Thursday, September 18, 2008

ஓ மானே மானே

மானே மானே
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னை கண்டேன்
சின்ன பெண்ணே
ஆசை நெஞ்சே நான் போதை கொண்டேன்
பொன் மாலை கட்டிக்கொள்ளும் பேதை தானே!

மீண்டும் வருமே காலம் வசந்தம் தருமே வாழ்வில்
மேக நிழலே போகும் தீப ஒளியே சேரும்
உனது சுகம் இனி வரும் நாளில் நூறாகும்..

மானே மானே ...

பூவொன்று காற்றோடு சாய்ந்தால் செடியும் சாய்வதில்லை
பகல் மாறி இருளும் வந்து போகும் விதியில் மாற்றம் இல்லை
பாதை கொஞ்சம் மாறினாலும் பயணம் மாறுமா
பாசம் கொண்டு வாழ்வை நம்பு காலம் மாறுமே
எங்கே எங்கே இன்பம் எங்கே அங்கே
உந்தன் நெஞ்சில் உள்ளே தேடி வந்திடும் சந்தோசமே

மானே மானே ..

சொந்தங்கள் நான் கண்டதில்லை உறவு என்று வந்தாய்
உன் பார்வை சந்தித்தபோது மின்னல் நெஞ்சில் தந்தாய்
உந்தன் பாடல் கேட்ட போது தானே வந்த ஆனந்தம்
தேடல் இன்றி வந்த இன்பம் ஆயிரம்
உந்தன் கண்ணில் எந்தன் கண்ணை நானும் கண்டேன்
நீயும் கண்டாய் தேடி வந்திடும் சந்தோஷமே

மானே மானே ..

(என்னுடைய முந்தய பதிவின் உள் அர்த்தம் தெரிந்தால், இது புரியும்!)

No comments: