Sunday, January 18, 2009

சென்னை புத்தக கண்காட்சியும் நானும்

நான் இந்த பதிவில் எழுதியதை கிண்டல் செய்து நிறைய கமண்ட்ஸ். எதோ நான் பணம் படைத்தவன், உள்ளவன் என்று காட்டிக்கொள்ள எழுதுகிறேன் என்றார்கள்.. நான் அதை வெளியிடவில்லை. புத்தக லிஸ்டும் போடவில்லை. எதாவது காரணம் காட்டி, கும்மி அடிப்பது தான்.... இங்கே வழக்கம்.

இந்த பதிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்று வாங்கிய புத்தக லிஸ்ட்

புத்தகங்கள் வாங்குவது நல்ல விஷயம் தானே.

அப்புறம், ஒரு அடையாளத்திற்காக, எந்த வித உள் நோக்கமும் இல்லாமல் ஒருவர் பற்றி எழுதியதை, முகில் என்பவர் குறை கூறி இருந்தார். அதை மாற்றி விட்டேன். பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜங்க. மத்தளத்திற்கு எப்போதும் ரெண்டு பக்கம் இடி என்கிறார், என் மாமனார்.

*********

இன்னும் சிறிது நேரத்தில் சென்னை சென்ட்ரல் பயணம், பெங்களூர் திரும்ப.

No comments: