Monday, September 29, 2008

தாம்பத்யம்

உறவுகள் பலகோடி உண்டு
அதில் உண்மை உறவு ஒன்று தான்

அம்மா சல்லடை செய்து தேடினாள்
இல்லை நீங்களாக கண் பிடித்தீர்கள்

கண்களால் தொடங்குவீர் உறவுப் பாலம்
கண்கள் இரண்டால் மயங்கி நிற்பீர் பலகாலம்

உறவுக்கு தாலி ஒரு சின்னம்
மனைவிக்கு கொடுப்பது வெகுமானம்

கண்களில் ஒற்றுவாள் தினம் தினம்
கலங்குவாள் உன்னை பிரிந்தால் அனுதினம்

குழந்தைகள் கொடுப்பார்கள் உயிர் மூச்சு
சொல்லில் காப்பாற்றுவது அவர் பேச்சு

இதை தான் மனமுருகி சொல்கிறார்களா
தாம்பத்யம் என்று?

2 comments:

Unknown said...

Thalaivaa,
This kavithai is super, super, super !!!

Anonymous said...

Beautiful! As a women I want the best... you are capturing emotions.