Tuesday, September 16, 2008

பருத்திவீரன் மற்றும் படையப்பா

அமிரின் சிறந்த் படம் பருத்திவீரன். நேற்று கலைஞர் தொல்லைகாட்சியில் போட்டார்களாம் . விடு திரும்பும் போது பத்து மணி. இப்போதெல்லாம் யெர்போர்டில் இருந்து வெளிய வந்தவுடன் டாக்ஸி உண்டு. பெங்களூரு புது ஏர்போர்ட் ஒரு மட்டமான ஒன்று. ஒரு மணி நேரத்தில் ரிங் ரோடு வழியாக நாற்பது கிலோமீட்டர். குழந்தைகள் எழுந்திருந்தார்கள். மைசூர் பா மைக்ரோ வேவ் செய்து சாப்டோம். அண்ணா பிறந்த நாள். சென்ற வருடம் ஓணம் சமயம் அங்கு இருந்தோம். கிருஷ்ணா ஸ்வீட்சில் கிடைக்கும் பாலாடை பிரதமன் அருமை. சென்னைக்கு திரும்பி விடலாமா, குடும்பத்தோடு என்று தோன்றியது. இன்னும் ஒரு ஐந்து வருடம்?

ஆமாம் விஜய் டிவியின் பர்பிவீரன் லொள்ளுசபா அருமை தானே?

கே.டிவி.யில் படையப்பா கடைசி சில நிமிடம் பார்த்தேன். மன்னிப்பு என்பது அழகாக சொல்லப்பட்டது. வீடு வச்சுக்கோ. என்ன? அப்புறம் என்னங்கன்னா விஜயின் விவேக்கின் ஜோக்ஸ். தூக்கம். இருமல். பேனாடரில். மயக்கம். எழு மணி. வாக்கிங்....

No comments: