Saturday, September 6, 2008

கொல்கத்தாவும் கொல்கொதாவும்

கொல்கொதா என்பது கபாலஸ்தலம் என்று அர்த்தம்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் - யூத ராஜாவால் .... ஒரு கதை இங்கே.

நிஜமாகவே
கொல்கத்தா என்பது பெயர் காரணம் இல்லாமல் வந்த ஊர், கிறித்துவ அமைப்பு மூலமாக இருக்கலாம், ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஆரம்பித்த இடம் ஆயிற்றே.

கொல்கத்தா நான் பிறந்து ஊர். அப்போது கல்கத்தா என்று அழைக்கப்பட்டது.


இப்போதுள்ள கொல்கத்தா காளிகோவிலின் பயங்கரம், கம்யூனிஸ்ட் தீவிரம், திரிணமூல் காங்கிரஸ் சத்தம், ஹூக்லி பாதிப்பு, நாங்கள் இருந்த தென் கொல்கத்தாவில் நாலா என்ற வண்ணார் பகுதி. ஜாதி பார்த்து வீடுகொடுப்பார்கள் என்று கேள்விபடுகிறேன் இன்றும். மேல் ஜாதி என்றால் வாடகையும் குறைச்சல். அரசியல்வாதிகள் இருக்கும் ஏரியா, வளர்ந்து வருது. ௨000 ரூபாய்க்கு ஒரு சிங்கள் போர்டின் வீடு கிட்டும்.

சொந்த வீடு உள்ளது, அதில் வரும் வாடகை வருடம் ஒரு முறை குடும்பத்தோடுசென்று பார்த்து வரும் செலவிற்கு ஆகும். ஒரு ரூம் எங்கள்ளுக்காக, தயார்செய்து கொடுப்பார்கள். அக்கா குடும்பத்தினர் ஹோட்டலில் தான் தங்குவார்கள்.

அன்னை தெரேசாவை மறக்க முடியாது. வீதியில் மரணம் அடைபவர்கள்ளுக்காக தனியாய் ஒரு அமைதி இல்லம் ஏற்படுத்தி கொடுத்த மகான்.

மறந்து கொண்டு இருக்கிறேன்.... மெதுவாய்.

No comments: