Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Monday, March 30, 2009

தமிழ்நாட்டில் பா.ம.க

தமிழ்நாட்டில் பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் ஐந்து - தி.மு.கவுடன் நேரடி மோதல்...., மற்றொண்டு விடுதலை சிறுத்தைகளுடன் மோதல், புதுச்சேரி தவிர. (இது எனது பா.ம.க தேர்தல் குறித்து ஐந்தாவது பதிவு!)

நான்கு எம்.பி. தொகுதிகள் மட்டும், பா.ம.க கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. ஜெயித்தால் கட்சி வளர்க்க காய் நகர்த்தும் விதம், மற்றும் அ.தி.மு.க, ம.தி.மு.க, கம்மூனிஸ்ட் கூட்டணி வோட்டுக்கள் விழும் என்ற தையிரியம்!

இது வரை அவர்கள் பத்து தொகுதிகளில் , சுமார் 40% வோட்டுக்கள் இருக்கும் விதமாக போட்டியிட்டுள்ளனர். நல்ல எதிர்பார்ப்பு!

கிழே எம்.பி. தொகுதிகளும், அவற்றின் உள் அடக்கிய சட்டசபை தொகுதிகளும்...

ஸ்ரீபெரும்புதூர்

1. மதுரவாயல்,
2. அம்பத்தூர்,
3. ஆலந்தூர்,
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி),
5. பல்லாவரம்,
6. தாம்பரம்.

அரக்கோணம் (மீண்டும் பா..)

1. திருத்தணி,
2. அரக்கோணம் (தனி),
3. சோளிங்கர்,
4. காட்பாடி,
5. ராணிப்பேட்டை,
6. ஆர்க்காடு

தர்மபுரி (மீண்டும் பா..)

1. பாலக்கோடு,
2. பெண்ணாகரம்,
3. தர்மபுரி,
4. பாப்பிரெட்டிபட்டி,
5. அரூர் (தனி),
6. மேட்டூர்.

இது பா.ம.க கோட்டை. சுமார் 30% வோட்டுக்கள் வன்னியர்களின் கையில்.


திருவண்ணாமலை

1. ஜோலார்பேட்டை, (முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதி)
2. திருப்பத்தூர்,
3. செங்கம் (தனி),
4. திருவண்ணாமலை,
5. கீழ் பெண்ணாத்தூர்,
6. கலசப்பாக்கம்.



கள்ளக்குறிச்சி

1. ரிஷிவந்தியம்,
2. சங்கராபுரம்,
3. கள்ளக்குறிச்சி (தனி),
4. கங்கவல்லி (தனி),
5. ஆத்தூர் (தனி),
6. ஏற்காடு (தனி-ப.கு).


இது எம்.ஜி.ஆர் கோட்டை. ஆதி திராவிட மக்கள் அதிகம் இருக்கும் பகுதி. சுமார் 40% வோட்டுக்கள் அ.தி.மு.க வசம். தே.மு.தி.க, கொஞ்சம் ஜாஸ்தி வோட்டுக்கள் வாங்கி ஏரியா.


சிதம்பரம்(தனி) (மீண்டும் பா..)

1. குன்னம்,
2. அரியலூர்,
3. ஜெயங்கொண்டம்,
4. புவனகிரி,
5. சிதம்பரம்,
6. காட்டுமன்னார்கோயில் (தனி).


புதுச்சேரி (மீண்டும் பா.ம.க) காங்கிரஸ் நேரடி மோதல்

யாராவது, தமிழ்நாட்டில் மேலே குறிப்பிடப்பட்ட சட்டசபை தொகுதிகள் பற்றி கட்சி வாரியாக பெற்ற வோட்டுக்களை கமன்ட்சில் போட முடியமா?

Friday, October 17, 2008

தமிழ்நாடு ஸ்ரீலங்கா ஒரு சர்வே


இந்த சர்வே படித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

யாரையும் திட்டியோ, மனம் புண்படுத்தவோ இதை எழுதவில்லை.

எல்லோரும் வாழ்க வளமுடன்.

Friday, September 12, 2008

ஒரு ருபாய் அரிசி தமிழ்நாடு

கருணாநிதி தமிழ்நாடு ஏழைகளுக்கு ஒரு ருபாய் அரிசி மாதம் இருபது கிலோ கொடுக்க போகிறார் என்று அறிவிப்பு செய்துள்ளார், செப்டம்பர் பதினைந்து முதல். நல்ல திட்டம். வரவேற்கிறேன். ஒரு நாள் வேலை செய்தால் ஒரு மாத உணவு. நல்லது. ஏசி ரூமில் உட்கார்ந்த நாம் கும்மியடிப்போம், தவறென்று சொல்லி.

ஆனால் விவசாயி நிலைமை? (இதற்கும் ஆர்காடாருக்கும் என்ன சம்பந்தம்)

அதனால் நான் ஒரு திட்டம் போடுகிறேன். நண்பர்களும் செர்ந்துகொள்ளேலாம்.

ஒரு கோடி ரூபாய்க்கு எவ்வள்வு ஏக்கர் நிலம் கிடைக்கும், அரிசி சாகுபடி செய்ய?

எவ்வளவு போகம் எடுக்கலாம்?

எவ்வளவு வருமானம் வரும்?

என் அருமை நண்பர் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு சேலம் ராசிபுரம் பகுதியில் நல்ல அரிசி சுமார் பதிமூன்று முதல் பதினைந்து வரை கிலோவிற்கு எடுக்கிறார். பணம் வாங்கியவுடன் கந்து வட்டிகாரர்கள் வந்து பணம் பிடுங்கும் கட்சி மிகவும் கொடியது என்கிறார்.

அவரும் நானும் ஒரு கோடி முதலீடு செய்து (ரிஸ்க் காபிடல்), அரிசி சாகுபடி செய்து, வருமானம் பார்க்கலாம் என்று இருக்கிறோம். விவரம் தெரிந்த நீங்கள் சொல்லுங்கள்.

டெக்கான் கோபிநாத் மற்றும் சிலர் அரிசி சாகுபடி செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே அவர் நோர்மல் விட ஏழு பங்கு அதிகம் லாபம் நிலத்தில் பார்த்தவர், இயற்கை உரம் மூலமாக. நான் அரசாங்கத்தில் வேலை பார்த்த பொது விவசாயிகள் சொன்னது, பீயை எவனாவது போட்டு அரிசி வளப்பானா என்று. திருந்தாத ஜென்மங்கள். இப்போ சாண்ட கிளராவில் (கலிபோர்னியா) மீதேன் வாயு எடுக்கிறார்கள் மலத்தில் இருந்து. அதை வைத்து ஜெனரடோர் ஒட்டி கரண்ட் கொடுக்குறார்கள்.

சுமார் ஆயிரம் கோடி ருபாய் மாணியம் வழங்கும் அரசு, வியேட்நாம் போலே ஏன் செய்யவில்லை?
(அரசே விவசாயம் ஒரு நிறுவனம் மூலம் செய்வது, லாபத்தின் குறிகொளோடு).

கையுட்டு. லஞ்சம்.

தொடர்புடைய பதிவுகள்...

ஜோதிபாரதி, சிங்கப்பூர்
ஜ்யோவ்ராம் சுந்தர், சென்னை