டினாய் மனமுருகி
வேண்டியதை எனக்கு தருவாய்

ஆகாயத்தின் வண்ண பறவைகளை
ஆசையாய் பார்த்தாய்

அழகானை சுனரியில்
அற்புதமாய் கோலங்களிட்டாய்

அழகு கைகளால்
அபிநயங்கள் பல பிடித்தாய்

பதினாறு வயதில் ஆடிய ஆட்டங்களா
பதில் சொல்ல முடியாது அதை பற்றி

சொல்லிய வார்த்தைகள்
சோகமென முடிந்தாலும்

கட்டியவளை மனமுருகி
காப்பாற்றுகிறேன் கலங்காமல்

இன்று இதயங்கள் மாற்றுகிறார்கள்
இதயத்தில் நீ மட்டும் மாறவில்லை!

(நிச்சயம், இப்போ தாங்க தேநீர் குடிச்சுட்டு எழுதறேன், உண்மை சம்பவம் இல்லீங்க)

No comments: