என கனவு
சிறகுகள்
பறக்கின்றன
எனக்கு நிஜமாகவே
காதலி
கிடைத்துவிட்டாள்
நடையும் கொடி இடையும்
சில்லென்ற பேச்சும்
கிறங்கடித்தன
முகம் நோக்கி இல்லை இல்லை
கண்ணோடு கண் பார்த்து
பேசுவது அழகு
பாடங்கள் புரியாவிட்டால்
கொஞ்சி கொஞ்சி
சொல்லிகொடுப்பது அழகு
ஒரு முறை காலையோ மாலையோ விஷ்
செய்ய மறந்துவிட்டால் கோபம்
கொள்ளை அழகு
தேவதையே உன்னை தான்
தேடினேன் ஒவ்வொருநாளும்
கிடைத்துவிட்டாய் இப்போது!
(1989 இல் என் இன்னாள் மனைவி பார்த்தவுடன் எழுதியது)
மாயாத ஓணம்
6 hours ago
