Thursday, October 16, 2008

காதலின் விதி

பதுங்குகிறாள் காதலி பயத்தோடு
நெருங்குகிறான் காமுகன் வெறியோடு
தொடுகிறான் அவளை உடல் பசியோடு
மயங்குகிறாள் அவள் முழு மனதோடு

அன்பும் பாசமும்
அறிவியல் நுணுக்கமும்
பண்பும் பயனும்
மனதில் மிகுந்தோட

சல்லாபத்தின் உச்சியில்
சரச நடனங்கள் செல்ல
உல்லாசபுரியில் உவமைகள்
உடலோடு நடனம் நடத்த...

இது தான் காதலின் விதியா
கல்லில் செதுக்கிய கட்டளையா?

No comments: