Thursday, October 16, 2008

எழுத்தாக்கம்

மொழி தெரியாதவன் எழுதினால்
அதை எழுத்தாக்கம் எனலாம்
கவிதை நடையை அங்கீகரிக்கலாம்
கதைகளை ரசிக்கலாம்

அறியாதவர்களுக்கு கோடிட்டு காட்டலாம்
அறிந்தவர்களுக்கு பாராட்டு சொல்லெலாம்
நண்பர்களுக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம்
குசும்பர்களுக்கு ஒரு குட்டு கொடுக்கலாம்

உணவு கவிதையாகாது
உணவில்லாதவன் எழுதும் வரை
எழுத்து எழுத்தாக்கம் ஆகாது
மொழி அறியாதவன் எழுதும் வரை!

No comments: