Friday, August 29, 2008

காந்தியும் செக்சும் மற்றும் எனிமா

நண்பர் பத்ரி தன் வலைத்தளத்தில் எழுதியுள்ளார் இப்படி ..

காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்

முதலில் காந்தியின் சுய சரிதை படிக்க எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான்இருந்தது, வீணாக, தேவையில்லாமல், தன் மீது கஷ்டம் வரவழைத்து கொள்கிறார் என்று. அவ்ருக்கு இருந்த திறமையில், இந்தியாவை எங்கோ கொண்டு சென்று இருக்க முடியும்.


இயற்கை மருத்துவ முறையில் எனிமா செய்து கொள்வது நல்லது. "இனிமைதரும் எனிமா" என்ற புஸ்தகம், சென்னையில் புக் எக்ஜிபிசொனில் வாங்கினேன். பிறகு காதி பவனில், எனிமா டம்ளர் கிடைத்தது. கலை கடன் முடித்த பிறகு, ௨00 மில்லிதண்ணீரில், எனிமா எடுத்து கொண்டால், நாள் முழுதும் உற்சாகம் தொடர்கிறது. என்ன, டைம் தான் தேவை படும், சுமார் ௨0 நிமிடம், தண்ணீர் ஆசன வாயில் வழியாக செலுத்திய பிறகு, நிற்க வேண்டும். தினமும் ஒரு முறை வெளிக்கி சென்றால் போதுமானதாக உள்ளது. ( வைரமுத்து கோபித்து கொள்வார், அவர் இரண்டு முறை ஏவுகணை அனுப்புபவர், நல்லது என்று சொல்பவர் ).

எனக்கு காய்ச்சல் வந்த பொது, இளம் சுடு நீரில் எலுமிச்சை சாறு கலந்து, எனிமாகொடுத்தேன். மருந்தில்லாமல் காய்ச்சல் நின்றது. என் குழந்தைகளுக்கும் கொடுக்கிறேன். பெண்கள் கொஞ்சம் கூச்சம் படுகிறார்கள்.
மாத விடாய் முடிந்த பிறகு, சுத்தம் செய்ய உதவும்.

உங்கள் மலக்குடல் உங்கள் உயரம் இருக்கும் பதினெட்டு வயதில். அமிதாபுக்கு இரண்டு அடி வெட்டி விட்டார்கள், கண்ட சாப்பாடு சாப்பிட்டு. காப்பற்றுங்கள் அதை கஷ்டப்பட்டு.

No comments: