Thursday, October 16, 2008

வீடு மாற்றல் ஒரு கதை

எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய ஒரு புது பதிவு....

கோடம்பாக்கத்துக்குப் போன கோயிஞ்சாமி

அவர் வீடு மாற்றும் அனுபவத்தை சொல்லியுள்ளார். அழகான பதிவு. அடிக்கடி நடக்காத விஷயம், ஆனாலும் தினம் நாம் கேள்வி படுவது!

எழுத்து என்பது எந்த விசயத்தையும் சொல்லும் விதம் தான் என்பதை அருமையாக கூறுகிறார்.

சென்னையில் நான் முதலில் வேலை செய்த போது இருந்த வீடுகள், புறா கூடுகள்.

நான் அரசாங்க வேலையில் சென்னை வந்த புதிது, க்ரீன்வய்ஸ் சாலையில் ஒரு வீடு கொடுக்கப்பட்டது. பெரிய அரசாங்க வீடு. எனக்கு தேவையான ஒன்றும் பக்கத்தில் இல்லை. நண்பர்கள் வீட்டிற்க்கு இரவு அல்லது விடுமுறையில் கழியும். எனக்கு பிடித்தது இப்போது அம்பேத்கர் பார்க் மட்டும்... அருமை.

அதன் பிறகு கல்யாணம், மனைவி, குழந்தைகள் என செட்டில் ஆன சமயம்...

அதற்க்கு ஒரு மிக பெரிய பதிவு போட வேண்டும்.

நினைவுகள் அசைபோடுகிறேன்.

No comments: