Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

Monday, September 22, 2008

கவிதை

நான் ரசித்த கவிதை இங்கே... நரசிம் என்பவர் எழுதியது... (கேரளா பாதிரி பெண் கேஸ் நினைவுண்டா?)

விந்து சிந்தும் பேருந்து..

சுஜாதா சொன்னது புது கவிதை பற்றி "வார்த்தை அலங்காரங்கள் இல்லை கவிதை, பட் நினைவு அல்லது துடிப்பின் கோர்வை. பாடலாக இருக்க வேண்டாம். உரை நடை போதும்." (அச்சு அசலாக நான் சொல்லவில்லை இங்கே). நா.காமராசன் மற்றும் ஷாஹுல் ஹமீது போன்றவர்கள்ஒத்துகொண்டது இது. நிர்மல் வர்மாவும், பச்சனும் (அப்பா) புகுந்து விளையாடி உள்ளனர்.

எனக்கு நிஜமாக நா.முத்துக்குமார் பிடிப்பதில்லை. இன்னும் நிறைய சினிமா பார்த்துவிட்டு சொல்கிறேன். மு.மேத்தா புரிந்தும் புரியாமல் படித்தேன். அவர் பழைய காலத்திற்கு தகுந்த மாதிரி எழுதினார். (என் மனைவி கவிதைகளில் பல பரிசுகள் வென்றவர்!)

என்னிடம் இரண்டு வாலும்கள் கற்றதும் பெற்றதும், அதில் நேர் அசை, வெண்பா, தளை - பற்றி மட்டுமே எழுதியுள்ளார் சுஜாதா. மற்றது அவருடைய பெருமையான ஹைக்கூ. (எப்பொழுதும்)

நான் அவரிடம் சொன்னதில், அவர் ஹைக்கூ என்று ஒத்துகொண்டது..

போதையில் படுத்தேன் கவிதைகள் சொன்னேன்
கனவு


(இப்போ பதிவு ஆகி போச்சு )

ஜ்யோவ்ராம் சுந்தர் சொல்கிறார், இபோதெல்லாம் ஹைக்கூ வருவதில்லை, நிறைய பொய்கூ தான் (நன்றி: சுஜாதா) :-( என்று.