Thursday, September 18, 2008

காதல் : முற்றும் முடிந்தது முற்றியது

நான் காதல் கொண்டது ஒரு முறை
அது என் இக்கால மனைவியோடு

கண்ணழகு
இடையழகு
நடையழகு
என்று சொல்லவில்லை
உன் மனம் அழகு என்றேன்

பட்டாம்பூச்சிகள் படபடத்தன
உன் முதல் பார்வையால்
என் நெஞ்சிலே

கடைசி நாள் வரை
காக்கவில்லை
உன் காதலை சொல்ல

முடிவை சொன்னாய்
முற்றும்
முடிந்தது
முற்றியது
என் காதல் பைத்தியம்!

(இப்போ தான் எழுதினேன். கடைசி பாராவின் சில வார்த்தைகள் என் புது தமிழ் வாத்தியார் எழுதின கதைலே இருந்திச்சு!)