Saturday, September 20, 2008

பார்வட் மெயில்

இரண்டு நாள் முன்பு ஒரு பார்வட் மெயில் வந்தது. உங்களுக்கும் வந்தது போலே?

ஒன்று ஐகியா நாற்காலி பற்றி.... சில நண்பர்களுக்கு மட்டும் போட்டேன். (அதுதாங்க கலவி செய்ய பயன்படும் ஒரு ஓட்டை நாற்காலி)... எனது புது தமிழ் வாத்தியார், கண்டிப்பாக அதை வைத்து ஒரு பதிவு போடுவார்.

பதிவும் போட்டேன். பத்து நிமிடங்களில்...காலையில் எனக்கு விழுந்தது திட்டு, மனைவியிடமிருந்து. அழித்துவிட்டேன். "ஆபிசுலே, கருமம் பிலாக் ஓபன் பண்ண முடியலே, கழிசடை".

இந்தியாவின் சிறந்த விளம்பாரம் என்று ஒரு மெயில் வந்தது... இப்போது பரிசல்காரனின் பதிவிலும் உண்டு. லைக் மைன்ட்ஸ் தினக் அலைக்.

இப்போ தான் தெரிந்தது, நடிகை சங்கீதா என் மனைவிக்கு, ஓரு வகையில் தூரத்து சொந்தம் என்று. மாபிள்ளை தேடுகிறார்கள். நான் சொன்னேன், வெளி நாட்டு தொழில் அதிபர் கிடைப்பான் என்று. (சில காலம் கழித்து, நடிக்க வந்து விடுவார்கள், கேமரா மயக்கம்). நல்ல பெண்.
மார்கண்டேய நடிகர் சிவக்குமார் மனைவி வகையில் கூட எங்களுக்கு ஒரு சொந்தம் இருக்கிறதாம். அவர் செய்த ரேகமேண்டசொன் தான் இயக்குனர் பாலா பிதாமகன் படத்தில் நடிக்க வாய்ப்பு. எங்கள் குடும்பத்தோடு (மனைவி ஸைட்)அவ்வளவு நெருக்கம் இல்லை. சரவணன் கல்யாணத்திற்கு கூட அழைப்பு இல்லே. ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்ததால், அதுவும் ஒரு தலித்? இப்போது சங்கீதாவின் ஒன்று விட்ட தங்கை கல்யாணம் தீபாவளி முடிந்து நடக்கும், அதற்கு கூப்பிடுவார்கள்!

No comments: